Saturday, December 28, 2019

IKGAI JAPANESE FORMULA

https://youtu.be/dvOSZg7kFJY

Best IAS Websites for UPSC Civil Services Exam Online Preparation

Best IAS Websites for UPSC Civil Services Exam Online Preparation

1. *insightsonindia.com*
2. *clearias.com*
3. *Mrunal.org*
4. *gktoday.in*
5. *currentaffairsonly.com*
6. *cleariasexam.com*
7. *IASexamportal.com*
8. *visionias.wordpress.com*
9. *swapsushias.blogspot.in*
10. *iaspassion.com*
11. *iasscore.in*
12. *iaskracker.com*
13. *jagranjosh.com*
14. *UPSCguide.com*
15. *CivilServiceIndia.com*
16. *ias100.in*
17. *jeywin.com*
18. *civilsdaily.com*
19. *onlinegk.com*
20. *iasaspirants.com*
21. *iaspaper.in*
22. *iasexams.com*
23. *tcyonline.com*
24. *testfunda.com*
25. *byjusclasses.com*

IAS Forum Websites
1. *iasforums.com*
2. *upscforums.com*
3. *forumias.com*
4. *indianofficer.com*
5. *interviewprep4ias.com*
6. *upscdiscussions.com*

IAS Toppers Blogs
1. *thesupermanreturns.wordpress.com*
2. *rijubafna.com*
3. *youtube.com/user/unacademy*
4. *lohitmatani.wordpress.com*
5. *iasdream.com*
6. *jhinujha.wordpress.com*

Useful Government Websites For Civil Service Preparation *
1. *ncert.nic.in* – Download NCERT Texts as PDF.
2. *nios.ac.in* – Download NIOS Online Materials.
3. *egyankosh.ac.in* – Download IGNOU Books.
4. *yojana.gov.in* – Download Yojana and Kurukshetra Magazines.
5. *upsc.gov.in* – Official Website of UPSC.
6. *pib.nic.in* – Press Information Bureau Website, for government updates.
7. *prsindia.org* – PRS Website for tracking bills in Parliament.
8. *idsa.in* – IDSA website for Defense and Foreign relations.
9. *gatewayhouse.in* – Indian Council for Global relations.
10. *envfor.nic.in* – Ministry of Environment and Forests.
11. *mea.gov.in* – Ministry of External Affairs.
12. *indiabudget.nic.in* – Download Budget and Economic Survey.
13. *ptinews.com* – Press Trust of India.
14. *pdgroup.upkar.in* – Pratiyogita Darpan Magazine.
15. *ibef.org* – India Brand Equity Foundation for economy and business.
16. *vikaspedia.in* – Knowledge initiative by InDG.
17. *makeinindia.com* – Make in India initiative for manufacturing related info.

Saturday, December 14, 2019

கொம்பு எனும் வம்பு

ஒவ்வொரு மனிதனின் மனமும் கொம்பு எனும் அன்பை தேடும் கொடியாகவே உள்ளது, ஆனால் இருக்கும் கொம்பின் உன்னதம் புரியாமல், புது கொம்பை தேடுவதிலேயே உள்ளது, ஆனால் புது கொம்பு பெரும்பாலும் வம்பாகவே உள்ளது. By Sarikavi

Thursday, December 12, 2019

அடுத்தவர் துன்பத்தில் மகிழ்ச்சி

என்ன பிரச்சினை ஏன் கவலையுடன்
இருக்கிறீர்கள் என்றார் உறவினர், ஏதோ துன்பத்தை பகிர்ந்து கொள்ள என்று நினைத்து விசயத்தை சொன்னேன்,  சொன்னப்பின்புதான் தெரிந்தது, அவர் மகிழ்வு கொள்ள என்று.
 By. Sarikavi

நன்றி

தேவைகள் தீர்ந்தப்பின்னும் 
தேடுபவனே 
உண்மையானவன். 
By sarikavi

Monday, December 9, 2019

ஓஷோ வைரங்கள்

*ஓஷோ வைரங்கள்*

எந்த செயலையும் உணர்வின்றி செய்யாதே !

