உள்ளாகி இருக்கிறோம் என்பது நன்றாக தெரிகிறது. எனவே முடிந்தவரை வீட்டில் உள்ளோரிடம் உரையாடுங்கள், வெளியில் உள்ள உங்கள் அன்புக்கு உரியவர்களிடம் தொலைபேசியில் உரையாடுங்கள் உங்கள் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துங்கள். உதவி தேவைப்படுவோர்க்கு முடிந்தால் உதவுங்கள்.
Saturday, May 29, 2021
Friday, May 28, 2021
தோல்வி-வெற்றி
வாழ்க்கையில் போராடி தோற்றுப்போவதும், ஒருவகையில் வெற்றிதான் ஏனென்றால் அதுதான்
வாழ்க்கையை புரிந்துக் கொள்ள உதவுகிறது.
-சாமி.
Monday, May 24, 2021
சிந்தித்து செயல்படு
நாம் பிறந்துவிட்டாலே மரணத்திற்கான
வரிசையில் நின்றுதான் ஆகவேண்டும்
ஆனால் நாம் நிற்க வேண்டிய வரிசை எண் நம்முடைய செயல்களால் தீர்மானிக்க படுகின்றன விதியால் அல்ல.
-சாமி.
Wednesday, May 19, 2021
WHY ME?by Arthur Ashe – Tennis Legend
The legendary Wimbledon Player who was dying of AIDS, which he got due to Infected Blood he received during a Heart Surgery in 1983!
During his illness, he received letters from his fans, one of which conveyed:
” Why did God have to select you for such a bad disease?”
To this Arthur Ashe replied :
⁃ 50 Million children started playing Tennis,
⁃ 5 Million learnt to play Tennis,
⁃ 500 000 learnt Professional Tennis,
⁃ 50 Thousand came to Circuit,
⁃ 5 Thousand reached Grand Slam,
⁃ 50 reached Wimbledon,
⁃ 4 reached the Semifinals,
⁃ 2 reached the Finals and
When I was holding the cup in my hand, I never asked God:
“Why Me?”
So now that I’m in pain how can I ask God:
“Why Me?”
Happiness … keeps you Sweet!
Trials … keep you Strong!
Sorrows … keeps you Human!
Failure … keeps you Humble!
Success … keeps you Glowing!
But only, Faith … keeps you Going!
Sometimes you are not satisfied with your life, while many people in this world are dreaming of living your life.
A child on a farm sees a plane fly overhead dreams of flying, while a pilot on the plane sees the farmhouse and dreams of returning home.
That’s Life!
Enjoy yours … If wealth is the secret to happiness, then the rich should be dancing on the streets.
But only poor kids do that!
If power ensures security, then VIP’s should walk unguarded.
But those who live simply, sleep soundly.
If beauty and fame bring ideal relationships, then celebrities should have the best marriages!
Live simply, be happy! Walk humbly and love genuinely!
WHY ME?
by Arthur Ashe – Tennis Legend #RIP
Inspired Quotes
I do not agree with what u have to say but I will defend to the death your right to say it.
Voltaire.
Monday, May 17, 2021
கல்வி வள்ளல் மறைவு
கல்வி வள்ளல் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரி தலைவர் அய்யா துளசி அய்யா வாண்டையார் மறைவு.
என்னுடைய அஞ்சலி.
கல்வி தந்த தாயும் தந்தையும் நீ.
ஒழுக்கத்தின் பிறப்பிடம் நீ.
இறையின் உறைவிடம் நீ.
முல்லைகொடிக்கு பாரியின் தேர் போல்
ஆயிரமாயிரம் குடி உயர கல்வித்தேர் தந்த வள்ளல் நீ
அன்பையும் ஒழுக்கத்தையும் கல்வியுடன் குழைத்து கொடுத்தவன் நீ
உண்மையான தானம் கல்விதான்
என உணர்ந்து எங்களை உயர்த்திவிட்டு போனவன் நீ
பகுத்தறிவு உள்ளவனும் உன்னை பாதம் தொட்டு வணங்கும் உன்னதன் நீ
நீ மறைந்தாலும் நீயிட்ட கல்வி விதைகள் உன்னை போற்றிக் கொண்டே இருப்போம்.
