Sunday, December 31, 2023

                    HAPPY NEW YEAR
                                 TO 
                                YOU
                                   &
                    YOUR FAMILY 💐💐💐.

                                 By
                        Dr.R.Rengasamy.


படித்ததில் பிடித்த கவிதை

அவர்கள் 
அப்படித்தான் 

தேவை தீர்ந்ததும்
அழுக்கு ஆடைகளைக் களைவதுபோல 
உன்னையும் 
களைந்து செல்ல 
அவர்களுக்கு 
அப்படியொன்றும் சிரமமாய் இருக்காது 

உன் இடத்திற்கு இன்னொருவரை கொண்டு வருவதும்
உனக்கானப் பிரியங்களை பிறிதொருவருக்கு பங்கிடுவதும்
உனக்கேயான உரிமைகளை உனக்கில்லையென மறுப்பதும்
அவர்களால் 
இயன்ற காரியம்தான்

அவர்கள் 
அப்படித்தான்
எல்லாவற்றுக்கும் 
ஒரு மாற்றீடு 
வைத்தே இருக்கிறார்கள்

பின்னும்
நீதான் 
உடைந்த கண்ணாடிச்சில்லுகளைப் சேகரித்துக்கொண்டிருக்கிறாய்
எப்படியும் ஒட்ட வைத்திடலாமென 

வேண்டாம் விடு
உடைத்து உடைத்து ஒட்ட வைத்திட்டப் பொருள்களால்
வீடே அலங்கோலமாகி விட்டது
பார்

-ரிஸ்கா முக்தார்-

Tuesday, December 26, 2023

காயங்களையாவது குறைக்கலாம்...

நீங்கள் என்னை இறுகப்பற்ற வேண்டாம்

இலகுவாகவே பற்றுங்கள்
உண்மையாக பற்றுங்கள்
உணர்வால் பற்றுங்கள்
சுயமரியாதைவுடன் பற்றுங்கள்
சுதந்திரமாய் பற்றுங்கள்

 பிடித்தால் சேர்ந்து பயணிக்கலாம் 

விருப்பம் இல்லையெனில்
பிரிந்து நடக்கலாம் 
எனவே 

இலகுவாய் பற்றுங்கள் என்னை.

பூமி.சாமி.





Tuesday, December 12, 2023

எனக்கு தெரிந்ததைதான் நான் செய்ய முடியும்

உன்னை வெறுக்கத்தான் நினைக்கிறேன்
நீ செய்த நன்மையெல்லாம்
கண்முன் வந்து போகிறது

உன்னிடம் அன்பாய் இருக்க நினைக்கிறேன்
நீ செய்த தீமையெல்லாம்
நினைவில் வந்து போகிறது

என்ன செய்வது என்று
தெரியாமல்
உன்னிடம் அன்பாகவே இருந்து விடுகிறேன்

ஏனென்றால்
எனக்கு சரியாய் செய்ய தெரிந்தது
அது மட்டும்தான்.

பூமி.சாமி.




Monday, December 11, 2023

எல்லாவற்றிலும்
கணக்கு பார்த்து பார்த்து
வாழ்தலில் பூஜ்ஜியம்
ஆகிக் கொண்டிருக்கிறோம் 
நாம்.

வாழ்வதற்கு

பிழைப்பதற்கும் தான்
விவரம், அறிவு 
அனுபவம் எல்லாம்
தேவையாய் இருக்கிறது 

வாழ்வதற்கு
வெகுளித்தனம் ஒன்றே
போதுமாய் இருக்கிறது.



Tuesday, December 5, 2023

மனம்

மனதில் ஆழமாய்
விழுந்த விதை 
இன்று
ஆலமாய் வளர்ந்து
நிற்கிறது

விழுதுகளை ஊன்றி
பெரும் விருச்சமாய்
மனதை விழுங்கி நிற்கிறது 

மரத்தையும் தூக்கி
எறிய முடியவில்லை
மனதையும் தூக்கி எறிய முடியவில்லை.

பூமி.சாமி.




வயது ஆக ஆக
மரம் போல் ஓர் இடத்தில்
வேர் கொள்ள விரும்புகிறது மனசு அதுவும் சொந்த மண்ணாக
இருந்தால் சுகம்.

பூமி.சாமி.

Sunday, December 3, 2023

யாசகம்
கேட்பது
அதிகம் ஆகியிருக்கிறது
உணவுக்கல்ல
உணர்வுக்கு.

பூமி.சாமி.

வார்த்தைகளில் கவனம் தேவை

ஒருவனை உற்சாகப்படுத்த
ஒரு நூறு வார்த்தைகள் தேவைப்படலாம்
ஆனால்
அவனை காயப்படுத்த ஒரு வார்த்தை
போதுமானது.

பூமி.சாமி

Monday, November 27, 2023

படித்ததில் பிடித்த கவிதை

எல்லா வகுப்பறையிலும்
நான் நானென்று முந்திக் கொண்டு வரும் ஒரு குழந்தை இருக்கிறாள்.

அவளுடைய துருதுருப்பில்
ஒரு வண்டின் ரீங்காரம் இருக்கிறது.

கேட்டதை விட கூடுதலாக ஒரு சாக்பீஸ் எடுத்து வருகிறாள்.

வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழையும் போது வருகைப் பதிவேட்டைத் தவறாமல் ஒப்படைக்கிறாள்.

வேறு வேலையில் இருக்கும் ஆசிரியரிடம்
'இது உங்க பீரியட்' என்று நினைவூட்டுகிறாள்.

ஆசிரியரின் பீரோவில் 
எந்தப் பொருள் எங்கிருக்கும் என்பது 
அவளுக்கு அத்துபடி.

தேர்வு கால அட்டவணயை மற்றவர்கள் அழிக்காமல் பார்த்துக் கொள்கிறாள்.

ஆசிரியருக்குச் சாதகமாகவும்
சக மாணவர்களுக்குப் பாதகமில்லாமலும் நடக்கும் அவள் மீது 
எந்தப் புகாரும் இல்லை.

ஒருநாள் கூட
அவள் ஒற்றை ஜடையுடன் வந்ததில்லை.

அவள் வராத நாட்களில்
கரும்பலகையை யார் துடைப்பது என்ற கேள்வி எழுகிறது.

வீட்டிலிருந்தபடியே அவள் வகுப்பறையில் நடமாடிக் கொண்டிருக்கிறாள்.

அந்த சமயங்களில் அவளோடே திரியும்
அவள் வகுப்புத்தோழி
அவள் போல் 
நல்ல பெயரெடுக்க முயற்சிக்கிறாள்.

- மா. காளிதாஸ்

Saturday, November 25, 2023

கிடைத்திருப்பதை நினைத்து 
திருப்தி கொள்கிறது அறிவு

கிடைக்காமல் போனதை நினைத்து துன்பத்தில் உழல்கிறது மனது

இன்று உனக்கு கிடைத்திருப்பது பலருக்கு கிடைக்கவில்லை என்கிறது அறிவு 

சிலருக்கு கிடைத்திருப்பது 
எனக்கு கிடைக்கவில்லை என்கிறது மனது

நம்பிக்கை கயிற்றால்
நம்மை  முன்னிழுத்து செல்கிறது அறிவு

அவநம்பிக்கை சங்கிலியால் நம் காலை கட்டி பிணைத்திருக்கிறது மனசு

சில நேரம் அறிவின் பிடியில்
பல நேரம் மனதில் பிடியில்

கிடைத்ததில் மகிழ்ந்திரு கிடைக்காததற்காக உழைத்திடு.

-பூமி.சாமி.

Tuesday, November 14, 2023

பலர் வார்த்தைகளால்
அன்பை பொழிகின்றனர்

சிலர் அமைதியாக
தன் சிறு சிறு செயல்களால்
அன்பு செய்கின்றனர்

ஆனால் முதல் வகை
ஆட்களைத் தான்
இவ்வுலகு நம்புகிறது.

பூமி.சாமி.


Sunday, November 12, 2023

உன்னைப் புறக்கணித்துவிட்டதாக 
ஏன் கதறுகிறாய்.....? 
ஓஷோ.

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் 
உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன்மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து, நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்துக் கவலை கொள்கிறாய்.

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளே அன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில், நீ எத்தனை பேரைப் பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணிப் பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாகச் சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. 

அது போல் இயல்பாய் கடமையைச் செய்.

ஓஷோ....

Saturday, November 11, 2023

அனைவருக்கும்
இனிய தீப ஒளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.💐💐💐💥🧨🪔🪔🪔

பேராசிரியர். இரா.ரெங்கசாமி.

நன்றி இல்லாதவர்களால்
நாம் ஏன் நன்மை செய்வதை
விடவேண்டும்
அவர்கள் அவர்களாக இருக்கட்டும்
நாம் நாமாக இருப்போம்.

நன்றி.

பூமி.சாமி.


Thursday, November 9, 2023

ஒரு பொருளின்
தேவை குறையும்போது 
முதலில்
ஒதுக்கி ஓரமாய்
வைக்கிறோம்
தேவை முடிந்தபின் 
தூக்கி தூர எறிகிறோம்

இப்படித்தான்
மனிதர்களையும்
கையாள்கிறமோ
என்று
யோசிக்க நினைக்கிறது.

பூமி.சாமி.





Wednesday, November 8, 2023

எளிதில்
கிடைக்கும்
எதற்கும்
மதிப்பு
குறைவுதான்,

உன்
அன்பு உட்பட.

பூமி.சாமி.

Tuesday, November 7, 2023

மலரோடு ஒரு 
மௌன உரையாடல்
மனதை மணமாக்குகிறது.


ஆனால் மனித உரையாடல்
மனதை ரண............

பூமி.சாமி.


Wednesday, November 1, 2023

குடையின்
கீழ் நிற்பது
கொடுமை
மழை பெய்கையில்.

Tuesday, October 31, 2023

படித்ததில் பிடித்த கவிதை

பேரன்பெல்லாம் 
வேண்டாம்
அவ்வளவு அன்பை என்னால் கையாள முடிவதில்லை 
அவ்வளவு அன்பை என்னால்  திருப்பிச்செலுத்திட இயலவில்லை

புழங்கியது போக 
மிச்ச அன்பெல்லாம்
பரண் மேல் கிடந்து
பாழாய்ப்போகும் சோகமெல்லாம் 
பாவம்
இந்த பேரன்பில்தான் 
நிகழ்கிறது 
 
பின்னும்
கொடுப்பதாயின் 
மனமுவந்து சிறிய அன்பினையேத் தாருங்கள்
எனக்கு 

கைக்கு அடக்கமாய் 
கையாள எளிதாய்
இன்னும் 
நான் திருப்பி செலுத்திட ஏதுவாய் 
இருக்கட்டும்
அவை

பேரன்பின் 
பெரும் மூச்சு முட்டல்களின்றி
ஒரு சிறிய புன்னகையில் 
ஒரு சிறிய நலன் விசாரிப்பில்
ஒரு சிறிய தலைகோதலில்
தொடரட்டும் 
அவை

-ரிஸ்கா முக்தார்-

Saturday, October 28, 2023

படித்ததில் பிடித்தது -Pareto Principle

*இத்தாலிய மேதை* *pareto* *என்பவரின்* *தத்துவம்.*  அவரது தத்துவம் 80/20 என்ற பெயரிலும் விளக்கப் படுகிறது.

   பொதுவாக 80% விளைவுகளுக்கு (result) 20% செயல்களே காரணம் (cause) ஆக இருக்கிறது .

  அதாவது நீங்கள் 20%உழைப்பை கொடுத்து 80% பயன்களை பெறலாம்.        இப்படித்  தான் புத்திசாலிகள் செயல் படுகிறார்கள்.

