Friday, December 9, 2011

நன்றி கெட்ட ---------

நிகழ்கால சுகத்தில் கடந்த காலத்தை மறந்த

உனக்கு ,எதிர்காலம் கசந்த காலம் ஆகும்போது

கடந்த காலம் ஞாபகம் வரும்.

Tuesday, November 22, 2011

சுயநலம்

குடும்பம் ,ஒற்றுமை ,பாசம், அன்பு , அக்கறை

எல்லாவற்றையும் நாம் பேசுவோம்,

நமது சுயநலம் பாதிக்காதவரை.

இப்பொழுதே செய்து முடி

ஒத்திபோடுவதை ஒத்திபோடும் நாளே,
உன் வெற்றிக்கு ஒத்திகை பார்க்கும் நாள்.

Friday, August 12, 2011

பாசம்

பக்கத்தில் இருக்கும் உதவியவனுக்கு
நன்றி உணர்வை காட்டமறந்த நான்,
பஸ் ஏறி ரயிலேறி
கோயில் கோயிலாய்
நேர்த்திகடன் செலுத்தினேன்

மனைவி

கணவனே கண் கண்ட தெய்வம் ,
பக்தை சொல்வதை தெய்வம் கேட்க்கும்வரை.

Thursday, July 28, 2011

மனைவி

ஆண்கள் எல்லோர்க்கும் தாயே முன்னறி தெய்வம்,
திருமணம் ஆகும்வரை.

Monday, July 25, 2011

உடன்பிறப்பு

உடன் பிறந்து தனிமையாய் இருப்பதைவிட

தனிமையாய் பிறப்பதே மேல்.

Monday, July 18, 2011

ஞானம்

மனிதனைவிட
மரம் மேலானது
மன அமைதிக்கு.

Sunday, May 8, 2011

தஞ்சாவூர் டு காரைக்கால்

சில இடங்களுக்கு நாம் சென்றால் அங்குள்ள

சிலருக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகும் ,

சில இடங்களுக்கு நாம் செல்லும்போது

நமக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகும் ,

மேறசொன்ன இரு இடங்களுக்கும்

நாம் செல்வதை குறைப்பது நமக்கு நல்லது .

Tuesday, March 15, 2011

ஜப்பான் சுனாமி

ஒய்வு இல்லாமல் உழைத்து உழைத்து

ஓடாய் போன எம் மக்களுக்கு நிரந்தர

ஒய்வு கொடுக்க நினைத்தாயோ

போலியான உறவு அல்லது பொய்யான சொந்தம்

இவர்களிடம் தாமரை இலையில் தண்ணீராக

இருக்க நினைத்து , முடியாமல்

மீண்டும் மீண்டும் முள்ளில் பட்ட

சேலையாய் கிழிகிறேன நான் .

Tuesday, March 8, 2011

மாமனார் -மாமியார்

நம் பெற்றோரை நாம் தேர் தடுக்க முடியாது என்பதால்,

நமக்கு இன்னுமொரு பெற்றோரை தேர் தேடுக்க

வாழ்க்கை கொடுக்கும் மற்றொரு வாய்ப்பு இது.

Friday, February 18, 2011

அன்பு

சில பேர் சொல்கிறார்கள் " உண்மையான அன்பு " என்று

அப்போ "பொய்யான அன்பு" என்று,ஒன்று அவர்களிடம்இருகிறதா என்று கேட்டுபாருங்கள் .

உண்மையாக இருந்தால்தான் அது "அன்பு" என்று அவர்களிடம் சொலலுங்க்ள .

Sunday, February 6, 2011

குறுந்தகவல்

அலை கற்றையில் அலை அலையாய்

செல்கிறது என் மனது .

வகுப்பு

கற்பிக்க நினைத்து உள்ளேப்போய்

தினம் தினம் கற்று திரும்புகிறேன் நான் .

பேராசிரியர் .