அய்யா நீங்கள் சாதா மனிதம் அல்ல சகாப்தம்.
இதயப்பூர்வமான இரங்கல்கள்.
மிகுந்த வருத்தத்துடன்
இரா.ரெங்கசாமி, கண்ணந்குடி மேற்கு.
Friday, May 14, 2021
1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை: படித்ததில் பிடித்தது.
1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!
1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.
♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…
♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.
♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…
♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…
♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…
♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…
♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…
♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…
♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…
♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…
♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…
♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…
♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…
♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…
♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…
♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…
♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…
♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…
♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…
♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…
♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…
♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…
♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…
♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…
♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…
♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…
♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…
♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…
♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…
♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…
♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…
♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…
♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…
♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…
♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…
♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…
♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…
Wednesday, May 12, 2021
*🌹அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!*🌹
*🌹அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!*🌹
*🟪அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது.🟪*
*🟣தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்...*🟣
*🟢1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.*
*🟢2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.*
*🟢3. சூடான தண்ணீரை குடிக்கவும்.*
*🟢4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.*
*🟢5. முட்டைகளை சாப்பிடுங்கள்.*
*🟢6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.*
*🟢7. பாதாம் சாப்பிடுங்கள்.*
*🟢8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.*
*🟢9. மட்டன் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.*
*🟢10. நாட்டுக்கோழி சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்க்கவும்.*
*🟢11. கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.*
*🟢12. அதிக தண்ணீர் குடியுங்கள்.*
*_🟦பிறருக்கு பயன்படும் என்ற நோக்கத்துடன் இத்தகவலை குழுவில் பகிர்வதும் தொண்டுதான்...!_🟦*
*💜என்றும் சமூக அக்கறையுடன் ..💜
Thursday, May 6, 2021
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*
வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*
இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.
*1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள்.*
*அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.*
*2) காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள்.*
*உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.*
*3) முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம்*.
*4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான நான்காவது பாடம்.*
*5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும்.*
*6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.*
*7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா? என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .*
*8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.*
*9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.*******************Who Will Cry When You Die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.*
*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, அழுதாய்...*
*உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*
*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.
*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.*
*3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.*
*4. அதிகாலையில் எழப்பழகுங்கள்*.
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*
*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.*
*6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.*
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*
*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*
*8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*
*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.
*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*
*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*
*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*
*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்*.
*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*
*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.
*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*
*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*
*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*
*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!*
*"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*"
*மேற்கண்ட *கருத்துக்களை பின் பற்றி,*
*ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....!!!!வாழ்க வளமுடன்*!
*இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது, கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல் வாழ்வதே ஒரு பெரிய யோகம்*.
*படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.*
Tuesday, May 4, 2021
வாதம் பித்தம் சிலேத்துமம்
💐உங்களுக்கு நீங்களே
வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள்
ஆச்சரியமாக இருக்கின்றதா..?
இதை படித்து முடித்த பின்னால் பாருங்கள் நீங்களும் ஒரு வைத்தியராக தான் இருப்பீர்கள்
அப்படியான ஒரு பதிவுதான் இது
முதலில் மனிதன் நோய் இல்லாமல் இருப்பதற்கும் நோயுடன் இருப்பதற்கும் என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும்
கண்டறிவதற்காக சித்தர்கள் சொன்ன சில வழிமுறைகளை இப்போது பார்ப்போம்
வாதம் பித்தம் சிலேத்துமம் எனும் முக்குணங்களும் நமது உடலில் மாறுபடாமல் இருந்தால் நமக்கு எந்த நோயும் வருவதில்லை இந்தக் குணங்களில் மாறுபாடு ஏற்பட்டு விட்டால் எல்லா நோய்களும் நமக்குள்ளே வந்துவிடுகிறது
முக்குணங்கள் மாறுபாட்டால் நோய்கள் வருகின்றது என்பதனை அறிந்து கொண்டோம் எனவே நமது உடலில் முக்குணங்களில் எது ஒன்று அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டால் போதும் அடுத்த நொடியே நமக்கு நாமே வைத்தியம் செய்து கொள்ள தயாராகி விடுவோம்
அதற்கான வழிகள்
நமது உடலில் வாதத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்
1 உடலெங்கும் வலிகள் உண்டாகும்
2 உடலில் அடிக்கடி புரட்டல் ஏற்படும்
3 நெஞ்சு கரிப்பதுடன் புளித்த ஏப்பம்
வரும்
4 உடலில் வாதம் ஏற்பட்டு விட்டால் எச்சில் சுவை சற்று புளிப்பாக இருக்கும்
5 சிறுநீரின் நிறம் தண்ணீரைப் போல வென்மையானதாக இருக்கும்
இதுவே வாதம் மிகுதியானால்உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
வாத குணம் உள்ளவர்கள் பகலில் தூங்கக் கூடாது
அடுத்து
நமது உடலில் பித்தத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்
1 கண்களில் பீளை வழியும்
2 அடிக்கடி தலைவலி உண்டாகும்
3உடலில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விட்டாலும் உடனே காய்ச்சல் வந்துவிடும்
.