   உலகில் உள்ள 80% செல்வம் 20%மக்களிடம் தான் இருக்கிறது.80% மக்களி டம் 20% செல்வமே இருக்கிறது.

  80%மக்களின் உழைப்பை 20%மக்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் செய்யும் வேலையில் 20%வேலையே 80% பலனை தருகிறது.

  நமது கடையில் 20% நேரத்தில் தான்  80%வியாபாரம் நடக்கிறது. மீதி 80% நேரத்தில் வெறும் 20% வியாபாரமே நடை பெறுகிறது.

 சாதாரணமாய் மக்கள் 20% நேரம் நல்ல வியாபாரம் நடக்கிறது என்று அதில் கவனம் செலுத்துவதில்லை.

  80% வியாபாரம் இல்லாத நேரத்தில் மாங்கு மாங்கு என்று உழைப்பார்கள். இது தவறு.

  உங்கள் வாழ்க்கையில் 20% நேரம் தான் முக்கியமானது. அதுவே உங்களது 80% வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

   அந்த 20% நேரத்தை சிறப்பாக பயன்படுத்தினால் 80%வாழ்கை மிகவும் அற்புத மாக இருக்கும்.

   பொதுவாக மக்களின் மனநிலை அது தான் 20% நல்லா இருக்கே .அதுல ஏன் மேற் கொண்டு கவனம் செலுத்தணும்.

  சிறப்பாக இல்லாத 80% ஐ தான் சரிபண்ணனும் என்று அதில் தான் கவனம் செலுத்துவார்கள்.இதுவே மனித இயல்பு.

   80%ஐ சரி செய்வதற்காக கடுமையாக உழைப்பார்கள். அதனால் நமக்கு 20% பலனே கிடைக்கப் போகிறது என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

   இந்த கடின உழைப்பு நம்மை களைப்படைய செய்து விடும். அதனால் 80% பலன் தரக்கூடிய மீதி  20% இல் நாம் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

  ஸ்மார்ட் ஒர்க் என்பது இந்த    20%ஐ நன்கு கவனமாக முழு ஈடுபாட்டுடன் உழைத்து 80% பலனை அதிகப் படுத்துவதே.

  கடின உழைப்பில் (hard work ) ஈடுபட்டு 20% பலனை பெறுவது நல்லதா. அல்லது திறமையையாக  செயல்பட்டு (smart work ) 80% பலனை பெறுவது நல்லதா என்று சிந்தித்து பாருங்கள்.

  கடின உழைப்பு கமலையில் தண்ணீர் இறைப்பது போன்றது. ஸ்மார்ட் ஒர்க் என்பது மோட்டாரை தட்டி விட்டு தண்ணீர் பாயும்வரை புத்தகம் படிப்பதோ அல்லது வேறு ஏதேனும் வேளைகளில் ஈடுபடுவதோ என்று எளிதாக இருத்தல்.

  சாலைகளில் பீக் டைம் என்று சொல்கிற காலை,மாலை என்று ஒரு 20% நேரத்தில் தான் அத்தனை வாகனங்களும் செல்லும். பஸ்களுக்கு அப்போது தான் 80% வருமானம்.

  T.V சானல்களில் primetime என்று இதை சொல்வார்கள். இரவு7முதல்10 மணிவரை . அப்போது தான் சிறந்த தொடர்களை ஒளி பரப்புவார்கள். அதிக விளம்பரங்கள். அதற்கு அதிக கட்டணம் என்று அள்ளி விடுவார்கள்.

  எல்லா வற்றிலும் 80/20 தத்துவம் சரியாக செயல்படுகிறது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட்ட ஒன்று .

இந்த தத்துவத்தை உங்கள் வாழ்வில் அனைத்து துறைகளிலும் பயன் படுத்தி மகிழ்வாக இருங்கள். இதுவே ஸ்மார்ட்டா வாழ்றது.

  உங்கள் வாழ்வின் 20% prime time எது என்று கண்டு பிடியுங்கள். அதில் கூடுத ல் கவனம் செலுத்தி  80% பலனை பெறுங்கள்.

   முக்கியத்துவம் இல்லாத 80% செயல்களில் அதிகம் கவனம் செலுத்தி உங்கள் உழைப்பை வீண் செய்து சோர்வடையாதீர்கள்.

நாம் எப்போதும் 20% ஐ நிராகரித்து விட்டு முக்கியத்துவம் இல்லாத 80%இல் அதிக கவனம் செலுத்துகிறோம் .

   அதாவது நாம பிடுங்குற ஆணி எல்லாமே தேவையில்லாதது தான்.இது அண்ண ன் வடிவேலு தத்துவம்.

   நாம் 100 வருடம் வாழ்ந்தால் அதில் 80 வருடம் தூங்குவது , குளிப்பது ,     சாப்பிடுவது, பேசுவது என்று கழிகிறது.

  20 வருடம் தான் முக்கியமான செயல்களில் ஈடுபடுகிறோம். அதிலும் 80% அதாவது 16 வருடம் கவனம் இல்லாமல் அலட்சியமாகவும் அனிச்சையாகவும் செயல் செய்கிறோம்.

 மீதி நாலு வருடம் தான் நிஜமாகவே வேலை செய்கிறோம். இந்த நாலு வருடத் தை ஒவ்வொரு கணமும் கவனமுடன் முழுமையாக ஈடுபட்டால் போதும்.உங்கள் கர்மா அனைத்தும் காணாமல் போய் விடும்.

 இந்த கணம் அந்த நாலு வருடத்தில் ஒரு கணமாக இருக்கலாம்.எனவே ஒரு கணத்தையும்  வேஸ்ட் பண்ணாதீர்கள்.

படித்ததில் பிடித்தது

*வருமானம்* *இல்லா* *வாழ்க்கையை* *விட தன்மானம்* *இல்லா* *வாழ்க்கையே* *அவமானம்.* 
                 உங்களுக்கென ஒரு தன்மானம் எப்போதும் இருக்க வேண்டும்.

அது மற்றவர்களால் “திமிர்” என பார்க்கப்பட்டாலும் அந்த தன்மானத்தில் இருந்து எப்போதும் விலக்காதீர். 

வறுமை உங்களை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான மரியாதையை தேடி தரும்.

தன் மீது குப்பைகள் விழுவதை கடலால் தடுக்க முடியாது.

ஆனால். அவைகளை, தன் அலையின் சக்தியைக்கொண்டு, தூக்கி தூர கரையில் வீச முடியும்.

அதுபோலத்தான். நம்மீது விழுகின்ற, இழிசொல், பழிச் சொல் இவைகளை நம்மால் தடுக்க முடியாது.

ஆனால், அவைகளை, அலட்சியம் படுத்துவதின் மூலம், தூக்கி தூர வீச முடியும்.

எந்த ஒரு மனிதனும் தனக்குப் பிடித்த ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேசாத வரை அவனது கவலைகளும் கஷ்டங்களும் எந்தக் காலத்திலும் முடிவுக்கு வருவதில்லை.

பிடிவாதம் அதிகமானால் தன்னைச் சேர்ந்தவர்களை விட்டுத் தொடர்ச்சியாகப் பிரிந்து விட வேண்டியது தான்.

உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இடத்தில் சிரித்தாலும் அழுதாலும் ஒன்று தான்.

சோறு பொங்கும் போது தீயைக் கம்மிப் பண்ணுங்க. மனசு பொங்கும் போது வார்த்தைகளைக் கம்மிப் பண்ணுங்க.

அதுதான் வாழ்க்கைக்கு  அழகு.

படித்ததில் பிடித்தது

*வருமானம்* *இல்லா* *வாழ்க்கையை* *விட தன்மானம்* *இல்லா* *வாழ்க்கையே* *அவமானம்.* 
                 உங்களுக்கென ஒரு தன்மானம் எப்போதும் இருக்க வேண்டும்.

அது மற்றவர்களால் “திமிர்” என பார்க்கப்பட்டாலும் அந்த தன்மானத்தில் இருந்து எப்போதும் விலக்காதீர். 

வறுமை உங்களை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான மரியாதையை தேடி தரும்.

தன் மீது குப்பைகள் விழுவதை கடலால் தடுக்க முடியாது.

ஆனால். அவைகளை, தன் அலையின் சக்தியைக்கொண்டு, தூக்கி தூர கரையில் வீச முடியும்.

அதுபோலத்தான். நம்மீது விழுகின்ற, இழிசொல், பழிச் சொல் இவைகளை நம்மால் தடுக்க முடியாது.

ஆனால், அவைகளை, அலட்சியம் படுத்துவதின் மூலம், தூக்கி தூர வீச முடியும்.

எந்த ஒரு மனிதனும் தனக்குப் பிடித்த ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேசாத வரை அவனது கவலைகளும் கஷ்டங்களும் எந்தக் காலத்திலும் முடிவுக்கு வருவதில்லை.

பிடிவாதம் அதிகமானால் தன்னைச் சேர்ந்தவர்களை விட்டுத் தொடர்ச்சியாகப் பிரிந்து விட வேண்டியது தான்.

உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இடத்தில் சிரித்தாலும் அழுதாலும் ஒன்று தான்.

சோறு பொங்கும் போது தீயைக் கம்மிப் பண்ணுங்க. மனசு பொங்கும் போது வார்த்தைகளைக் கம்மிப் பண்ணுங்க.

அதுதான் வாழ்க்கைக்கு  அழகு.

Thursday, October 26, 2023

நம் வகுப்பறை

எவ்வளவு பாடங்களைக் கேட்டிருக்கும் எவ்வளவு பேரை பார்த்திருக்கும் எவ்வளவு அறிவுரைகள் கேட்டிருக்கும் எவ்வளவு பரீட்சைகளை பார்த்திருக்கும் எவ்வளவு கதைகளை கேட்டிருக்கும்
எவ்வளவு பேரின் வாழ்வை மாற்றியிருக்கும்

எவ்வளவு உரையாடல்களை உணர்ந்திருக்கும்
 எவ்வளவு சோகங்களை சுமந்திருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியை சந்தித்திருக்கும்

எவ்வளவு மகிழ்ச்சி சோகம் நம்பிக்கை
நட்பு  நன்றி மறத்தல்  நம்பிக்கை துரோகம்

 இவ்வளவு அறிந்த பின்னும்
 அனுபவம் பெற்ற பின்னும் 
இன்னும் அமைதியாகதான் இருக்கிறது 

" நம் வகுப்பறை".

பூமி.சாமி.

Wednesday, October 25, 2023

அடுத்தவரை அலட்சியம்
செய்து பார்ப்பதில் அலாதி பிரியம்
சிலருக்கு.

பூமி.சாமி‌

Monday, October 23, 2023

பேச விருப்பம் இருந்தால்
பேசுங்கள்,
நீங்கள் பேசுவது 
தாமரை இலையில்
தண்ணீர் போல்
இருக்கிறது.

பூமி.சாமி.