தவறு செய்வதே வளரும் வழி !

வாழ்வே இருக்கும் ஒரே கடவுள் !

உன் தனித்தன்மைப் படி வாழு !

எல்லாவற்றையும் கொண்டாடு !

இறப்பு என்பது வாழ்வின் உச்சக் கட்ட அனுபவமே !

நம்பிக்கையில் வாழாமல் - உணர்ந்து வாழு !

குழந்தையாக அல்ல, குழந்தை போல மாறு !

எதையும் அமுக்கி வைக்காதே !

தனி மனித சுதந்திரமே வளர்ச்சிக்கு வழி !

தன் உணர்வோடு அனுபவி !

தன் உணர்வோடு கணத்துக்குக் கணம் வாழ் !

#ஓஷோ

Sunday, December 8, 2019

"என்ன கற்றுக் கொண்டோம்?...**என்ன கற்றுக் கொடுக்கிறோம்?..."*

*வாழ்க்கையே திசை திருப்பிய ஜெயகாந்தனின் படைப்பில் ஒரு சின்ன பதிவு*

*"என்ன கற்றுக் கொண்டோம்?...*
*என்ன கற்றுக் கொடுக்கிறோம்?..."*

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை...

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். 

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். 

ஒரு சமயம், 
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். 

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். 

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். 

அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். 

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். 

ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். 

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான்.  அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். 

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். 

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. 

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். 

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான்...  நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், *"அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!"* என கதறி அழுகிறான்.

ஆகவே நாம், *நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!*

நல்லதையே கற்றுத் தருவோம்...

மிக அருமையான பதிவு..👍👌👌
ஜெயகாந்தனின் படைப்பு

Friday, November 29, 2019

எது மகிழ்ச்சி

#ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்,ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், 

அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."

கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்......

அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
" என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்லை.யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.....

இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழுது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது.

வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது.

கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்.நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் எனக்கு சந்தோஷமளிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி அவர்தம் மகிழ நானும் அதிகமகிழ்வுற்றேன்.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.
மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்."

இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது
நீ
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்பதில் இல்லை...
உன்னால் அடுத்தவர்
எவ்வளவு மகிழ்ச்சி ஆகின்றார்க்ள்
என்பதிலேயே இருக்கிறது...
மகிழ்ச்சி என்பது
போய் சேரும் இடம் அல்ல
அது
ஒரு பயணம்...
மகிழ்ச்சி என்பது
எதிர்காலம் இல்லை
அது நிகழ்காலம்...
மகிழ்ச்சி என்பது
ஏற்றுக்கொள்வது அல்ல
அது
ஒரு முடிவு...
நீ என்ன வைத்திருக்கிறாய்
என்பதில் இல்லை
மகிழ்ச்சி...
நீ
யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!

மகிழ வைத்து மகிழுங்கள்........

Thursday, November 21, 2019

பிரார்த்தனை

#பிரார்த்தனை

ஒரு பெண் ஒரு கிளியை விலைக்கு வாங்கினாள். அதற்கு பிறகு மிகவும் கவலைப்பட்டாள்.  அவள் நல்ல விலை கொடுத்திருந்தாள். கிளி அழகாக இருந்தது. ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக இருந்தது.

அடிக்கடி அந்த கிளி உரக்க, “ நான் ஒரு கெட்ட பெண்மணி” என்று கூறியது.
இதில் ஏதோ விஷயம் இருக்கிறது . அந்தப் பெண் தனியாக வாழ்பவள். மிகவும் மதப்பற்றுள்ளவள்.

இந்த கிளி மீண்டும் , மீண்டும் ,”நான் மிகவும் கொடுமைக்காரப் பெண்” என்று கூறி கொண்டேயிருந்தது,....