4 நாக்கில் வறட்சி உண்டாகும்
5 எச்சிலின் சுவை சற்று கசப்பானதாக இருக்கும்
6 கை கால்களில் எரிச்சல் உண்டாகும்
7 சிறுநீரின் நிறம் சற்று மஞ்சளாக இருக்கும்
இதுவே பித்தம் மிகுதியானால்
உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
பித்த குணம் உள்ளவர்கள் கடும் வெயிலில் உலாவக் கூடாது
அடுத்து
நமது உடலில் சிலேத்துமத்தின் குணங்கள் அதிகரித்து இருந்தால்
1 உடலில் அடிக்கடி சளி உண்டாகும்
2 இளம் வெயிலில் சென்றால் கூட அதிகமாக வியர்வை சுரக்கும்
3 சில நேரங்களில் நெஞ்சு வலி உண்டாகும்
4 எச்சிலின் சுவை சற்று இனிப்பானதாக இருக்கும்
5 அடிக்கடி தொண்டையில் கபம் கட்டிக் கொள்ளும்
இதுவே சிலேத்துமம் அதிகமானால் உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்
சிலேத்தும குணமுள்ளவர்கள் குளிர்ச்சியான பொருட்களை உண்ணக் கூடாது குளிர் காற்றில் உலாவ கூடாது
நமது உடலில் எந்த குணம் மிகுதியாக இருக்கிறது என்பதை மேலே சொன்ன அறிகுறிகள் மூலமாக நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம்
சரி
வாதத்தின் குணம் அதிகமாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டால்
அதற்கான வைத்திய முறை
தேவையான பொருட்கள்
இஞ்சி 500 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
செய்முறை
இஞ்சியின் மேல்தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு விட வேண்டும் இதில் சுத்தமான தேனை ஊற்றி நன்றாக கிளறி பத்துநாட்கள் இதை வெயிலில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்
இதுவே வாத குணத்தை சம நிலைப்படுத்தும் மருந்து
இதை காலை வேளையில் மட்டும் ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் இதனால் வாதம் என்கின்ற குணம் சமநிலைப்படும்
பித்தத்தின் குணம் நமது உடலில் அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொண்டால்
அதற்கான வைத்திய முறை
தேவையான பொருட்கள்
சுக்கு 500 கிராம்
தரமான பனை வெல்லம் 500 கிராம்
செய்முறை
.
