Sunday, January 16, 2022

கடினமான சூழ்நிலையில் கற்றுக் கொண்டவைகள்

1. உன்னை யாரோடும் எதற்கும் ஒப்பிட்டு மன அழுத்தம் அடையாதே.
2. எவ்வித இக்கட்டிலும் தவறை செய்ய ஒப்புக் கொள்ளாதே.
3.செல்போன் கையில் வைத்துக் கொண்டு அலையாதே. இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை பார்த்தால் போதும்.
4. எதற்கும் எப்பொழுதும் அஞ்சாதே. பயம்தான் மரணம்.
5.செய்வதை திருத்த செய் இல்லையெனில் செய்யாதே.
6. யாரையும் முழுமையாக  நம்பாதே.
7. ஃபோனில் தேவையில்லாமல் பேசாதே
குறுஞ்செய்தி அனுப்பாதே.
8.முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்.
9. பேராசை கொண்டு அலையாதே.
10.எதையும் உன்னால் சமாளிக்க முடியும் என்பதை நம்பு.
11. கடவுளையும் பிரபஞ்சத்தையும் முழுமையாக நம்பு.

Thursday, January 13, 2022

இனிய பொங்கல் திருநாள்  நல்வாழ்த்துக்கள்.

நன்றி.
இரா.ரெங்கசாமி

Friday, January 7, 2022

தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

பாரதி.