Sunday, October 22, 2023

எங்கள் ஊர்

உலகில் எங்கு சென்றாலும்
என் கரங்களை மட்டும் விடுவதே இல்லை கண்ணந்தங்குடி 

உன்னில் தான் பிறந்தேன் 
உன்னால் தான் வளர்ந்தேன் 
உன்னில் தான் மடியப் போகிறேன் 

எங்கு வேண்டுமானாலும் செல் 
எங்கு வேண்டுமானாலும் வாழ்
என்னை விட்டு நீங்காதே என்கிறது 
 கண்ணந்தங்குடி

எங்கு சென்றாலும் கண்ணை அயராமல் என்னை காக்கிறது கண்ணந்தங்குடி

எனக்கு வாழ கற்றுக் கொடுத்தது வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் வேறுபாட்டை கற்றுக் கொடுத்தது 
கண்ணந்தங்குடி

 கண்ணனுக்கு கண்ணாய்
உயிருக்கு உயிராய் 
என்னை காத்து நிற்கிறது கண்ணந்தங்குடி

 நான் ஒரு பொம்மலாட்டக் கலைஞன் என்னை கட்டுப்படுத்தும் கயிறு 
 கண்ணந்தங்குடி

 பழகுவதற்கும் 
பாசம் வைப்பதற்கு 
பற்றற்று இருப்பதற்கும் 
கற்றுக் கொடுத்தது  கண்ணந்தங்குடி

அது ஒரு கலாச்சார கடல்
அன்பின் பெருங்கூட்டம் 
அக்கறையில் தாய் 

மாமன் மச்சான் பங்காளி அத்தை அக்கா தங்கை அண்ணன் என ஒரு பாச பெருங்கடல்

 நாங்கள் வாழ்வதோ உலகெங்கும் ஆனால் எங்கள் உள்ளத்தில் என்றென்றும் உறங்குவது எங்கள் ஊர் 

ஊரை சுற்றி வந்தால் உலகை சுற்றிய திருப்தி 

அது பசுமை போர்த்திய நெற்குன்று
 நீரால் நிரம்பி வழியும் நீலக்கடல்

 தப்பு செய்த போது தட்டி வைத்தது சோகமாய் இருந்த போது தோள் கொடுத்தது 
சாதிக்க துணிகையில் நம்பிக்கை தந்தது
கையறு நிலையில் இருந்த போது கை கொடுத்தது

 கல்வியை எல்லோருக்கும் கண்ணாய் கொடுத்தது 
அதுதான் எங்களுக்கு உலகை சுற்றிவர கருவியாக அமைந்தது 

ஒற்றுமையாய் இருக்க மலையேறி அம்மனை கொடுத்தது
நாங்கள் ஒன்று கூட திருவிழாவை வைத்தது 

ஒருவர் கூட பசியோடு உறங்க விட்டதில்லை  கண்ணந்தங்குடி
எந்த வீட்டை தட்டினாலும் சோறும் நீரும் கிடைக்கும் 

மனிதன் மட்டுமல்ல எந்த உயிரும் பசியோடு உறங்க விட்டதில்லை எங்கள் ஊர் 

நான் கவலைப்படும்போதெல்லாம் என்னை நினைவுகளாலும் கனவுகளாலும் அணைத்துக் கொள்ளும் 
கண்ணந்தங்குடி

 என்னை எப்பொழுதும் தனி மரமாய் விட்டதில்லை எங்கள் ஊர்

 ஒவ்வொரு முறை செல்லும் போதும் என்னை பிடித்து வைத்துக் கொள்கிறது
 கண்ணந்தங்குடி
ஆனால் பிழைப்புத்தான் விடமாட்டேன்
என்கிறது.

பூமி.சாமி.


Wednesday, October 18, 2023

ஒரு மாணவி
தனது பட்டப்படிப்பு சான்றிதழை பெறுவதற்காக கல்லூரிக்கு வருகிறார் 
அதை அலுவலத்தில் பெறுகிறார்
அப்பொழுது அங்கு அவருக்கு பாடம் நடத்திய ஒரு  பேராசிரியரும் அங்கு இருக்கிறார்
அந்த மாணவி அவர் அங்கு இருப்பது தெரிந்தும்
கண்டுக் கொள்ளாமல்
சான்றிதழை பெற்று செல்கிறார்.

இதுதான் இன்றைய நிலை.
மிகுந்த வருத்தத்திற்குரியது.



Sunday, October 15, 2023

காலம் தன் மறதி
கரங்களால் உன்
நினைவுகளை 
என்னிடமிருந்து
திருட முயல்கிறது 

தினம் தினம்
அதை எடுத்து
துடைத்து
நினைத்து
மகிழ்ந்து
வேறு வேறு இடத்தில் 
மறைத்து வைக்கிறேன் நான்.

-பூமி.சாமி.

Tuesday, October 10, 2023

அன்பு சொல் அல்ல, செயல்

இந்த பூமி
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது 

இந்த மலர் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த மரம் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த மழை 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த தென்றல் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த சூரியன் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

ஆனால் நாம் 
மட்டும் தான்.................................

-பூமி.சாமி.




Sunday, October 1, 2023

உன்னை முடித்துக் கொள்வது தீர்வல்ல, எதுவும் உன்னால் முடியும் என்பதே தீர்வு

ஆயிரம் உயிரனுவை முந்தி ஜெயிக்க முடிந்தது உன்னால்

கருவில் இருந்து உயிராய் துளிர்க்க முடிந்தது உன்னால் 

மழலையில் மீண்டும் மீண்டும் விழுந்த போதும் நடக்க முடிந்தது உன்னால்

 ஒன்றும் அறியாமல் உலகிற்கு வந்த உன்னால் படிக்க எழுத முடிகிறது இந்நாள்

பார்க்க முடிகிறது
கேட்க முடிகிறது
உணர முடிகிறது உன்னால்

 எல்லாவற்றிற்கும் மேலாக லட்சம் உயிரினங்களில் சிந்திக்க சிரிக்க முடிகிறது உன்னால் 

இவ்வளவு எல்லாம் முடிகிற உன்னால் எப்போரட்டங்களையும் கடக்க முடியும் தானே 

நேற்று மலையாய் தெரிந்தது 
இன்று மடுவாய் தெரிகிறது 
இன்று மலையாய் தெரிவது
நாளை மடுவாய் ஆகும் 

எனவே தைரியமாய் எதிர்கொள் உன்னால் முடியும் 
இல்லையெனில் 
கடந்து செல்.

-பூமி.சாமி.

Tuesday, September 12, 2023

பந்து நல்ல பந்துதான்...

பந்து திரும்பும் வேகம்
சுவரின் தரத்தை பொறுத்தது
அன்பும் அப்படித்தான்...

சில பந்து திரும்பாமலும்
போகலாம் 
மெய்நிகர் சுவராய்
இருக்கையில்.

பூமி.சாமி.

Monday, September 11, 2023

முதலாளித்துவம்

ஒரு துளியளவு தேன் ருசிக்கையில்
ஓராயிரம் மலர்களும்
சில நூறு தேனீக்களின் உழைப்பும்
கண்முன் வந்து போகின்றன.



பூமி.சாமி.

Saturday, September 9, 2023

வேஷம் வெளிப்பட

மழை பெய்து தான்
நரியின் சாயம் வெளுத்து போக
வேண்டும் என்று அவசியம் இல்லை
நரியை கொஞ்சம் கோபப்படுத்தி பாருங்கள்
வேஷம் வெளுப்பதோடு இல்லாமல்
முகமூடியும் கழண்டு போகும்.

பூமி.சாமி.


புகைப்படங்கள்

பகிரத் தான் எடுத்தேன்
பகிர மனமில்லாமல்
வைத்துக் கொள்கிறேன்
கண்ணுப்படும் என்று.

பூமி.சாமி.

Friday, September 8, 2023

உன் நினைவுகளை
மனதிலிருந்து 
அழிக்க முயன்று
அழிந்து போனது
அழிரப்பர்.

பூமி.சாமி.

Thursday, September 7, 2023

ஒரு சிந்தனை
இரண்டு மூன்று பாடல்கள்
ஒரு கதை
நிறைய புன்னகை 
ஒரு நகைச்சுவை
இயற்கை தரிசனம் 
பல நன்றிகள்
ஒரு பாராட்டு 
முடிந்தால் ஒரு உதவி
இவை இல்லாமல்
நகரும் நாள்
வாழப்படாத நாள்.


பூமி.சாமி.

Monday, September 4, 2023

ஆசிரியர் தின வாழ்த்துகள்

சிலைகள் உயிர்பெறுகையில்
உளிகளை மறக்கின்றன.

பூமி.சாமி‌

Wednesday, August 23, 2023

புகைப்படங்கள்

கல்யாணமா 100 புகைப்படங்கள் திருவிழாவா 50 புகைப்படங்கள்
கல்லூரி விழாவா 20 புகைப்படங்கள் காதணி விழாவா 50 புகைப்படங்கள் இப்படி எதையும் ரசிக்க முடியாமல் புகைப்படங்களாக புகைந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை

இப்படி நினைவுகள் மனப்படங்களாக மனப்பாடமாகமல்
புகைப்படங்களால் நிறைகிறது
வாழ்க்கை

வாழ்வில் ஓடி ஓரிடத்தில் நிற்கையில் வாழ்வை அசை போட மனப்படங்கள் தான் வேண்டுமே தவிர
புகைப்படங்கள் அல்ல புரிந்து கொள்ளுங்கள் புண்ணியவான்களே.


பூமி.சாமி.

காலக்கொடுமை

முல்லை கொடிக்கு 
முட்டாளாய்தான் தெரிகிறான்
பாரி.

பூமி.சாமி.

Saturday, August 19, 2023

அவ்வளவுதான் நம் அக்கறை

யோசித்து யோசித்து
'எதுக்கு நமக்கு இந்த தேவையில்லாத வேலை ' என்று 
பிறரிடம் சொல்லாமலேயே வைத்து கொள்கிறோம் 
பிறருக்கான அறிவுரைகளை.

-பூமி.சாமி.


Tuesday, August 8, 2023

எதிர்பார்ப்பு

தேன்த்துளியளவு கிடைக்கும் இடத்தில்
வானளவு எதிர்ப்பை சுமந்து 
சிறகொடிதந்து அலையும் சின்ன வண்ணத்துப்பூச்சி நான்.

-பூமி.சாமி.

Friday, August 4, 2023

சக மனிதனிடம்
அக்கறையை காட்ட
மாயா ஜால மந்திர வார்த்தைகள்
தேவையில்லை

"எப்படி இருக்கீங்க"
"சாப்பிட்டீங்களா"
என்ற சர்வ சாதாரண வார்த்தைகள்
போதும்.

பூமி.சாமி.

Saturday, July 29, 2023

அண்ணாந்து பார்க்கையில்
அன்மை மனிதனைவிட
அருகில் வந்து அமருகிறது
ஆகாயம் அன்யோன்யமாக.

- பூமி.சாமி.

Thursday, July 27, 2023

அன்பு எனும் முதலீடு

சிலரிடம் இருந்து வட்டியுடன் வருகிறது
சிலரிடம் கொடுத்தது வருகிறது
சிலரிடமிருந்து கொஞ்சமேனும்
வருகிறது
சிலரிடம் முதலீட்டுக்கே மோசமாய் முடிகிறது.

-சாமி.

Friday, July 21, 2023

தினமும்

அதே பாதை
அதே பயணம்
அதே முகங்கள்
அதே அறிவு
அதே மனப்பான்மை
அதே உணவு
அதே உணர்வு
நாட்கள் தான் புதிது புதிதாய்
நாம் அப்படியே
காலார நடப்பதற்கு
கண்ணுக்கெட்டிய தூரம்
வாய்ப்பு இருப்பினும்
செக்கு மாடாய் நாம்.

பூமி.சாமி.

Sunday, July 16, 2023

பல பத்திகளை அனுப்பி 
ஒரு வார்த்தை பதிலுக்காக
ஒரு நாள் காத்திருப்பேன்
உனக்கென்ன தெரியும்
அந்த காத்திருப்பின் வலி

இது பதிலாய் வரும் என நினைத்து
மனம் பூரிக்கும்
அல்ல,
 இது பதிலாய் வரும்
என் மனம் வேதனைகுள்ளாகும்

இப்படி ஓராயிரம் வார்த்தைகள் மனதில் வந்து செல்லும்
கடைசியில் ஒரு ஸ்மைலி பதிலாய் வரும்
ஒருவனை அவமானப்படுத்தப்
காக்க வைத்தலே போதுமாய் இருக்கிறது 

வார்த்தைக்கு பதில்
வார்த்தை தானே, 
ஸ்மைலி அல்ல.