அவள் பூசாரியிடம் சென்று “ இது மிகவும் மோசமானது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். கிளி மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன, இது ஒன்றைத் தவிர” என்று கூறினாள்.

பூசாரி சொன்னார் :

“ கவலைப்படாதே. என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளிகள் இருக்கின்றன. ஒன்று வழிபாடு செய்யும் ; மற்றொன்று மணியடிக்கும் . நீ உன் கிளியைக் கொண்டு வா, இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை விட்டுச் செல். நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும். பின்னர் உன் கிளியை எடுத்துச் செல்லாம் ! “

அந்த பெண்ணுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள் . பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் அவர்கள் எதுவும் பேசும்முன் அந்த கிளி கூறியது . “ நான் மிகவும் கொடுமைக்காரப் பெண் .”

பூசாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.

அப்போது வழிபாடு செய்து கொண்டிருந்த கிளி வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம் ,” முட்டாளே ! இன்னும் ஏன் மணியாட்டிக்கொண்டிருக்கிறாய் ? நம் பிராத்தனைகள் நிறைவேறி விட்டன “ என்று கூறியது . அவை ஒரு பெண்னுக்காகப் தான் பிரார்த்தனை செய்து வந்திருந்தன

ஓஷோ கூறுகிறார் :

“ யாராவது பிரார்த்தனை செய்வதைப் பார்த்தால் ஏதோ தவறு நடக்கிறது என்று உண்மையில் சந்தேகப்படு. அவர்கள் பணத்துக்காக, பெண்ணுக்காக, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை. மகிழ்ச்சிதான் அவன் வழிபாடு , அதைவிட உயர்ந்த சிறந்த வழிபாடு இருக்க முடியாது, “

Tuesday, November 19, 2019

MACHINE LEARNING

https://machinelearningmastery.com/types-of-learning-in-machine-learning/

Tuesday, November 12, 2019

வேலை

"ஒரு ஊரில் மூன்று பேர் வேலை 
செய்து கொண்டிருந்தார்கள்!!!

அப்போது அங்கு வந்த 
ஒரு வழிப்போக்கர் முதல் நபரிடம், “நீ இங்கே என்ன  செய்து 
கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். 

அந்த நபர் நிமிர்ந்து பார்த்து, 
“பார்த்தால் தெரியவில்லையா?
நான் கல் கொத்திக்கொண்டு இருக்கிறேன்..உனக்கு என்ன கண் குருடா?” என்று கேட்டார்.

உடனே அந்த நபர் அடுத்தவரிடம் சென்று  “நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார்.

அவர் உடனே நிமிர்ந்து பார்த்து, “ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக செய்கிறேன்.

அவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைச் செய்வேன், அவ்வளவுதான்” என்று சொன்னார்.

அடுத்து அவர் மூன்றாவது நபரிடம் சென்று, “நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்,” என்று கேட்டார். 

அதற்கு அந்த மூன்றாவது நபர் மிகவும் ஆனந்தமாக எழுந்து நின்று, “நான் இங்கே ஒரு அழகான கோவிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்” 
என்று சொன்னார்....

அவர்கள் எல்லோருமே ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அந்த ஒரே வேலையை மூன்று பேருமே  மூன்று விதமாக உணர்கிறார்கள்!

அதற்கேற்றார் போல்தான் அவர்கள் வாழ்க்கையின் தன்மையும் அமைகிறது.

 எனவே, எளிமையான செயல் செய்கிறீர்களா.... அல்லது மிகவும் கடினமான செயல் செய்கிறீர்களா.... என்பதைவிட,

செய்யும் வேலையை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான்...
உங்கள் வாழ்க்கைத் தன்மையை நிர்ணயிக்கிறது!!!