சுக்கின் மேல் தோலை சீவிவிட்டு இதை சூரணம் செய்து கொள்ளவேண்டும் இதனுடன் பனை வெல்லத்தையும் தூள் செய்து சுக்குடன் கலந்து பத்திரப்படுத்தி கொள்ளவும்
இதுவே பித்த குணத்தை சமநிலைப்படுத்தும் மருந்து
இதை மதிய வேளையில் ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் பித்தக் குணம் சமநிலைப்படும்
அடுத்து
சிலேத்துமத்தின் குணம் நமது உடலில் அதிகமாக இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டால்
அதற்கான வைத்திய முறை
தேவையான பொருள்
நல்ல உயர்தரமான கடுக்காய் ஒரு கிலோ
செய்முறை
கடுக்காயை உடைத்து கடுக்காயின் விதையை நீக்கி விடவேண்டும் மேல் தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும் இதை தண்ணீர் சம பாதியாக கலந்த பசும் பாலில் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும் அதன் பின் இதை சூரணம் செய்துகொண்டு பத்திரப்படுத்திக் கொள்ளலாம்
இதுவே சிலேத்துமத்தை சமநிலைப்படுத்தும் மருந்து
இதை மாலை வேளையில் ஒரு மண்டல காலம் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வருவதினால் இதன் பயனாக நமது உடலில் உள்ள சிலேத்துமத்தின் குணங்கள் சமநிலை பட்டுபடும்
அறிகுறிகளை வைத்து நோய்களை கண்டறிய முடியாதவர்களுக்கும் ஒரு உபாயம் இருக்கின்றது மேலே சொன்ன மூன்று மருந்துகளையும் சொல்லிய வண்ணம் செய்து வைத்துக்கொண்டு காலை மதியம் மாலை என மூன்று வேளையும் மூன்று மருந்துகளையும் முறையாக ஒரு மண்டல காலம் இந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதன் விளைவாக நமது உடலில் இருக்கும் வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற மூன்று குணங்களும் சமநிலை பட்டு இதனால் உடலில் தோன்றிய நோய்கள் அனைத்தும் நீங்குவதற்கு இந்த மூன்று மருந்துகளும் உதவியாக இருக்கும்
பெரியதொரு பத்தியம் இல்லாமல் எல்லோரும் சாப்பிட கூடிய ஒரு மருத்துவ முறை தான் இது இதை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது
இல்லறவாசிகளுக்கு இது ஒரு எளிதான காயகல்பமாகும்
இந்த சிறிய வைத்தியமுறையால் அப்படி என்ன ஒரு பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கலாம் நிஜம்தானா என்ற கேள்வியும் எழலாம் இந்தக் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய பாடல் வரியை பார்ப்போம்
காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் தானுன்ன
கோலை ஊன்றி குனிந்து நடப்பவன்
குமாரனாகி குலாவத் துடிப்பானே
பாடலுக்கு உண்டான அர்த்தம் என்னவென்றால்
காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய்
என ஒரு மண்டல காலம் உண்ண வேண்டும் அப்படி சாப்பிட்டு வருவதினால் கோலை ஊன்றி குனிந்து நடப்பவன் கூட குமரனின் சக்தியை பெறுபவனாக மாறி விடுவான் என்பதே இதன் அர்த்தம்
அப்படி என்ன ஒரு அற்புதம் இந்த மருந்தினால் நடந்துவிடப் போகிறது என்பதை பார்ப்போமா பார்ப்போம் வாருங்கள்
இந்த மருந்துக்கு வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற முக்குணங்களை சமநிலை படுத்தும் ஆற்றல் இருக்கின்றது முக்குணங்களை சமநிலை படுத்துவதினால் நமது உடலில் நோய்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல்
ரத்தமும் நன்றாக ஊறும்
விந்து சுரப்பும் அதிகரிக்கும்
நமது உடலில் உள்ள சப்த தாதுக்களான நிணநீர் இரத்தம் தசை கொழுப்பு எலும்பு மச்சை சுக்கிலம் என்கின்ற அனைத்தும் பலம் பெறுவதற்காக இந்த மருந்து பயன்படுகின்றது என்பதை சொல்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்
இப்படியான ஒரு மருந்தை நீங்களே செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
அதன் விளைவாக நல்ல
நல்லதொரு பயன்களை அடைந்து
நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் என்பதனையும் இங்கே பதிவு செய்கின்றேன்
இந்தப் பதிவை படித்து முடித்துவிட்டீர்கள்
இப்போது இந்த மருந்தை செய்ய தயாராகி இருப்பீர்கள்
இப்போது சொல்லுங்கள் நீங்களும் வைத்தியர் தானே
ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது
நன்றிகளும்
பிரியங்களும்.💐
*FORWARD MESSAGE*
*என்றும் தேசப்பணியில்,*
*"சமூகன்" எம்.சரவணக்குமார்@எஸ்.கே*
*<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு*
*மதுரை*👈🇮🇳🚀🌍
*வாட்ஸ் ஆப் எண்கள்*
*9842171532*
*9444771532*🌺🌻🌹
*முகநூல்: SMS KING SK*
Subscribe to:
Posts (Atom)