Thursday, December 31, 2020

மழை-கண்

ஒரு சிமிட்டலலில்  ஒரு கணம்
தொலைந்து போகுமோ என எண்ணி
சிமிட்டாமலேயே மழையை ரசிக்கிறது கண். 

-சாமி.

மழை

மணலின் மாசை நீக்கும் மழை
மனித மனதின் மாசையும் நீக்கீனால்
உலகம் அன்பால் நிறைந்திருக்கும்.

-சாமி.

வருட கடைசி நாள் மழை.

2020 வருடத்தின் துன்பங்களை
துயரங்களை கழுவ முனைகிறது
மழை.

-சாமி.

புதிதாய் பிறப்போம் உயிர்ப்போடு வாழ்வோம்.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் புதிதுதான்,
ஒவ்வொரு நாளும் ஒரு புதுவருடத்தின் தொடக்கம் தான்,
தாய்பூமி சுற்றும் வட்டத்தில் முதலேது முடிவேது,
நீ என்று உண்மையான மனிதனாக வாழ 
ஆரம்பிக்கிறாயோ அதுதான் உன் வயதின் வருடத்தின் தொடக்கம்,
உன் புகழும் உன் பெயரும் என்றுவரை இவ்வுலகில் நினைவு கூறப்படுகிறதோ அதுதான் உன் முடிவு.

உலக கணக்கின்படி அனைவருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

-சாமி.

Tuesday, December 29, 2020

ரௌத்திரம்

நம் ரத்தம் குடித்து வலியை
ஏற்படுத்தும் கொசுவை நசுக்க
செல்லும் நம் கைதான்
ஓட்டளிக்கவும் போகிறது.

-சாமி.


நம்பிக்கை

நம்மை பிரச்சினைகள் சூழும்போதெல்லாம்,
உலக இருளை கிழித்துக்கொண்டு
வரும் மின்மினி பூச்சியின் ஒற்றை 
ஒளிக்கீற்றுதான் நம்பிக்கை தருகிறது.

-சாமி.

Monday, December 28, 2020

ரொம்ப நல்லவங்க..

நமது துன்பம் 
பகிரும்போது
இரட்டிப்பாகிறது
இன்பமாக சிலருக்கு.

-சாமி.

Sunday, December 27, 2020

தியாகம்

வேரின் வலி உணராமலேயே
கனியை சுவைத்து கொண்டு இருக்கிறோம்.

-சாமி.

Sunday, December 20, 2020

வாழ்க்கை.

நிலையாமை மேடையில்
நிலையான நடிப்பு.

-சாமி.

நடிப்பு

மனம் ஒன்றை நினைக்கிறது
அது கண்களில் தெரிகிறது,
வார்த்தை நேர் எதிராய் வருகிறது
அட என்ன......

-சாமி.

Saturday, December 19, 2020

அழுத்தம்-அழுகை.

அழுத்தத்தை குறைக்கும்
அருமருந்து அழுகை.

-சாமி.

பெயருக்கு .....

சில சமயங்களில்
கேள்விகளால் பதில்கள்
நிர்பந்திக்கப்படுகின்றன.

-சாமி.

Saturday, December 12, 2020

அதிசயம்

என்னோடும் வருகிறது
அவளோடும் செல்கிறது நிலா.

-சாமி.

பிரமாண்டம்

சவாரியிலிருந்து இறங்கியபின்
மனதில் ஏறி நிற்கிறது யானை.

-சாமி.

Monday, December 7, 2020

What is Maturity of Mind ?

*மன முதிர்ச்சி என்றால் என்ன?*

 *What is Maturity of Mind ?*

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு 
    நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
    ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் 
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் 
    நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் 
என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind 
      without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய 
    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs 
      and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
     என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected 
      with material things.

*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்*
*Our life will be simple if only we practice 7 or 8 of the above 12*

Live your Life & Love your Life.

படித்ததில் பிடித்தது.

மறதி

தாய்மொழி எழுத்து மறந்து போகையில்
மறதியை மறக்க நினைக்கிறது மனசு.

-சாமி.

எது வாழ்க்கை

பிடித்ததை செய்வதா?
பிறருக்கு உதவுவதா?
அன்பு செய்வதா?
அறிவு புகட்டுவதா?
பயணப்படுதலா?
பற்றற்று வாழ்வதா?
தேடி திரிவதா?
தேங்கிப் போய் இருப்பதா?
அதன் போக்கில் விடுவதா?
கடிவாளமிட்டு கட்டுப்படுத்துவதா?
காதல் செய்வதா?
கவலையற்று வாழ்வதா?
தோல்வியில் கற்பதா?
வெற்றியில் உழல்வதா?
இயற்கையில் மகிழ்வதா?
இல்லை செயற்கையாய் செயல்படுவதா?
வேடிக்கை பார்ப்பதா?
வீருக்கொண்டு எழுவதா?
நினைத்து மகிழ்வதா?
தோண்டி துவழ்வதா?
வேண்டி திரிவதா?
விதியின் படி போவதா?
இக்கணம் வாழ்வதா?
இல்லை, இப்படியே புலம்புவதா?
எது வாழ்க்கை.

-சாமி.


சுற்றி சுழலும் மனசு

சுற்றும் பூமியை,
சுற்றாமல் சுற்றி சுற்றி வருகிறது மனசு.

-சாமி.

மழை எனும் மந்திரம்

மேலிருந்து கீழ் விழுந்து
என் மனதை கீழிருந்து மேல் நோக்கி
பறக்க செய்கிறது மழை.

-சாமி.

Saturday, December 5, 2020

கருப்புதான் எனக்கு பிடித்த....................

வெண் முகில்கள் அழகு அவ்வளவே,
கரு முகில்கள்தான் கவிழ்த்து விட்டு செல்கின்றன மழையை.

-சாமி.

Friday, December 4, 2020

மழை மனம் மகிழ்ச்சி

ஒவ்வொரு முறை மழையை
பார்க்கும் போதும், 
நான் சிறுவயதில் வேண்டுமென்றே
மழையில் நனைந்ததும் அதன் மகிழ்ச்சியும் குளிர்ச்சியும் மனதை நிறைக்கிறது.

-சாமி.