Sunday, September 27, 2020

எதுவும்_நிரந்தரமில்லை

#எதுவும்_நிரந்தரமில்லை

*உலகப்புகழ்பெற்ற #டிசைனர்.  சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்*

+"#மரணத்தை_விட_உண்மையானது_
#இந்த_உலகத்தில்_எதுவுமே_இல்லை. ! "

+  இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட்_கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது . ஆனால் நான் #சக்கர_நாற்காலியில் அழைத்து 
செல்ல படுகிறேன்.!

+  இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது.  ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.!

+  என் #வங்கி_கணக்கில் ஏராளமான பணம் கிடைக்கிறது ஆனால் எதுவும் எனக்குப்பயன் இல்லையே.!!

+  என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில்  ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன். 

+  இந்த உலகத்தில் உள்ள ஐந்து #நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.  ஆனால் மருத்துவமனையில் உள்ள #ஆய்வகங்களுக்கு  மற்றொரு #லேபிற்க்கும்  மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!

+  நான்தினசரிலட்சக்கணக்கானவர்களுக்குஆட்டோகிராப்போட்டுக்கொண்டிருந்தேன் . ஆனால் இன்று மருத்துவர்களின் பரிந்துரை தான் எனது #ஆட்டோகிராப். !

+   அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள்.  ஆனால் இன்று என் #தலையில்_முடியே இல்லை .

+  உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் #உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !

+  தனியார் #ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன்.  ஆனால் இன்று மருத்துவமனை வராந்தாவிற்கு வருவதற்கு #இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?

+   எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை.  எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால் 
சில #அன்பானவர்களின்   #முகங்களும் 
அவர்களது #தொழுதல்களும்  என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. !

பகிர்வு

#நிதர்சனம்

Friday, September 25, 2020

பாடும் நிலா பாலு.

பாடி வந்த நிலா
இனிய பாடப்படும் நிலவாக
வானில் ஒளிரும்.

பரிணாம கோட்பாடு

"மனசாட்சி" என்ற சொல் விரைவில்
வழக்கொழிந்து போகும். 

சாமியின் அனுபவம்.

நல்லவற்றை எண்ணி துணிந்து செயல்படு

"பிறர்  நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்" என்று எண்ணி எண்ணி
செயல்படுவது ஒருவித மனவியாதி.

"நாம் நம்மை பற்றி எவ்வளவு உயர்வாக நினைக்கிறோம் " என்பதே இவ்வுலகம் உனக்கு சொல்ல வைத்திருக்கும் செய்தி.

சாமியின் சிந்தனை.

Thursday, September 24, 2020

விலை மதிப்பிட முடியா பொக்கிஷம்.

வேஷம் போடும் உலகத்தில்
உண்மையான பாசம் காட்டுபவர்களை
எக்காரணம் கொண்டும் தொலைத்து விடாதீர்கள்.

சாமியின் அனுபவம்.

Wednesday, September 23, 2020

எனவே அதிகம் உதவுங்கள் பிறர்க்கு.

ஒருவர் நம் நினைவில் வரும்போதெல்லாம் 
அவர் செய்த உதவிகளும் உபத்திரங்களும்
எடைப் போடப்படுகின்றன.

சாமியின் அனுபவம்.

Friday, September 18, 2020

வயது ஆக ஆக

வயது முன் செல்கிறது
மனது பின் செல்கிறது
அறிவு மேல் செல்கிறது
உடல் கீழ் செல்கிறது
நான் உள் செல்கிறேன்.


சாமியின் சிந்தனை.

Wednesday, September 16, 2020

அன்பில் எதிர்பார்ப்பு முக்கியம் இல்லை தான் ஆனாலும்

அன்பின் முதலீடும்  பங்கு சந்தை முதலீடு
போல்தான்,
சரியான இடத்தில் போட்டால் பல்கி பெருகி வரும்,
தவறான இடத்தில் போட்டால் முதலீடோடு நிம்மதியும் சேர்ந்து பறிபோகும்.

சாமியின் சிந்தனை.

Tuesday, September 15, 2020

நேரத்தை வீணாக்காதீர்கள்.