#ஓஷோ

Saturday, October 19, 2019

STAY CONNECTED

*This poem is beyond all relationships*
*But made for us all*

​**When I'm dead.*
​**Your tears will flow*
​**But I won't know*
​**Cry with me now instead!​*

​**You will send flowers*,..​
​**But I won't see*
​**Send them now instead*

​**You'll say words of praise,..​*
​**But I won't hear..​*
​**Praise me now instead!​*

​**You'll forget my faults,....​*
​**But I won't know.....​*
​**Forget them now, instead!​*

​**You'll miss me then,...​*
​**But I won't feel...*
​**Miss me now, instead​*

​**You'll wish...​*
​**You could have spent more time with me,...​*
​**Spend it now instead!​*

​**When you hear I'm gone, you'll find your way to my house to pay condolence but we haven't even spoken in years....​*
​**Pls look for me now!!​*

​''**Spend time with every person around you, and help them with whatever you have to make them happy!! your families, friends, acquaintance.....​
​**Make them feel Special. Because  you never know when time will take them away from you forever''..​*

​**Love  all   and   Forgive all.​*
​No matter how many times the teeth bite the tongue, they still stay together in one mouth. That's the spirit of​
   FORGIVENESS
​Even though the eyes don't see each other, they see things together, blink simultaneously and cry together.​
  that's "UNITY."
​May we practise the spirit of forgiveness and togetherness.​
1.  Alone I can 'Say' but together we can 'Talk'.
  2.  ​Alone I can 'Enjoy' but together we can 'Celebrate'  
  3.  ​Alone I can 'Smile' but together we can 'Laugh'_
   ​That's the BEAUTY of Human Relations. We are nothing without each other​
   STAY CONNECTED!!
​DestinyAheadCare​
​QUOTE OF THE MONTH​

​The razor blade is sharp but can't cut a tree; the axe is strong but can't cut the hair.​

MORAL:
​Everyone is important according to his/her unique purpose. Never look down on others unless you are admiring their shoes​

🙏🙏 ​Share it with your friends and family including me​

Thursday, October 10, 2019

மருந்துகள்

இந்த சித்தர் பாடலை எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

_மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை_

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்கு வெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனி உப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம் சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

(Disclaimer: இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான்).

ஓம் சர்வலோக சித்தர்களே போற்றி

🤔🤔🤔🤔🤔🤔

🙏🙏🙏

Saturday, October 5, 2019

How can I improve myself within a month?*

*How can I improve myself within a month?*

*_20 ideas -:_*

1. Detoxify your speech. Reduce the use of negative  words. Be polite.

2. Read everyday. Doesn’t matter what. Choose whatever interests you.

3. Promise yourself that you will never talk rudely to your parents. They never deserve it

4. Observe people around you. Imbibe their virtues.

5. Spend some time with nature everyday.

6. Feed the stray animals. Yes, it feels good to feed the hungry.

7. No ego. No ego. No ego. Just learn, learn and learn.

8. Do not hesitate to clarify a doubt. “He who asks a question remains fool for 5 minutes. He who does not ask remains a fool forever”.

9. Whatever you do, do it with full involvement. That’s meditation.

10. Keep distance from people who give you negative vibes but never hold grudges.

11. Stop comparing yourself with others. If you won’t stop, you will never know your own potential.

12. “The biggest failure in life is the failure to try”. Always remember this.

13. “I cried as I had no shoes until I saw a man who had no feet”. Never complain.

14. Plan your day. It will take a few minutes but will save your days

15. Everyday, for a few minutes, sit in silence. I mean sit with yourself. Just yourself. Magic will flow.

16. In a healthy body resides a healthy mind. Do not litter it with junk.

17. Keep your body hydrated at all times. Practice drinking water whenever thirsty.

18. Make a habit to eat at least one serving of raw vegetable salad on a daily basis.

19. Take care of your health. “He who has health has hope and he who has hope has everything”.

20. Life is short. Life is simple. Do not complicate it. Don’t forget to smile.😊🌟

_Keep reading this daily at least once and imbibe as much as possible.