-பூமி.சாமி.

Saturday, July 8, 2023

நீண்ட நாட்களுக்குப் பிறகு கரந்தை கல்லூரியை பார்த்தேன்.

படித்த பள்ளி
படித்த கல்லூரி
பழைய காதலி
பார்த்தவுடன் பரவசம்😀

-பூமி.சாமி.

Tuesday, July 4, 2023

நேரம்

பணம் கொடுத்து ஏமாறுவது போல் 
நாம் சில நபர்களிடம் நம் நேரத்தை கொடுத்து ஏமாறுகிறோம்

ஒருவருக்கு நம் நேரத்தை கொடுக்கிறோம் என்றால்
நமக்கும் அவருடைய நேரம் கிடைக்க வேண்டும் 
இல்லையென்றால் 
நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள் 

நமது நேரம் சாதாரணமல்ல
நம் வாழ்வின் பகுதி 
பணம் இழந்தால் திரும்ப சம்பாதித்து விடலாம் 
நேரத்தை இழந்தால் இழந்தது தான்

 எனவே உங்களது நேரத்தை சரியான  நபருக்கு கொடுங்கள்
சரியான இடத்தில் முதலீடு செய்யுங்கள்.


-பூமி.சாமி.

Saturday, July 1, 2023

எண்ணங்கள் கொஞ்சமேனும்
நல்லதாக இருக்கட்டும்

இல்லையேல்

முகமூடிகள் கழண்டு விழும்போது
முகம் கொடூரமாக இருக்கக்கூடும்.

-பூமி.சாமி.

Thursday, June 29, 2023

பக்கத்துல வாழும் போது
உன் அருமை தெரியல
உன் அருமை தெரியும் போது
பக்கம் நீ இல்லை.

-அயோத்தி படப்பாடல்
மனதில் கந்தக அமிலத்தை
சுமந்து அலையும் காந்தாரி
அது உன்னை எரித்து
சுற்றத்தையும் சுட்டெரிக்கும் 
என்பதை அறிவாயா?

-பூமி.சாமி.

Tuesday, June 27, 2023

மனசாட்சி இல்லா மனிதர்கள்

மரநிழலில்
மது விருந்து
மணலில்
மது புட்டிகளின் உடைந்த சில்லுகள்
காலணி நம்மால் அணிய முடியும்
கால்நடைகளால் அணிய முடியுமா.

-பூமி.சாமி.


Thursday, June 22, 2023

சொல்லப்படாத வார்த்தையும்
வலி ஏற்படுத்துகிறது,
குறுஞ்செய்திக்கு பதிலில்லை.

பூமி.சாமி.

Thursday, June 8, 2023

காலையில் நடைப்பயிற்சி
செய்கிறேன் நான்
என்னருகில் நடனப்பயிற்சி
செய்கிறது ஒரு மயில்
தன்னிடத்தே உள்ளதை வைத்து
தன்னை பேரழகாக்கி கொள்கிறது மயில்

தன் இயற்கை பேரழகை மறந்து
கண்டது கடையதை பூசி தன்னை அசிங்கமாக்கி கொள்கிறான் மனிதன்.

-பூமி.சாமி.

Tuesday, June 6, 2023

கோடை மழைப் போல்
எப்பொழுதாவது உன்
 பதில் வரும் முன்பு 

இப்பொழுது அது
பாலைவன மழைப் போல் ஆகிப்போனது ஏனோ.

-பூமி.சாமி.

உண்மையான அன்பு

சிலபேர் " உனக்கு சூடு சுரணை இல்லையா"
என்று என் காது படவே பேசுகிறார்கள்

 எத்தனை முறை காயப்பட்டாலும்
அவமானப்படுத்தப் பட்டாலும் 
அதையெல்லாம் மறந்து
 நான் உன் முன் நிற்கிறேன் 

சூடு சுரணை உள்ள மானஸ்தர்களை 
பார்த்து நான் கேட்கிறேன் 
" உண்மையான அன்பின் வலிமையை என்றாவது நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா" என்று.

பூமி.சாமி.

Sunday, June 4, 2023

அன்பு

நீ எனக்கு துன்பத்தை தந்தால்
 நான் உனக்கு அன்பை தருவேன்

நீ என் மீது வெறுப்பை உமிழ்ந்தால்
நான் உன்மீது அன்பை உமிழ்வேன்

நீ என்மீது கோபத்தை காட்டினால்
நான் உன்மீது அன்பை காட்டுவேன்

நீ எனக்கு தீங்கு செய்தால்
நான் உனக்கு அன்பு செய்வேன் 

நீ எதுவேண்டுமானாலும் செய்துவிட்டு போ
என்னிடம் அடுத்தவருக்கு கொடுக்க அன்பு மட்டுமே இருக்கிறது.




இதுவரை வாழ்ந்ததில் தெரிந்து கொண்டது

எண்ணம் 
போல் தான் 
வாழ்க்கை. 

தவறு

நம் அன்பானவர்கள் செய்யும் தவறுகள்
திருத்தப்பட வேண்டும் 
அல்லது
திருத்த முயற்சியாவது எடுக்க வேண்டும்
தவறை மறைத்து வைப்பத்தினால்
அத்தவறு அதிகமாகி அவரையும் அவர் சார்ந்தவர்களையும் அது அழித்துவிடும்.



Friday, June 2, 2023

நீ இவ்வளவு இன்னல்களை தந்த பின்னும்
உனக்கு சொல்வதற்கு நன்றிகள் உள்ளன என்னிடம் 

நீ இவ்வளவு வெறுப்பை உமிழ்ந்தப்பின்னும்
உன்னிடம் காட்டுவதற்கு அன்பு இருக்கிறது என்னிடம் 

நீ மோசமாக கோபபட்டபின்னும் 
உன்னை பார்த்து புன்னகைக்க
மனம் இருக்கிறது என்னிடம்

நீ இவ்வளவு நடித்தபின்னும்
உன்னிடம் உண்மையான அக்கறையுடன்
இருப்பதற்கு காரணங்கள் உள்ளன என்னிடம் 

நீ இவ்வளவு ஏமாற்றிய பின்னும் 
 எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது உன்னிடம் 

-பூமி.சாமி

மனம்

மனதை குத்தி காயப்படுத்த 
ஒரு நொடியும் ஒரு வார்த்தையும்
போதுமாய் இருக்கிறது

ஆனால் 

அதை ஆறுதல் படுத்த
ஆயிரம் வார்த்தைகளும் ஆயிரம் மணி நேரமும் தேவைப்படுகிறது.


-பூமி.சாமி.

Wednesday, May 31, 2023

இலக்கு  முக்கியமல்ல
இலக்கை நோக்கி போகும் பயணம்  முக்கியமானது.

பூமி.சாமி.


Tuesday, May 30, 2023

முன்பெல்லாம் வாழ்க்கையில்
ஆங்காங்கே நடிப்பு இருக்கும்

இப்பொழுது நடிப்பிற்க்குள்
ஆங்காங்கே வாழ்க்கை இருக்கிறது.


Sunday, May 28, 2023

மறதியைப்போல் மாமருந்து இல்லை


வயது அதிகமாக
மனம் மென்மையாகும் 
காயங்கள் அதிகமாகும்
அதை மறக்க
மறதி அதிகமாகும்.

பூமி.சாமி


Monday, May 22, 2023

தூரத்திலேயே இருந்து கொள்கிறேன்
நீ கானல் நீர் ஆகுவது தெரிகிறாய்
அருகில் வந்தால் காணாத நீராகிறாய்.

-சாமி.

Monday, May 15, 2023

மூட்டை மூட்டையாய் முகமூடிகளை
தூக்கி அலைகிறோம்
முகத்தை மறைத்துக் கொள்ள.

-பூமி.சாமி.

Tuesday, May 9, 2023

வாழ்த்துக்கள்

உன் நம்பிக்கைக்கு காரணமாய்
எங்கள் வார்த்தைகள் இருந்திருக்க கூடும்

உன் முயற்சிக்கு பின் எங்கள் ஊக்கம் இருந்திருக்க கூடும்

உன் அறிவு முதிர்ச்சிக்கு எங்கள் அனுபவம் காரணமாய் இருந்திருக்க கூடும்

உன் வாழ்விற்கு வழியாய் ஒளியாய்
எங்களால் வந்த கல்வி இருக்கக்கூடும்

இவைவெல்லாம்
ஒன்றுமே இல்லை 
உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கு முன்

சென்று வாருங்கள் வென்று வாருங்கள்
வாழ்த்துக்கள்.


Wednesday, May 3, 2023

இருக்கும்போதே கொண்டாடுவோம்

என் இறுதி ஊர்வலத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்

 இப்பொழுது வாருங்கள் பேசிக்கொண்டு காலார நடப்போம் 

எனக்கு உங்கள் இறுதி மரியாதை வேண்டாம் 
இப்பொழுது என்னை மரியாதையுடன் நடத்துங்கள் போதும்

அப்போது என் மீது அழுது புரள வேண்டாம்
 இப்பொழுது என்னோடு சிறிது நேரம் சிரித்து பேசுங்கள் போதும்

 அப்போது என்னால் கேட்க முடியாத ஆயிரம் புகழ்  மொழிகள் வேண்டாம் 

ஒன்றிரண்டேனும் இப்பொழுது என் காதில் கூறுங்கள் போதும்

உங்கள் மலர் மாலைகள் வேண்டாம் 
இப்போது என்னை மலர்ந்த முகத்தோடு அணுகுங்கள் போதும்

அப்போது என்னை விட்டுப் பிரிந்து செல்கிறாயே என்று அழுது அலற்ற வேண்டாம் 
இப்போது 'நான் உன்னோடு இருக்கிறேன் 'என்ற கூறுங்கள் அது போதும்

அப்போது புகைப்படம் ஒட்டி வருந்துகிறேன் என்ற வார்த்தைகள் வேண்டாம்
இப்போது உயிர் படமாய் உன்னோடு இருக்கிறேன் என் உணர்வை மதி அது போதும் 

 நான் இருக்கும் நாட்களில் இதுவெல்லாம் செய்தால் 
என் இறுதி நாள் தள்ளிப்போகும் அது போதும் எனக்கு 

என் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டாம் நீங்கள்.



-பூமி.சாமி.

Friday, April 28, 2023

செய்த உதவிக்கு அங்கீகாரம் இல்லாமல்
போகும் போது 
உதவி செய்யும் உந்துதல் குறைந்து போகிறது.

Thursday, April 27, 2023

பணப்பிறழ்வு

மனப்பிறழ்வு என்று உலகம் சொல்லும் ஒரு மனிதருக்கு பத்து ரூபாய் பணம் கொடுத்தேன்
வாங்க மறுத்தார்
எனக்கு புரியவில்லை 
பிறகு ஒரு பழத்தை கொடுத்தேன் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் அன்றுதான் உணர்ந்தேன் மனப்பிறழ்வு அவருக்கு அல்ல எனக்குத்தான் என்று.

-பூமி.சாமி.

