Thursday, June 20, 2019

ஆசிரியர்களின் பணி

இந்த காலி இடத்தில் என்ன செய்ய போடுகிறீர்கள் என்று கார்க்கி கேட்டதும் செகாவ் உற்சாகமாகி இங்கே ஒரு சானிடோரியம் அமைக்க இருக்கிறேன் என்று சொன்னார்

      ஒரு நோயாளிகளுக்காக அப்படி ஒரு திட்டம் இருக்கக்கூடும் என்று நினைத்த கார்க்கி இது போன்ற கிராமப்பகுதி மக்களுக்கு நல்லதொரு மருத்துவ சிகிச்சை மையம் தேவை என்று பாராட்டினார்.

        உடனே செகாவ் 'நான் சிகிச்சை மையம் அமைக்க விரும்புவது நோயாளிகளுக்கு அல்ல ஆசிரியர்களுக்கு. உண்மையில் அது என்னுடைய கனவு. இந்த இடத்தில் நிறைய தங்குமிடங்கள் அமைத்து ரஷ்யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்க வைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத் தையும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

    இன்றுள்ள ஆசிரியர்களை ஒரு நோய் பற்றியிருக்கிறது. அது கல்வி குறித்த அலட்சியம். அது களைந்து எறியப்பட வேண்டிய நோய்.

    ஆகவே ஆசிரியர்கள் இங்கே தங்கிக் கொண்டு நிறைய படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். அத்துடன் இசை, ஓவியம், பாடல், இலக்கியம் என்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து நேரடி அனுபவம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

      ஒருவன் ஆசிரியராக பணியாற்றுவது என்றால் சகல விஷயங்களி லும் நேரடியான அனுபவம் உள்ள வன். அது குறித்து ஆழ்ந்து சிந்திப்பவன் என்றுதான் பொருள். ஆகவே ஆசிரியர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கென தனியான முகாம்கள் அமைக்கப்படுவது அவசியம்.

ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்க 'வண்டும். எப்படி ஒரு பாடகன் தன்னுடைய பாடும் திறனை தினமும் வளர்த்துக்கொள்வானோ அப்படி கற்றுத் தருவதை நுட்பமாக வளர்த்து எடுக்க வேண்டும்.

    பொதுமக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே ஒரு இளக்காரம், கேலியே உள்ளது. அது மாற வேண்டும். மக்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். ஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபி ளுக்கு கிடைக்கும் மரியாதை ஆசிரியருக்கு கிடைப்பதில்லை. போலீஸ் காரன் குற்றவாளிகளைப் பிடிக்க வருகிறான். அவனை நாம் வரவேற்று மரியாதை செய்கிறோம். ஆசிரியர் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்து எடுக்க முயற்சிக்கிறார். அவரை நாம் மதிப்பதேயில்லை. அது மாற வேண்டும். முதலில் ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு எதிராக எவரும் கை நீட்டிப் பேசவோ, பரிகாசம் செய்யவோ கூடாது.

     ஆசிரியர்களின் பணி என்பது ஒருவகையில் போர்வீரனை விடவும் சவால் நிறைந்தது. ஆகவே அவர்களின் அன்றாடத் தேவைகள். குறிப்பாக குடும்பத்திற்கான அடிப்படைத் தேவைகளை, அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கிறோம் என்று ஆசிரியர் உணரும் போது தான் கல்வி நலிவடையத் துவங்குகிறது. அது மாற்றப்பட வேண்டும்

     பிரெஞ்சு தேசம் உலகம் முழுவதும் பெயர் பெற்றிருப்பதற்கு காரணம் அங்குள்ள கல்வி முறையும் அதனால் உருவான கலாச்சார சூழலும்தான். அதை நாம் பெற்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போல இந்த சமூகம் நொறுங்கி விழுந்துவிடும்' என்று சொல்லிவிட்டு, செகாவ் இப்படி நானாக புலம்பிக்கொண்டிருக்கிறேன். இதை யார் எடுத்துக்கொள்ளப் போகி றார்கள். வாருங்கள் தேநீர் அருந்தலாம், என்று சொல்லி கார்க்கியை தன்னோடு அழைத்துக்கொண்டு செல்கிறார் செகாவ்.இந்த உரையாடல் நடைபெற்று நூறு வருடங்களுக்கும் மேலாகிறது.