*Have Happy and Healthy moments ahead. GOD Bless You*

Thursday, October 3, 2019

துன்பம்

துன்பமாக இருக்கிறீர்களா இதை படியுங்கள் <3

ஒவ்வொரு துன்பமும் புத்தருக்கான விதை - போதிதருமர்

துன்பத்தைக்கூட நன்றிப்பெருக்குடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போதிதருமர் கூறும்போது, சரியாகத்தான் கூறுகிறார்

ஏனெனில்

அதுதான் நீங்கள் புத்தர் ஆவதற்கான விதையாகும்

துன்பம் என்பது அங்கு இல்லை என்றால்

நீங்கள் ஒருபோதும் சத்தியத்தை அடைய மாட்டீர்கள்

துன்பம் தான் அதைக் கடந்து செல்வதற்கு உங்களை தூண்டிக் கொண்டே இருக்கிறது

துன்பமும் வேதனையும் தான்

அந்த துன்பம் மற்றும் வேதனையைக் கடந்து

அதற்கு அப்பால் செல்வதற்கான பாதையைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி உங்களை இறுதியாக கட்டாயப்படுத்துகிறது

பேரானந்தத்தையும் முடிவில்லா மகிழ்ச்சியையும் அடைகின்ற ஒரு வழியைக் கண்டு கொள்வதற்கு உங்களை கட்டாயப்படுத்துகிறது

துன்பத்திற்கு எதிராக இருக்காதீர்கள்

பதிலாக துன்பத்திற்கு நன்றி உணர்வு கொள்ளுங்கள் என்று போதிதருமர் கூறுகிறார்

இது ஒரு மாபெரும் கருத்து

வேதனை, துன்பம், வயதான காலம், மரணம்

ஆகியவை குறித்து நன்றி உணர்வு கொள்ளுங்கள்

ஏனெனில்

இவை அனைத்தும் மட்டுமே நீங்கள் உண்மையைத் தேடிச் செல்வதற்கான ஒரு சூழ்நிலையை உங்களுக்கு உருவாக்குகிறது

இல்லையெனில் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி விடுவீர்கள்

இல்லையெனில் நீங்கள் மிகவும் சௌகரியமானவராக

ஒரு காய்கறி போன்று ஆகிவிடுவீர்கள்

அதற்கான அவசியம் இருக்காது

துன்பம் தான் தேடுதலுக்கான அவசியத்தை உருவாக்குகிறது.

--ஓஷோ --

Tuesday, October 1, 2019

புறக்கணிப்பு

புறக்கணிப்பு <3

யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்........???

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன.......???

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா.......???

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.

அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு

நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.

அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய்.

இயற்கையை நேசி.

வலிகள் மறையும்.

பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில்
நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார்.

இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை.

அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை.

அது இயல்பாய் இருக்கிறது.

அது போல் இயல்பாய் கடமையைச் செய்

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால் .
-- ஒஷோ

மனம்

நோய்களில் எழுபது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்.

ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்.

ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்.

நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்!

மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.

உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.

உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.

உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது.

சில நோய்களில் இருந்து உங்களைப் பாது காக்கிறது.

உங்கள் மனம்தான் உங்கள் உலகம்.
உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.

உங்கள் மனம்தான் உங்கள் நோய்.

நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்.

அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்.

அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது.

உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.

உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை.

உடலும் மனமும் இரண்டல்ல.

உடலின் உள்பகுதி தான் மனம்.

உடலின் வெளிப்பகுதியே மனம்.

உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள்
நுழைய முடியும்.

அதுபோல மனத்தில்  துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்.

"மனித சாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா"!!!

#ஓஷோ
மருத்துவத்திலிருந்து
மனமற்ற நிலை வரை
உடல் மனம் ஆரோக்கியம்.

