நாம் அறிவை வளர்க்கும்
புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், தவறில்லை
அதே வேளையில்
சிந்தனையில் உணர்வில்
மாற்றம் ஏற்ப்படுத்தும்
புத்தகங்களை படிக்கும் போது
மனிதனால் இந்த சமூகத்தில்
ஏற்படும் பிரச்சனைகள்
குறையும்.
மிகப் பெரிய மாற்றங்களை இது காலப்போக்கில் ஏற்படுத்தும்.
அதுவும் மனிதர்களை
சக உயிர்களை, இயற்கையை
கையாளும் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு
இந்த புத்தக வாசிப்பை
கட்டாயம் ஆக்க வேண்டும்
சக மனிதனின்
சக உயிரின் வலி புரியாதவர்கள் மற்றும்
உயிர்நாடியான இந்த இயற்கையின்
முக்கியத்துவம் தெரியாதவர்கள்
அறிவை மட்டுமே கொண்டு
சிந்திப்பதால் பல பிரச்சனைகள்
எழுகின்றன,
அவர்களை மனதை பண்படுத்தவும்
பக்குவபடுத்தவும் புத்தக வாசிப்பு நிச்சயம் பயண்படும்.
சில முடிவுகளை அறிவை பயன்படுத்தியும்
சில முடிவுகளை மனதை பயன்படுத்தியும்
முடிவு எடுக்க இந்த வாசிப்பு அவர்களுக்கு கைகொடுக்கும்.
கதவடைத்து இருளாய்
குறுகி கிடக்கும் மனித மனங்களை
விசாலமான ஒளி பொருந்திய மனங்களை உருவாக்க
புத்தக வாசிப்பு வழி வகுக்கும்.
எல்லா அலுவலத்திலும் புத்தகம் வாசிப்பதற்கும்
அதன்பின் உரையாடடுவதற்கும்
நேரம் இருக்கும் என்றால்
சிந்தனை, செயல், சேவை மாற்றம் தானாகவே வரும்.
-பூமி.சாமி.