Tuesday, April 25, 2023

நன்றி நவில்வோம்

வான் மேகங்கள் பெய்யாமல் நீர் சுமந்து அலைவது போல்
சொல்லாத பல நன்றிகளுடன் மனம் சுமந்து அலைகிறேன் நான் 

நான் தவறுகள் செய்த போது அன்பாய் குட்டி அக்கறை காட்டிய அம்மாவுக்கு

அடிக்காமல் கண்ணால் கண்டிப்பையும் சொல்லிக் காட்டாத அன்பையும் தந்த அப்பாவுக்கு

 கையைப் பிடித்து அகரம் எழுத வைத்த ஆசானுக்கு

எப்பொழுதும் என் அருகில் என்னை காத்து நிற்கும் கடவுளுக்கு 

இப்படி பல சொல்லாத நன்றிகளை மனம் சுமந்து அழைகிறேன் நான்

என் குறைகளை பொறுத்து என்னை தாங்கிக் கொள்ளும் குடும்பத்துக்கு

உடுக்கை இழந்தவன் கை போல் வந்து நிற்கும் உறவுகளுக்கு 

என் கோபத்திற்கு பதிலாய் புன்னகையை கொடுத்து தோள் கொடுக்கும் நட்புக்கு 

அன்பையும் மரியாதையையும் நவிழும் என் மாணவர்களுக்கு

இப்படி சொல்லாத பல நன்றிகளுடன் மனம் சுமந்து அலைகிறேன் 

காலையில் என்னை கரைந்து எழுப்பும் காக்கைக்கு 

எப்பொழுது சென்றாலும் என் தோள் மீது ஏறி விளையாடும் நாய்க்குட்டிக்கு

தடுக்கி விழும்போதெல்லாம் என்னை தாங்கிப் பிடிக்கும் தாய் பூமிக்கு

என் மனம் எல்லாம் நிறைந்து கிடக்கும் மரங்களுக்கு

முழு கவலையில் இருக்கையில் அதை முழுவதுமாய் கரைத்து விடும் முழு நிலவுக்கு 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்  மனமுழுவதும் கொட்டிக்கிடக்கிற சொல்லப்படாத நன்றிகளை

 மேகங்கள் நீரை கொட்டினால் பூமி குளிரும்
நன்றிகளை நவில்ந்திட மனங்கள் குளிரும்.

-பூமி-சாமி.

Sunday, April 23, 2023

Contact vs Connection

*Very Heart Touching Message :*

*An old teacher was being interviewed by a young professional. The professional started interviewing the teacher as planned earlier.*
 
*Young professional - "Sir, in your last lecture, you told us about*
    *"Contact" and  "Connection."* 
*It's really confusing. Can you explain?"* 🤔

*The old teacher smiled and apparently deviating from the question asked the young professional:* 

*"Are you from this city?"*

*Professional : "Yeah..."*

*Teacher : "Who are there at home?"*

*The professional felt that the teacher was trying to avoid answering his question since this was a very personal and unwarranted question. Yet the  young  professional said: "Mother had expired. Father is there. Three brothers and one sister. All married..."*

*The old teacher, with a smile on his face, asked again: "Do you talk to your father?"*

*The  young  professional looked visibly annoyed...*

*The old teacher : "When did you talk to him last?"* 

*The young  professional, supressing his annoyance said: "May be a month ago."*

*The old teacher : "Do your brothers and sisters meet often? When did you meet last as a family gathering?"*

*At this point, sweat appeared on the forehead of the young  professional.*

*It seemed that the old teacher was interviewing the young  professional.*

*the professional said: "We met last at festival two  years ago."*

*The old teacher : "How many days did you all stay together?"*

*The young  professional (wiping the sweat on his brow) said: "Three days..."*

*Old teacher : "How much time did you spend with your Father, sitting right beside him?"*

*The young  professional looking  perplexed and embarassed and started scribbling something on a paper...*

*The old teacher : "Did you have breakfast, lunch or dinner together? Did you ask how he was? Did you ask how his days are passing after your mother's death?"*

*Drops of tears started to flow from the eyes of the young  professional.*

*The old teacher held the hand of the young  professional and said: "Don't be embrassed, upset or sad. I am sorry if I have hurt you unknowingly... But this is basically the answer to your question about "Contact and Connection ." You have 'Contact' with your father but you don't have 'Connection' with him. You are not connected to him. Connection is between heart and heart...*
*Sitting together, sharing meals and caring for each other, touching, shaking hands, having eye contact, spending some time together... All your  brothers and sisters have 'Contact' but no  'Connection' with each other..."*🤗

*The Young  Professional wiped his eyes and said : "Thanks Sir for teaching me a Fine & Unforgettable Lesson."*

*This is the reality today.*
*Whether at home or in the society everybody has lots of contacts but there is no connection. Everybody is busy in his or her own world...*

*Let us not maintain just,*
          *"Contacts"*.
*But let us*
*Remain "Connected,"*
    *"Caring,Sharing"* 
                *&*
     *Spending Time* 
*With all our Dear Ones.*

Saturday, April 15, 2023

உன் புன்னகை உலகின் புன்னகை

உன் உதடு புன்னகைக்க 
உன் முகம் மலரும் 
உன் முகம் மலர 
உன் முன் உள்ள முகம் புன்னகைக்கும்
பின் உன்னை சுற்றி உள்ள முகங்கள் புன்னகைக்கும்
பின் ஊரே புன்னகைக்கும்
ஊரே புன்னகைக்க
உலகம் புன்னகைக்கும்
உன் உதட்டில் தோன்றி உலகத்தில் முடிகிறது ஒரு சிறு புன்னகை.

-பூமி.சாமி.

Thursday, April 13, 2023

உலகின் பழமையான மொழியும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழை தாய்மொழியாய் கொண்டு இருப்பதில் 
பெருமை கொள்வோம்.

"அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ".

Monday, April 10, 2023

அந்த ஆசிரியரின் பெயரும் மறந்து விட்டது
முகமும் மறந்து விட்டது
 ஆனால் 
அவர் என் தோளைத் தட்டி சொன்ன " நல்லா பண்ணியிருக்கடா" என்ற வார்த்தைதான் இன்னும் மறக்காமல் என்னை ஒடவைத்துக் கொண்டு இருக்கிறது.

-பூமி.சாமி.

உறவுகள்

அன்று
எதிலும் கணக்கு பார்க்காத உறவுகள் இருந்தது
அது அன்பு ஆகட்டும்  சண்டை ஆகட்டும்.

இன்று 
எதிலும் கணக்கு பார்க்கும்
உறவுகள் தான் இருக்கிறது.
ஏன் ஒரு கணக்குகள் தான் உறவே இருக்கிறது

அன்று
கூட்டி கழித்து பார்த்தால்
கடைசியில் அன்பு மிஞ்சும்.

இன்று
கூட்டி கழித்து பார்த்தால்
கடைசியில் மிஞ்சுவது
வெறுப்பு போட்டி பொறாமை.

-பூமி.சாமி.

Sunday, April 9, 2023

ஒரு மலரை வாங்கிவிடுகிறேன்
அதன் பேரழகை வாங்க  முடியவில்லை.

-பூமி.சாமி.
அப்ப அப்ப சண்டையிட்டு கொள்கிறோம்
காரணம் நானாகவே இருக்கிறேன்
மன்னிப்பது நீயாகவே இருக்கிறாய்
தோற்பது நம் ஈகோவாக இருக்கிறது
கடைசியில் ஜெயிப்பது நமது உண்மையான உறவாகவே இருக்கிறது.

-பூமி.சாமி.

Wednesday, April 5, 2023

நீ துன்ப படுகையில்

என் கரம் உன் கரம் பற்றி நடக்கும்
என் வார்த்தைகள் உன்னை தூக்கி நிறுத்தும் 
என் விரல்கள் உன் கண்ணீர் துடைத்து தேற்றும்
உன் தோளோடு தோள் நிற்க எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன் நான் 
புயலில் சாய நீ ஒன்றும் சாதா
மரமல்ல நீ ஆலமரம்
நாங்கள் அதன் விழுதுகள்.

-பூமி.சாமி





Friday, March 31, 2023

படித்ததில் பிடித்தது

*#சாகாவரம்_வேண்டுமா?*

மகா அலெக்சாண்டர் தனது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இறவா வரம் வேண்டி அலைந்தார். 

எல்லாரும் இப்படியான ஒன்றுக்காகக் காலம் காலமாகத் தேடி அலைபவர்கள்தான். 

அலெக்சாண்டரும் அலைந்தார். 

அதைத் தேடித் தேடிக் கண்டும் பிடித்தார். 

அத்தனை சக்திவாய்ந்தவர் அல்லவா.

ஒரு காட்டில் பயணம் செய்தபோது அங்கு தவம் செய்த ஞானிகளில் ஒருவர், 

ஒரு குகை வழியைக் காட்டி, அதற்குள் உள்ள சுனையில் நீர் அருந்தினால், அருந்துபவர்களுக்கு மரணமே இல்லை என்று கூறினார்

அலெக்சாண்டர் புத்திசாலியாக இருந்திருந்தால், இறவாமைக்கு வழிசொன்ன ஞானி அந்த நீரை அருந்தினாரா என்று நிச்சயமாக கேட்டிருந்திருப்பார். 

ஆனால் கேட்கவில்லை. 
அத்தனை அவசரம். 

அந்தக் குகையைச் சென்றடைவதற்குள் அவர் இறந்துபோய்விட்டால் என்ன செய்வது? 

அதனால் அவசரமாகக் குதிரையை ஓட்டிக்கொண்டு போனார்.

குகையை அடைந்தார். 

அதற்குள் ஓடிக்கொண்டிருந்த நீர்ச் சுனையைப் பார்த்தார். 

குகையின் இருட்டுக்குள் ஸ்படிகம் போல தெள்ளத்தெளிவாக இருந்த நீரைப் பார்க்கும்போதே அது ஜீவ நீர் என்று உணர்ந்து மகிழ்ச்சியடைந்தார். 

சுனையின் முனையில் அமர்ந்து கைகளைச் சேர்த்து நீரை அள்ளிப் பருகப் போனார் அலெக்சாண்டர்.

அந்தக் குகையின் இருட்டு மூலையில் உட்கார்ந்திருந்த காகம் ஒன்று, 

“நிறுத்து… தயவுசெய்து அந்த நீரைப் பருக வேண்டாம்” என்றது.

அலெக்சாண்டர் காகத்தைத் திரும்பிப் பார்த்து, “என்ன சொல்கிறாய்? 

இந்த நீரை நீ பருகியிருக்கிறாயா? 

இதில் என்ன பிரச்சினை?” 
என்று கேட்டார்.

காகம் தன் கதையைக் கூறியது. 

“நான் அந்த நீரைக் குடித்தேன். 

தற்போது எனக்கு மரணமே இல்லை. 

ஆனால் நான் தற்போது இறக்க விரும்புகிறேன். 
ஆனால் என்னால் முடியவில்லை. 

எனது வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது. 

இந்த வாழ்க்கையின் மூலமாக அன்பு என்றால் என்னவென்று தெரிந்துகொண்டேன்.

வெற்றியை அறிந்துகொண்டேன். 

நான் காகங்களின் அரசனாக ஆனேன். 

தற்போது எனக்குத் தெரிய வேண்டியது எதுவுமே இல்லை. 

நான் அறிந்த எனது சகாக்கள் அனைவரும் இறந்து போய்விட்டனர். 

அவர்கள் ஓய்வில் உள்ளனர். 
எனக்கு ஓய்வு இல்லை. 

தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்தேன்.

ஆனாலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. 

நீங்கள் இந்தத் தண்ணீரைப் பருகும் முன் எனது நிலை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். 

அதற்குப் பிறகு நீங்கள் இந்தக் குகையின் நீரைக் குடிக்கலாம்” என்று மாமன்னர் அலெக்சாண்டரிடம் காகம் விண்ணப்பம் வைத்தது.

மரணம் என்ற முடிவு இல்லையெனில் வாழ்க்கை என்பது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றாக மாறிவிடும். 

அன்பிற்கு எதிர்மறையான ஒன்று இல்லாவிடில், அன்பு என்பதே தாங்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.

இது புனைவுக்கதையாக இருந்தாலும், இந்தக்கதை உணர்த்தும் உண்மை சிந்திக்க வைக்கிறது.

அன்பானவர்களிடமிருந்து பிரியும்போதுதான் அந்த உறவு அர்த்தமுள்ளதாக 
மாறும். 