நன்றி உணர்வு

உதவியை பெறுபவர்கள் சிலர்  உடனடியாக மறந்துவிடுகின்றனர் 'RAM MEMORY'  ஐ போல,  சிலர்  மனதில் இருத்தி நன்றியுணர்வுடன் இருக்கின்றனர்  காலத்திற்கும் HARDDISK ஐ போல.
காலத்தின் கொடுமை RAM , Main memory என்றும் , HARDDISK , Secondary Memory என்றும் அழைக்கப்படுகிறது. சாமியின் சிந்தனை.

Sunday, September 29, 2019

THE PREGNANT DEER

THE PREGNANT DEER – such a beautiful story !

In a forest, a pregnant deer is about to give birth.
She finds a remote grass field near a strong-flowing river.
This seems a safe place.
Suddenly labour pains begin.

At the same moment, dark clouds gather around above & lightning starts a forest fire.
She looks to her left & sees a hunter with his bow extended pointing at her.
To her right, she spots a hungry lion approaching her.

What can the pregnant deer do?
She is in labour!

What will happen?
Will the deer survive?
Will she give birth to a fawn?
Will the fawn survive?
Or will everything be burnt by the forest fire?
Will she perish to the hunters’ arrow?
Will she die a horrible death at the hands of the hungry lion approaching her?

She is constrained by the fire on the one side & the flowing river on the other & boxed in by her natural predators.

What does she do?
She focuses on giving birth to a new life.

The sequence of events that follows are:

– Lightning strikes & blinds the hunter.
– He releases the arrow which zips past the deer & strikes the hungry lion.
– It starts to rain heavily, & the forest fire is slowly doused by the rain.
– The deer gives birth to a healthy fawn.

In our life too, there are moments of choice when we are confronted on αll sides with negative thoughts and possibilities.

Some thoughts are so powerful that they overcome us & overwhelm us.

Maybe we can learn from the deer.
The priority of the deer, in that given moment, was simply to give birth to a baby.

The rest was not in her hands & any action or reaction that changed her focus would have likely resulted in death or disaster.

Ask yourself,
Where is your focus?
Where is your faith and hope?

In the midst of any storm, do keep faith on the Creator always. He will never ever disappoint you. NEVER.

Remember, He neither slumbers nor sleeps…

Friday, September 27, 2019

மனசு லேசானது


மலை ஏறியபொழுது, மனதில் மலை ஏறியது.
மலை இறங்கியபின்பும் மலை மட்டும் மனதில் இருந்து இறங்க மறுக்கிறது.

Thursday, September 26, 2019

சுற்றுலா

    இயற்கை மனிதர்களுக்குள் புரிதல் ஏற்படுத்தும் என்று உணர்த்திய நாட்கள்,
    மலை, மரம், பனி, மேகம் இவைகளோடு  நாமும் உறைந்த நாட்கள்,
   கற்பித்தல் மறந்து உங்களிடமும் கற்க நிறைய இருக்கிறது என்று உணர்ந்த நாட்கள்,
   மணிக்கணக்கில் உங்களை பேசவிட்டு சிரித்து மகிழ்ந்த நாட்கள் ,
   வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுப்பது வகுப்பறை மட்டுமல்ல என்று உணர்ந்த நாட்கள்,
   மறக்க முடியாத, யாரும் பறிக்க முடியாத உன்னத நினைவுகளை தந்த நாட்கள்,
   அந்த நாட்கள் நாம் சுற்றுலா சென்ற நாட்கள்,
   உன்னத உணர்வுகளை தந்த அனைவருக்கும் நன்றி.

Tuesday, September 24, 2019

மிகுந்த இனிப்பில் எங்கோ ஒரு சிறு கசப்பு இருத்தல் போல, மிகுந்த இன்பத்தில் எங்கோ ஒரு ஒரு சிறு துன்பம் இருக்கும். சாமியின் சிந்தனை.