Monday, June 17, 2019

கழுகு

காட்டிற்குப் போன #வேட்டைக்காரன் ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தான்.

அதை தன் வீட்டில் அடைக்காக்கும் #கோழிக்கூட்டில் வைத்தான். கொஞ்ச நாளில் குஞ்சிகள் வெளிவந்தன.

கழுகுமுட்டையும் குஞ்சானது. மற்ற கோழிக்குஞ்சுகளோடு இந்த கழுகு குஞ்சும் சேர்ந்து திரிந்தது. க்யா.. க்யா என கத்தியது. அவைகள் குப்பைகளைக் கிளறி புழுப் பூச்சிகளைப் பிடித்து தின்றதைப் போலவே இதுவும்தின்றது. வருடங்கள் ஓடின. எல்லாக் குஞ்சுகளும் வளர்ந்து பெரிதாயின.

#கழுகுகுஞ்சுகளும் வளர்ந்து கழுகு ஆனது. ஆனால் தன்னை கழுகு என்று நினைக்காமல் கோழி என்றே நினைத்தது.

ஒரு நாள் எல்லாக் கோழிகளும் குப்பைமேட்டில் மேய்ந்து கொண்டிருந்த்ன. மேகங்கள் இல்லாத நீல வானத்தில் வெகு உயரத்தில் ஒரு பறவை இறக்கைகளைலாவகமாக கன கம்பீரமாக தரையைப் பார்த்தபடி பறந்துக் கொண்டிருந்தது.

இதை கவனித்த இந்த கழுகுக்கோழி "அடடா...! என்ன அழகான கம்பீரமான பறவை..!மேலே பார் என்றது. பக்கத்தில் இருந்த கோழி, அதன் பெயர் #கழுகு! பறவைகளின் ராஜா..!

அது போல் பறக்க ஆசைப்படாதே!
ஒரு நாளும்பறக்க முடியாது... என்றது கேலியாகதான் யார் என்பதை உணராது தன் பிறவியையே மறந்து போன இந்த கழுகுகோழி கப்சிப் என பேசாமல் இருந்துக்கொண்டது.

பின் அது ரொம்பநாள் வரையிலும் மற்றக் கோழிகளை போலவே இருந்து கடைசியில் இறந்தது.

தன்னைப்பற்றி அது உணர்ந்து இருக்குமானால், அதுவும் மற்ற கழுகுகளைப் போல வானத்தில்,உயரத்தில் பறவைகளின் #ராஜாவாக பறந்திருக்கலாம்.

#மனிதர்களிலும் ரொம்ப பேர் இப்படித்தான் #தன்_திறமை_உணராது சாதாரண மனிதர்களாகவே வாழ்ந்து தனக்கும், மற்றவர்களுக்கும் #உபயோகமில்லாமல் வாழ்ந்து மறைகிறார்கள்...!

Sunday, June 9, 2019

பிரச்சினைகளை எளிதாக கடந்து செல்வது எப்படி?!

பிரச்சினைகளை எளிதாக கடந்து செல்வது எப்படி?!

வரும் பிரச்சினைகள் கண்டு ஓட வேண்டாம்.ஒளிய வேண்டாம்.

அது ஓடினால் துரத்திக் கொண்டே வரும்.ஓளிந்தால் உங்கள் மனதின் அடி ஆழத்தில் சென்று அது ஒளிந்து கொள்ளும்.

பிரச்சினைகளை எதிர் கொண்டு அதை வரவேற்று அதற்கு வாழ்த்து சொல்லுங்கள்.

அது உங்கள் விழிப்புணர்வை மேலும் கூர்மையாக்கும்.

பிரச்சினைகளின் வேர்களை விசாரியுங்கள்.அது விழுதுகள் விடுவதை தவிர்க்கும்.

பிரச்சினைகளின் உணர்வுகளை உள்வாங்கி அதை அசைபோட்டு நன்கு அனுபவியுங்கள்.

அந்த உணர்வுகளோடு உறவாடுங்கள்.அதனோடு கலந்து உறவாடி இரண்டறக் கரைந்து விடுங்கள்.

பிரச்சினைகளும் கரைந்து காணாமல் போய் விட்டதை உங்களால் உணர முடியும்!!!

#ஓஷோ