இல்லையெனில் எல்லா விஷயங்களும் சலிப்பாகிவிடும். 

வாழ்க்கை, எதிரெதிரான அம்சங்களில்தான் இருக்கிறது. 

அதனால்தான் அது மிக சுவாரசியமாகவும் இருக்கிறது.

Tuesday, March 28, 2023

உன் மீது நான் வைத்திருப்பது உலகப் பெரு பிம்பம்,
அது உடைந்து போகையில் நானும் உடைந்து போகிறேன்.

உனது அக்கறை கரையில்லாத கடல், அதில் கறை காண்கையில் கலங்கித் தான் போகிறேன்.

என் தவறை பலமுறை மன்னித்த உன்னை,
ஒருமுறை மன்னிக்க மனமில்லாமல் கலங்கி நிற்கிறேன்.

உன்மேல் மலைபோல் வைத்திருந்த நம்பிக்கை மண்ணாகி போனதனால்
உன்னை மன்னிக்ககூட முடியவில்லை இந்த முறை,
என்னை மன்னித்து விடு மறுபடியும்.

-பூமி.சாமி

Sunday, March 26, 2023

பணம் இருக்கிறது
பரிகாரம் செய்ய
என்று பாவம் மேல் பாவம் 
செய்பவர்களை
என்ன செய்ய

-பூமி.சாமி.


Friday, March 24, 2023

உண்மை!

சண்டாளி! உன் வசந்தத்தால் 
எனக்கு இலையுதிர் காலம்.

-கவிக்கோ அப்துல் ரகுமான்.

Thursday, March 23, 2023

அடிமேல் அடி
வலிமேல் வலி
மனம் கலங்கத்தான் செய்கிறது

துயரங்களை சொல்ல வார்த்தை இல்லாமல் மௌனம் ஆவதும்

துயரங்களை பகிரும் செவிகளை இழப்பதும்

துயர நேரங்களில் சாயும் தோள்களை
தொலைப்பதும்

ஆறுதல் கூறும் 
மனங்கள், மறுப்பதும்

துயரத்தின் மேல் துயரம்.


-பூமி.சாமி.
ஆயிரம் வார்த்தைகள்
தராத ஆறுதலை அளிப்பது
அதிகாலை அழுகை.

-பூமி.சாமி

Tuesday, March 21, 2023

மனிதர்கள் என்னை ஒதுக்கி
தள்ளினாலும்
 என்னோடு கூட்டு சேர்வதற்கு இங்கு சில குருவிகளும் மரங்களும் இருக்கின்றன
அவைகள் என்னை ஒருபொழுதும் புறந்தள்ளுவது இல்லை.

-பூமி.சாமி‌

Sunday, March 19, 2023

சில சமயங்களில், 
என் சொல்லிலும் செயலிலும்
ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது
மன எண்ணத்தில் உள்ள அழுக்கு.


பூமி.சாமி.

Thursday, March 16, 2023

When we get more distance between our words and actions, it's automatically exposed ourselves.

-Boomi.Saami

Tuesday, March 14, 2023

அன்று
அல்லிகளுக்கு இடையே நீந்தி
அக்கரையை அடைந்த நான்
இன்று 
நட்சத்திரங்களுக்கு
இடையே நீந்தி தொலைந்து போகிறேன்.

-பூமி.சாமி.

Saturday, March 11, 2023

நன்றாக இருக்கிறாயா?
சாப்பிட்டாயா?

இதுபோல் அர்த்தம் இல்லாத
அவசியம் இல்லாத கேள்விகள் தான்
நம் உறவை அர்த்தப்படுத்தும் அழுத்தப்படுத்தும்.

பூமி.சாமி.

Friday, March 10, 2023

கடந்த காலங்களை கிளரும்போது
மனதில் கீறல் ஏற்படத்தான் செய்யும்.

-பூமி-சாமி.

Wednesday, March 8, 2023

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

ஒரு நாள் கொண்டாடிவிட்டு ஓடி  விடுவார்கள், கவனம்
ஒவ்வொரு நாளும் கொண்டாடப் பட வேண்டும் 

அன்பின் அடையாளம் என்று சொல்லி அடக்கி வைக்கப் பார்ப்பார்கள், கவனம்

கருணையின் பிறப்பிடம் என்று சொல்லி கருணையில்லாமல்  நடத்துவார்கள், கவனம் 

எது நமக்கு தேவை இக்கணம் 
ஒன்று சம உரிமை மற்றது சுதந்திரம்

எப்படி கிடைக்கும் இவைகள் 
ஒரே வழி கல்வி 
படி படி படி 
படிப்படியாய் முன்னேறுவாய்
கடினமாக படி கவனமாக படி
அறிவு வந்து சேரும் 
சிந்தனை சிறகடிக்கும் 
பொருள் வந்து சேரும்
அதோடு சேர்ந்து உரிமையும் சுதந்திரமும் வந்து சேரும்

சுதந்திரம் என்பது கட்டற்று நடப்பதல்ல கவனமாய் நடப்பது , கவனத்தில் கொள் 

பட்டம் உயர உயர பறக்க கையில் இருந்து நூல் கொஞ்ச கொஞ்சமாய் விடப்பட வேண்டும்
நூலருந்த பட்டங்கள் வீழும் என்பதை கவனத்தில் கொள் 

பெண்கள் பற்றிய ஆண்களின் வார்த்தைகளில் ஆணாதிக்கம் கட்டாயம் இருக்கும் 
என் வார்த்தையிலும் இருக்கலாம் 
சிந்தித்து செயல்படு.


இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 

-பூமி-சாமி.

Sunday, March 5, 2023

உன் பிரச்சினைக்கு
தீர்வு என்னிடம் இல்லை

ஆனால்

என்னிடம் பொறுமை இருக்கிறது
அதை காது கொடுத்து கேட்க

எனது தோள் இருக்கிறது நீ
சாய்ந்து கொள்ள

என்னிடம் வார்த்தைகள் இருக்கிறது
உன்னை தேற்றுவதற்கு

என்னிடம் மனம் இருக்கிறது உன்னிடம் கருணை காட்ட

எனது கைகள் இருக்கிறது
உன்னை கைக்கோர்த்து அழைத்து செல்ல

இதில் ஏதோ ஒன்று
உன் பிரச்சினையை நீயே தீர்ப்பதற்கு
தைரியம் கொடுக்க கூடும்


-பூமி_சாமி




Friday, March 3, 2023

That's Life

Beautiful words Written by  Sophia Loren (Italian Actress)...  _" When I got enough confidence, the stage was gone…..  When I was sure of Losing, I won…….  When I needed People the most, they Left me…….  When I learnt to dry my Tears, I found a shoulder to Cry on……  When I mastered the Skill of Hating, Someone started Loving me from the core of the Heart……  And, while waiting for Light for Hours when I fell asleep, the Sun came out…..   That’s LIFE!! No matter what you Plan, you never know what Life has Planned for you……  Success introduces you to the World……. But Failure introduces the World to you……. ……Always be Happy!!  Often when we lose Hope and think this is the end…   God smiles from above and says, “Relax Sweetheart; It’s just a Bend, not the End..!"_  WORTH READING  AGAIN AND AGAIN.

Wednesday, March 1, 2023

சிலரின் விசாரிப்புகள்
அக்கறையா ஆதங்கமா
என தெரிந்து கொள்வதற்குள்
முடிந்துவிடுகிறது வாழ்க்கை


Sunday, February 26, 2023

படித்ததில் பிடித்தது -மன அழுத்தம் நீங்க

மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற‌ மனவியல் நிபுணர்கள் கூறும் 30 அற்புதமான வழிமுறைகள்....

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எச்செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும். வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் 
விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாதபோதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும் போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரிசெய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழி முறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலைதருவதுடன் அடுத்தபடி நிலை நோக்கி நகர்வதற்கும் கை கொடுக்கின்றன. மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக் கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது.

இனம் புரியாத காரணங்களால் மனச்சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட
காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது. மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சி முறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.

(1) ஆழ்ந்த சுவாசம்:
                    கீழை நாடுகள், மேலைநாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின்மூலம் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்பு நிலை அடைகின்றது. அடி வயிற்றில்கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வுநிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

(2) காட்சிப்படுத்துங்ள்:
                  பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ஷவரின்கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச்சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.

அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

(3) மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:
                 உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.

(4) புன்னகையின் சக்தி:
                  மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடை கிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார்கள். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

(5) கடைவாய் – ஒரு ரகசியம்:
                      மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

(6) மனம் சொல்லும் மந்திரம்:
                      நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக் கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. "எல்லாம் செய்யக்கூடும்", "நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

(7) அடுத்தது என்ன….?
                    மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். "எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே" என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல்திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன? என்ற அணுகுமுறையை கைக்கொள்கிறபோது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.

(8) எழுதிப்பாருங்கள்:
                   மனஅழுத்தத்தை தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும் போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற 
மன நிறைவை எளிதில் எட்ட முடிகிறது.

(9) தடாலடிகளை தள்ளிப்போடுங்கள்:
                   அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப்பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும் போது முடிவெடுப் பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக்குள்ளேயே எண்ணிவிட்டு, சிறிதுதூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்க பூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

(10) காபி குடிப்பதைக் குறையுங்கள்:
                     காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர். தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ
பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

(11) முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:
                  எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கி போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள்வட்டத்துக்குள் எரிந்து விழச்செய்கிறது. இக்கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்து விடும் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச்சொல்வதே நல்லது.

(12) நறுமணங்களின் நலம் பெறுங்கள்:
                      தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கி கொள்ளமுடியும்.

(13) உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவும்:
                   டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள்வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.

(14) மூன்று முக்கிய இடங்கள்:
                    பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.
1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.
2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.
3. கழுத்து சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.

அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்து சக்தியை மூளைக்கு வழங்கும்.

(15) கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:
                          மனதில் தோன்றும் கவலைகள் எல்லாநேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக் கொண்டால், அக்கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .

(16) நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்:
                      கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

(17) வைட்டமின் வேண்டும்:
                         வைட்டமின் பி, மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

(18) அடையாளம் என்ன?
                        மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத்தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக் கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.

(19) ஆகாயம் பாருங்கள்:
                        அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி
திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக்கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

(20) நடைப்பயிற்சி நலம் தரும்:
                      நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கி விட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

(21) வெந்நீர்க்குளியல்:
                        வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கை கால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.

(22) இசையால் வசமாகும் இதயம்:
                        எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசைகேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.

(23) செல்லப் பிராணிகள்:
                          நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்
கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.

(24) கவனம் குவியுங்கள்:
                        மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை
நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதனளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.

(25) நண்பர்களை அழையுங்கள்:
                      மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

(26) வஜ்ராசனத்தின் வல்லமை:
                        மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான்.

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின்மீது சிறிதுநேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம்.
மெல்லக் குனிந்து முன்நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.
(இதை இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் க‌டைப்பிடிக்கிறார்கள்)

(27) பிரார்த்தனை:
                 மனமுருகும் பிரார்த்தனை, 
மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.

(28) நிமிர்ந்து அமருங்கள்:
                சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத் தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

(29) தாவரங்களோடு சிறிது நேரம்:
                      பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவ சக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.