உங்களின் உழைப்பு மற்றும் நேரத்தின்
மதிப்பரிந்தவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழையுங்கள்.

சாமியின் சிந்தனை.

Saturday, September 12, 2020

ஓஷோ மொழிகள்

"எப்போதும் பிறர் மூலமாகவே
 மகிழ்ச்சியோ துக்கமோ அடைகிறீர்கள்!!!

அவர்கள் உங்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.
நீங்கள் அவர்களுடைய கை பொம்மை ஆகி விடுகிறீர்கள்.

அவர்களிடம் உங்களை ஆட்டுவிக்கும் ரிமோட் கண்ட்ரோல் உள்ளது .

அவர்கள் சிறிது முகம் சுழித்துப் பார்ப்பது கூட
உங்களை துன்பம் அடையச் செய்யும்.

அதைப்போல அவர்களுடைய ஒரு மகிழ்ச்சியான பேச்சே
ஒரு மகிழ்ச்சியான பார்வையே
உங்களை ஆனந்தத்தில் தள்ளும்.

ஆகவே நீங்கள் அடுத்தவர் கருணையில்தான் வாழ்கிறீர்கள்.

பெரும்பான்மையோர் அடிமை வாழ்வு தான்
வாழ்கின்றனர் .

அவர்கள் உங்கள் மகிழ்ச்சி , துக்கம் , அமைதி , துயரம்
இவற்றை அவர்கள் நிர்ணயிக்கும் போது

நீங்கள் எப்படி அமைதியாக ஆனந்தமாக இருக்க முடியும்?

சுதந்திரமானவராக இருங்கள் .

உங்கள் சந்தோசம் ,மகிழ்ச்சி , ஆனந்தம் எல்லாம்
உங்களைச் சார்ந்தே இருக்கட்டும் .

அப்போது மற்றவர்கள் யாரும் உங்களை
அடிமைப் படுத்த முடியாது"!!!

#ஓஷோ

Wednesday, September 9, 2020

பிடித்த சொல், செயல்

இக்கட்டான தருணங்களில்,
ஒரு மனிதனுக்கு
ஆயிரம் ஆறுதல் வார்த்தைகளை விட
அன்பான ஒரு செயல்
தேவைப்படுகிறது.

சாமியின் சிந்தனை.

Tuesday, September 8, 2020

மகிழ்ச்சி

என் கஷ்டங்கள் சிலருக்கு மகிழ்ச்சி,
அதுவும் எனக்கு மகிழ்ச்சி தான்,
இப்படியேனும் பிறரை தன்னால் மகிழ்விக்க முடிகிறதே என்று.




Saturday, September 5, 2020

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்'

இந்த சமூகம் ஆசிரியர்களுக்கு
சரியான மரியாதை கொடுக்கவில்லையோ என்ற ஆதங்கமும்,
சமூகம் நம்மை மதிக்கும் அளவுக்கு நாம் மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்ள வில்லையோ என்ற சந்தேகமும் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது.

'இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்'


Friday, September 4, 2020

மன வறுமை

பண வறுமை 
தமக்கு துன்பம்,
மன வறுமை
பிறர்க்கு துன்பம். 

சாமியின் சிந்தனை.

Thursday, September 3, 2020

கசப்பு-இனிப்பு

கசப்பை பிறருடன் பகிர்வதற்கும்
இனிப்பை தானே புசிப்பதற்கும்
எத்தனிக்கிறது மனசு.

சாமியின் சிந்தனை.

Wednesday, September 2, 2020

நகர்கிறது வாழ்க்கை

அன்பினால் அக்கறையினால் 
ஏற்படும் மகிழ்ச்சியையும்
காயங்களையும் எடைப்போட்டுக் கொண்டே நகர்கிறது வாழ்க்கை.

சாமியின் சிந்தனை


Tuesday, September 1, 2020

மனதின் மாயை

மணல் அளவு எதிர்பார்ப்புகள் கூட
மலையளவு ஏமாற்றத்தை தருவது தான்
மனதின் மாயை.

சாமியின் அனுபவம்