(30) எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்:
                
 
இங்கு கலங்குவதாலோ கவலைப்படுவதாலோ எதுவும்
 நடக்கப் போவதில்லை 

ஒருநாள் ஒருபடியேனும் உருப்படியாய் ஏறு 
ஒவ்வொரு நாளும் தவறாமல் ஏறு
சறுக்கிடும் வழுக்கிடும் கலங்காதே கவலைப்படாதே கற்றுக்கொள்
கரை சேர்வாய் 

இங்கு தோல்வி என்ற ஒன்று இல்லை எல்லாம் வெற்றிக்கான பட்டறிவு படிகள் தான் 

வெற்றியின் வாயில் காவலன் தோல்விதான் 
அவனை சந்திக்க நேர்ந்தால்
நீ வெற்றியின் வாயிலில் இருக்கிறாய் என்று உணர்ந்து கொள்

எல்லாம் உன்னுள் இருக்கிறது 
உன்னை நம்பு உழைத்திடு
உலகை உன்னதாய் ஆக்கிடு.

-சாமி.

Saturday, February 25, 2023

ஆசிரியர் -மாணவன்

நான் கற்பிக்கவும் இல்லை
 நீ கற்றுக் கொள்ளவும் இல்லை 
நம்மில் நடப்பது உரையாடல் தான்

 நான் வழி காட்டவும் இல்லை 
நீ வழி நடக்கவும் இல்லை 
சேர்ந்தே தான் நடக்கிறோம்

 நான் எதையும் கொடுக்கவும் இல்லை 
நீ எடுத்துக் கொள்ளவும் இல்லை சேர்ந்தே தான் தேடுகிறோம் 

நான் எதையும் சொல்லவுமில்லை
நீ கேட்கவுமில்லை
 சேர்ந்தே தான் சிந்திக்கிறோம் 

நான் ஒன்றும் வெளிச்சமும் இல்லை 
நீ இருளும் இல்லை
 நாம் இருவருமே சூரியன் தான் 

நான் பெரியவனும் இல்லை
 நீ சிறியவனும் இல்லை 
சகப் பயணியாய் தான் பயணிக்கிறோம்

 நான் ஆசிரியனும் இல்லை 
நீ மாணவனும் இல்லை 
இருவருமே தான் கற்கிறோம்.

-சாமி.

Friday, February 24, 2023

வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கை என்றால் என்ன?

 ஒவ்வொருத்தவரிடமும் ஒவ்வொரு பதில்

 இத்தருணத்தில் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

அடுத்தவருக்கு உதவிடுவதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்

அன்பு செய்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

 குடும்பத்திற்கு உழைப்பதே வாழ்க்கை என்பார் மற்றொருவர்

 பயமில்லாமல் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

நாட்டுக்காக வாழ்வது வாழ்க்கை என்பார் இன்னொருவர் 

நம் இயல்பாய் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

அடுத்தவரை மன்னிப்பதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்

 உயிரோடு இருப்பதே வாழ்க்கை என்பார் ஒருவர்

நோயற்று வாழ்வதே வாழ்க்கை என்பார் இன்னொருவர் 

நோக்கமுடன் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

 பதில் இல்லா கேள்விதான் 'வாழ்க்கை'  என்கிறார் ஓஷோ 

அப்பதிலை தேடுவது தான் வாழ்க்கை என்கிறேன் நான்.

-சாமி.

அர்த்தமுள்ள மௌனம்

என் பெரும்பாலான கேள்விக்கு உன் பதில் மௌனம் தான்,
உன்னை புரிந்ததனால்
உன் மௌனத்தின் அர்த்தமும்
நன்றாகவே புரிகிறது எனக்கு.

-சாமி.

Sunday, February 19, 2023

அக்கறை

இன்பமோ துன்பமோ என் விரல்கள் தொடுதிரையை தொட்டு உன்னைத்தான் அழைக்கிறது பகிர்ந்துக்கொள்ள

 நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் கற்பனையில் உன் விரல் பற்றியே நடக்கிறேன் 

ஆறுதல் தேவைப்படும்போதெல்லாம் உன் தோள்களை தான் தேடி அலைகிறேன் 

கனிவு தேவைப்படும் போதெல்லாம் உன் கண்களைத் தான் தேடுகிறேன்

 உன்னிடமிருந்து எனக்கு ஒன்றுமே வேண்டாம் உன் அக்கறையை மட்டும் தந்து விட்டுப் போ அது என்னை கரை சேர்க்கும்.

-சாமி.
நான் அடை மழையாய்
கொட்டும் வார்த்தைகளுக்கு
மௌன தூரலாய் வருகிறது உன் பதில்

தூரல்தான் அழகு என்பதை சொல்லிதான்
தெரிய வேண்டுமா என்ன.

சாமி.

Friday, February 17, 2023

படித்ததில் பிடித்த வரிகள்

நீ சொல்லவும் 
இல்லை...
நான் கேட்கவும்
இல்லை...
இத்தனை ஆண்டுகளாகியும்...
இன்னும்...
நீயும் ...
கேட்கவில்லை...
நானும்... 
சொல்லவில்லை...
நாம் பிரியவும் இல்லை... 
நாம் சேரவும் இல்லை....
இருந்தாலும்... 
நம் இதயத்தில்...
ஏதோ...
ஓர் ஓரமாய்...
ஓசையின்றியே... 
துடித்துக் கொண்டு தான் 
இருக்கிறது... 
'அக்கறை' என்ற பெயரில் 
என் மீது நீயும்...
உன் மீது நானும்...
பரிமாறிக் கொள்ளும்... 
நம் காதல்...💜

 ✨ கண்ணம்மா
*ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி :  "இந்து" நாளிதழ் பதிப்பு!!*

*உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.*
 இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.

*1. கதிரவனைப் போல்...*

காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.

*2. புன்னகை அவசியம், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம்...!*

உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.

*3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...*

பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

*4. பாடம் வேண்டாம்...*

 ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.

*5. கேள்வி கேளுங்கள்...!*

 பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.

*6 . கடைசி அய்ந்து நிமிடங்கள்...!* 

புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி அய்ந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.

*7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்...*

 மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.

*8. பாடப்புத்தகத்தை தாண்டி...!*

வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.

*9. உங்கள் பிள்ளை அவர்கள்...!*

 மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

*10. நம்பிக்கையைக் கொடுங்கள்...!*

 உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.

*நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்!...*
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

Thursday, February 16, 2023

படித்ததில் பிடித்தது

அவர்கள் எப்போதும் என்னோடே இருந்து விட மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் 

அவர்கள்  இடையில் எப்போதாவது என் கைகளை உதறிச் செல்வார்கள் என்பதும் எனக்குத் தெரியும்

அதற்காய் இப்போது என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் கைகளை என்னால் உதறித் தள்ளிட முடியாது 
என் இதயங்கள் அந்தளவு இரும்பாலானவை அல்ல 

அவர்களின் இதயங்கள் எப்போது அப்படி இரும்பாலான இதயங்கள் ஆகின்றனவோ அப்போது அவர்கள் என்  கைகளை உதறிச் செல்லட்டும் 

பரவாயில்லை அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை  

கடைசி வரை நான்  இப்படியே மழைக்கு ஒதுங்கி நிற்க இடம் கொடுக்கும் ஒரு மரமாய் அவர்களின் வாழ்க்கையில் இருந்து விட்டுப் போகிறேன் 

அதற்காய் நான் ஒரு போதும் அவர்களோடு கோபித்துக் கொள்ளப் போவதில்லை 
சண்டையிட்டுக் கொள்ளப் போவதுமில்லை இன்னும் அவர்களை எண்ணி கண்ணீர் வடிக்கப் போவதும் இல்லை துக்கம் கொண்டாடப் போவதுமில்லை

மழைக்காக தன்னிடம் ஒதுங்கிய மனிதர்கள் தன்னை விட்டுப் போவதை எண்ணி எந்த மரமும் கண்ணீர் வடிப்பதுமில்லை துக்கம் கொண்டாடுவதுமில்லை 

தன்னைத் தேடி வருபவர்களை மீண்டும் மீண்டும் அனைத்துக் கொள்கிறது அவ்வளவுதான். 

-அரூஸா ஜெவாஹிர்-✍️

Monday, February 13, 2023

அன்றும் இன்றும்

அன்று கிராமத்தில்

 தாய் மண்ணை கீரித்தான் கிட்டிப்பில்லு  விளையாடினோம்

 கட்டம் கட்டித் தான் சில்லுக்கோடு விளையாடினோம் 

குழி நோண்டித்தான் கோழி குண்டு விளையாடினோம்

 வட்டம் வரைந்து தான் பம்பரம் விளையாடினோம்

 கோட்டுக்குள் கபடி விளையாடி உடம்பெல்லாம் மண் ஆனோம் 

இன்று தாய் மண்ணில் 
சிறு கீரலுமில்லை கட்டமும் இல்லை  உடம்பில் மண்ணும் படுவதில்லை 

விளையாட வேண்டிய தளிர் கரங்கள் எல்லாம் தொடுதிரைகளை மட்டும் தொட்டுக் கொண்டிருக்கின்றன.


-சாமி.

Thursday, February 9, 2023

வித்தியாசம்

ஒரு ரோஜா விலையில்லா அழகாய்
தெரிகிறது எனக்கு 

ஆனால் உனக்கு ஐந்து
ரூபாயாய் தெரிகிறது.

-சாமி.

Monday, February 6, 2023

என்னை விட்டு விடுங்கள்.....

உஙகளை போல் நாடகம் போடவும் நலலா நடிக்கவும் எனக்கு தெரியாது

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

உங்களைப் போல் செய்நன்றி மறக்கவும் நாணயமின்றி நடக்கவும் என்னால் முடியாது

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

பொய்யான அன்பையும் போலியான பாசத்தையும் என்னால் காட்ட முடியாது
உள்ளொன்று வைத்து புறமோன்று பேசவும் தெரியாது 

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

தேவைப்பட்டால் பேசவும் தேவையில்லை எனில் மனிதரை மறக்கவும் என்னால் முடியாது

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

ஊழல் செய்தலும் உழைப்பின்றி ஊதியம் பெறுதலும் என்னால் முடியாது 

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

உங்களைப் போல் புறமுதுகில் குத்தவும் 
பொய்யாக புன்னகைக்கவும் எனக்கு தெரியாது 

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்.

-சாமி.

Saturday, February 4, 2023

மிதிவண்டி கற்றப்பொழுது
இருந்த மகிழ்ச்சி
ஏன் மகிழுந்து கற்கும் பொழுது இல்லை
என்பது  இன்றுவரை புரியவில்லை எனக்கு.

-சாமி.
நீ எப்பொழுதும் ' தாமரை இலை 
தண்ணீர்' போல்
இருந்து விடுகிறாய் 

நான்தான் 'செம்புலப் பெயல் நீர்' 
ஆகி புலம்பித் தவிக்கிறேன்.

-சாமி.


Monday, January 30, 2023

குழந்தைகள் வளர்ந்து விட்டனர்

👆#படித்ததில்_மிகவும்_பிடித்தது

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

விரித்த படுக்கை விரிப்பில் 
கசங்கல் இல்லை இப்போது.

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது.

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது.

புதிய புதிய உணவு கேட்டு
ஆர்ப்பாட்டமும் இல்லை இப்போது.

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன் !!

காலையில்
எழுந்ததும்
உள்ள  பரபரப்பு 
நேரம்
இல்லை இப்போது!

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது!!

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது!

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது!

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்று விட்டேன் !!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது!

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது!

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது!

உணவு ஊட்டிய பின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது!

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

கண் இமைப்பதற்குள் வாழ்வின் பொற்காலம் ஓடித்தான் போனது

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ? 

மழலை மொழியில் 
வழிந்த ஆனந்தமும்,
நொடிச் சிரிப்பும், அழுகையும்,
முதுகில் தட்டித் தந்து,
மடியில் கிடத்தி, தோளில் 
சாய்த்து தாலாட்டு பாடி,
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து, கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்,
நிலைமையும் இல்லை இப்போது!!

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது  இப்போது!

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது!!

பள்ளிக்கு 
அழைத்துச் சென்ற வருடங்களை
நினைக்காத
நாளில்லை!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது!

நாற்காலிக்கு போட்டி அப்போது!  
ஆனால் அவை அசைவின்றி, ஆளில்லா
வீடுபோல் நிற்கிறது.

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது!

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது!!

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி 
அலைபேசியில் விசாரிப்பு.

நான் ஓய்வுடன் நலம் பேண, ஆயிரம் அறிவுரை தருகிறார்கள் இப்போது.

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்.

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

நான் குழந்தையாகி விட்டதை உணர்கிறேன் இப்போது!!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்று விட்டேன்!!

யாரோ ஒருவர் எழுதியது! இன்று இவை எனக்கு!!  நாளை இவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையை ரசித்து அனுபவிங்கள்

Thursday, January 26, 2023

பயணத்தில் நடுவில் நிற்கிறேன்
நினைக்கையில் கடந்தகாலம்,
 சில நேரம்  கற்க்கண்டாய்,
சில நேரம் கசப்பாய் இருக்க,

எதிர்காலம், சில நேரங்களில் நம்பிக்கையுடன்,
சில நேரங்களில் நல்இருளாய் தெரிகிறது,

உலகத்தில் கடினமான ஒரு வேலை
உண்டென்றால் அது நிகழ்காலத்தில் நிற்பதுதான் என சவால் விடுகிறது
நிகழ்காலம்

கடந்ததை நினைப்பதா
நிற்பதை ரசிப்பதா
வருவதை வரவேற்பதா
என்று குழம்பி நிற்கையில்
எதையும் ரசிக்கவும் நினைக்கவும் விடாமல் 
என்னை தள்ளிக்கொண்டு போகிறது
வாழ்க்கை.

-சாமி.

Sunday, January 22, 2023

80 களில் அணிந்த இலவச காக்கி கால் சட்டை

காக்கி கால் சட்டை
 இடுப்பிலும் நிற்காது 
பட்டணும் இருக்காது 
அருணா கயிறுக்கும் சிக்காது

 மதிய சத்துணவில் கொடுத்தது
 உலக மண்ணே ஒட்டினாலும் ஒன்னும் ஆகாது
 ஒரு கையை எப்பொழுதும் ஒதுக்கி விட வேண்டும்
 அதை விழாமல் பிடிப்பதற்கு

 இரு மஞ்சப்பை சாமான்கள் ஒரு பையில் கொள்ளும் 
விளையாட்டு சாமான்கள்,
பலுங்கி, பம்பரம், எல்லாம் அதன் உள்ளே ஐக்கியம் 

நெல்லிக்காய், இலந்தை, நாவல் பழம், விளாம்பழம், கடலை,  தீபாவளி முறுக்கு,  சீசனுக்கு ஏற்றார் போல் பையை நிரப்பிக் கொள்ளும் பாங்கான காக்கி கால் சட்டை

 அம்மா கடைக்கு அனுப்பும்போது வெங்காயம், தக்காளி, மளிகை, என நிரப்பி இருபிள்ளைதாட்சி  போல் 
காட்சி தரும் கால் சட்டை 

எத்தனையோ அழுக்கு, எண்ணெய் பசை எதனாலும் அதன் கலரை மாற்ற முடியாது
 அதற்கு ஆகாத ஒரு பொருள் உண்டென்றால் அது தண்ணீர் தான்

 அடுத்த முறை சத்துணவில் புதிய கால் சட்டை கொடுக்கும் வரை அதுதான் முழு நேர சட்டை எனக்கு

 முழுக்கால் சட்டை வித வித வண்ணத்தில் போட்ட பின்பும் இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது அந்த காக்கி கால் சட்டை

-சாமி.

Saturday, January 21, 2023

*🙏மனமே அமைதிகொள்🙏*

*_✍️ படைப்பு:_*
*════════*

*⚜️ ஒரு அரசன் தனது மந்திரியை அழைத்து:...*

*⚜️ இதோ பார் மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன்.*

எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. 

இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது.

 சலிப்பும், வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது. 

ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே, 

அவன் என்னை விட 
வாழ்வில்  மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகிறேன்.

 ஆனந்தத்தில் அவன் 
மிதக்கிறான். பார்க்க பொறாமையாக 
இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டான். 

உடனே அந்த மந்திரி, அரசே! அந்த 
சேவகனிடம் 99 ஆட்டத்தை  பரீட்சித்துப் 
பாருங்கள்' என்றான். 

அதற்கு அரசன்: அது என்ன 99 ஆட்டம்? 
புதுமையாக இருக்கிறதே!" என்றான். 

அதற்கு மந்திரி சொன்னான், 99 ஆட்டம் 
என்பது 99 பொற்காசுகளை எடுத்து 
ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு 
வாசலில் வைத்துவிடுங்கள். 

"100 பொற்காசுள் உங்களுக்கான 
அன்புப் பரிசு " என்று அதிலே எழுதி 
வைத்துவிட்டு வந்துவிடுங்கள். 

பின்பு என்ன நடக்கிறது என்று 
பொறுத்திருந்து பாருங்கள்!" என்றான். 

அப்படியே அரசனும் செய்துவிட்டு 
அவதானித்தான்.

பொற்காசுள் நிறைந்த 
பையைக்கண்ட சேவகன் ஆனந்தத்தில் 
மிதந்தான். 

பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது.

 கட்டாயம் ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்' என மனதில் நினைத்துக்கொண்டான். 

அதன்படி அவனும், அவனது மனைவி, பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர்.

 தேடித்தேடி இரவும் முடிந்து பொழுதும் விடிந்தது, 

தேடல் மாத்திரம் முடிந்தபாடில்லை. 

கோபமடைந்த சேவகன் அவர்கள் மீது 
எரிந்துவிழத் தொடங்கினான். அவன் 
மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது.

மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான். 

புன்முறுவல் பூத்திருந்த அவனது முகம் சிடுமூஞ்சாக மாறியிருந்தது. தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் ஓரமாக நின்று 
பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு 
99 ஆட்டம் என்றால் என்னவென்று புரிந்து போய்விட்டது.  

🙏அதுதான் நண்பர்களே!....
அந்த வல்ல இறைவன் நமக்கு 
வழங்கிய 99 வகையான 
செளபாக்கியங்களோடு இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். 

வாழ்வில் நமக்கு கிடைக்காத 
அந்த ஏதோ ஒரே ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு 
வாழ்ந்து வருகிறோம். ஏங்கித் தவிக்கிறோம்.  

*கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒன்றுக்காக மனக்கவலையோடு வாழ்துவருகிறோம்.*

*🙏மனமே அமைதிகொள்🙏🌹*

Saturday, January 14, 2023

என் கண்பட்டுவிடும் என எதையும் பகிர மறுக்கிறாய் நீ
உன் கண்ணில் எனதெல்லாம் படவேண்டும் என பகிர்ந்து விடுகிறேன் நான் 

-சாமி.

Tuesday, January 10, 2023

மலரே உன் மலர்மடியில் மகனாய்
பிறப்பாய் என நாங்கள் மகிழ்ந்திருக்க

தளிரே நீ இத்தரணியில் எங்கள் மகனாய் பிறக்காமல் ஏனடா கடவுளின் மகன் ஆனாய்

மறுபிறப்பாய் மறுவுறுவாய் மீண்டும்
மலர் மடியில் பிறப்பெடுப்பாயா மகனே நீ எங்களை மகிழ்விக்க.


-சாமி.



Friday, January 6, 2023

BUSY..........

இப்பொழுதெல்லாம் வேலையே இல்லையென்றாலும் busy என்றே சொல்லிக்கொள்கிறேன்

ஒவ்வொரு message க்கும் சில மணி நேரம் கழித்தே பதிலிடுகிறேன் 

வரும் அழைப்புகளுக்குக்கூட
அப்பறம் பேசுகிறேன் என்று பதிவிடுகிறேன்

நண்பர்கள் இன்று சந்திக்கலாமா என்று கேட்டால்க்கூட அப்பறம் பார்க்கலாம் என்கிறேன்

"U had breakfast?" என்று வரும் இடுகைக்கு
" I had dinner " என்ற பொழுதில் பதிலிடுகிறேன் 

இவ்வளவை செய்யும் நான்
என் இடுகைக்கு உடனே பதில்
வரவில்லை என காயப்படுகிறேன்

இப்பொழுதெல்லாம் வேலையே இல்லையென்றாலும் busy என்றே சொல்லிக்கொள்கிறேன்.

-சாமி.









பட்(ட)டு மரம்

எங்க ஊரில் பட்ட மரம் ஒன்னு ரோட்டோரத்தில் இருக்கு

பயணிகளுக்கு அது "பட்ட மர பஸ் ஸ்டாப்"

அதில் பச்சை கிளிக்கு
பக்குவமாய் ஒரு பொந்து வீடு

புதியவர்களுக்கு "பட்ட மரத்துக்கு பக்கத்து தெரு" வழிக்காட்ட உதவும்
லேண்ட் மார்க்

மரங்கொத்திக்கு தனது பட்டைக்குள் 
புழுவை ஓளித்து உணவிடும் அட்சய பாத்திரம்

எங்க ஊரு ஆசாரிக்கு அது ஒரு பீரோ 
இரண்டு பெஞ்சு

எங்க ஊரு மனிதர்களுக்கு முதுமையின்
கொடுமையை காட்டி நிற்கும் தத்துவம்

பல புயல் மழையை இலை கிளை துணை இல்லாமல் எதிர்த்து நின்று
வென்ற தனிமரம் 

இப்படி  வாழ்ந்து வழிகாட்டி நிற்கும்
அம்மரத்திற்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர் " பட்டமரம்".

-சாமி.

Wednesday, January 4, 2023

தலையில் வாங்கிய குட்டு

மைதானத்தில் நடந்த வாத்து நடை

கையில் வாங்கிய பிரம்பு அடி

தரையில் போட்ட முட்டிக்கால் 

வகுப்பறையின் வாசலில் நின்றது

பெஞ்சில ஏறி நின்றது

காதில் கிள்ளு வாங்கியது

பத்துமுறை எழுதியது

தோப்புக்கரணம் போட்டது

இவை ஏற்படுத்திய வலிகள் தான்

இன்னும் என்னை வழிநடத்துகிறது
ஒழுக்கமான வழிகளில்.


-சாமி.





Monday, January 2, 2023

நம்மிடம் எல்லாம் இருந்தும் 
மனதில் ஒரு வெறுமை
திருப்தியின்மை
போலித்தனம்
இவையெல்லாம் நாம் உணர்கிறோம்

இது ஏன்

மனிதர்களிடம் ஆத்மார்த்தமான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பும் தொடர்பும் இல்லாததே என நான் நினைக்கிறேன்

இப்பொழுதெல்லாம்
அன்பு பாசம் அக்கறை எல்லாம் 
வெறும் வார்த்தைகளில் மட்டுமே
வெளிப்படுகிறது
உள்ளார்ந்து மனதில் இருந்து வருவதில்லை.

நம் முன்னோர்கள் இப்படியில்லை
அவர்களிடம் எதுவும் இல்லையெனினும்
அன்பான வெள்ளந்தியான
மனதுடன் மற்ற மனிதர்களுடன் நெருக்கமான எதிர்பார்ப்பில்லாத
ஆத்மார்த்தமான தொடர்பில் இருந்தனர்
அவர்களின் வாழ்விலிருந்து
கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.


-சாமி.




இன்று உலகுக்கு தேவைப்படும்
கல்வி " அன்பு செய்வது எப்படி" 
என்பதுதான்
இதை தவிர எல்லாம் சொல்லி
தரப்படுகிறது.

-சாமி.