Friday, September 20, 2019

நம்பிக்கையின்மைக்கும், நன்றியின்மைக்கும் இடையே, இதெல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் நகருகிறது வாழ்க்கை.  சாமியின் சிந்தனை.

Wednesday, September 11, 2019

நீ என்னை வெறுமனே நம்பிக் கொண்டிருக்கிறாய்..... அதில் எந்த ஆழமோ, ஆர்வமோ கிடையாது,

ஆனந்தா என்பவர் கௌதம புத்தரின் சித்தப்பா மகன்..... 

அவரும் புத்தரின் சீடர்களில் ஒருவர்..... 

ஒரு சமயம் ஆனந்தாவிற்கு புத்தரிடம் தீட்சை எடுக்கும்படி  உள்ளுணர்வு தூண்டியது..... 

ஆனந்தா புத்தரைவிட வயதில் மூத்தவர்..... 

ஆகவே, தீட்சை எடுப்பதற்கு முன், அவர் புத்தரிடம்
“இப்போது நான் உனக்கு அண்ணன்,  உன்னைவிட வயதில் மூத்தவன். நான் எதுவும் சொல்லி நீ செய்ய முடியும்....... 
அதை நீ ஏற்றுக்கொண்டு நடக்கலாம்.  இது ஒரு பழைய சம்பிரதாயம்.... 
ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் உன்னிடம் தீட்சை பெறப் போகிறேன்..... 
அதன் பிறகு நான் உன்னுடைய அதிகாரப்பூர்வமான சீடராகி விடுவேன்.... 

அதன்பிறகு இங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான சீடர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்....
ஆகவே, தீட்சை எடுப்பதற்கு முன் நான் மூன்று நிபந்தனைகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்”  என்று சொல்லி.......

மேலும் அவர்,
"அந்த நிபந்தைனைகளில் முதலாவது, நான் எப்பொழுதும் உன் கூடவே இருக்க வேண்டும்.... 
புத்த மதத்தை பரப்பும் எந்த குழுவோடும் என்னை சேர்த்து அனுப்பக்கூடாது.... 
நான் உன் உடல் தேவைகள், உணவு, மருந்து போன்றவற்றை கவனித்துக்கொள்ள வேண்டும்..... 
அடுத்து, நான் ஏதாவது கேட்டால், பொறுமையாக இரு, சரியான நேரம் வரட்டும் என்று சொல்லக்கூடாது.  எனக்கு உடனே பதில் கூற வேண்டும்..... 
அடுத்து ஒரு சிலர் உன்னை சந்திக்க வேண்டும் என்று நான் விரும்பினால், நடு இரவில் கூட அவர்களை அழைத்து வருவேன். அப்போது அவர்களை சந்திக்க மறுப்பு ஏதும் சொல்லக்கூடாது”  என்றார்.... 

புத்தர் -
“இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. நான் உங்கள் நிபந்தனைகளை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பேன்” என்றார்....

அதைப்போல ஆனந்தா புத்தருடன் தொடர்ந்து நிழல் போல 42  வருடம் கூடவே இருந்தார்..... 
அவரை கண் இமைப்போல பாதுகாத்தார். 
ஆனாலும், அவர் ஞானம் அடையவில்லை..... 

அவருக்கு பிற்பாடு வந்தவர்கள் எல்லாம் ஞானம் பெற்று சென்று கொண்டிருந்தார்கள். அதனால் ஆனந்தா குழப்பம் அடைந்தார்..... 

பிறகு அவர் புத்தரிடம்
“நான் என்ன தவறு செய்தேன்...???
எனக்கு பிற்பாடு வந்த பலர் ஞானம் அடைந்து குருக்களாக சென்று விட்டார்கள்..... 
நான் உன் கூடவே 42 வருடம் இருக்கிறேன். எனக்கு ஞானத் தன்மையின் அ, ஆ-ன்னா கூட தெரியாது..... 
இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றார்..... 

அப்போது புத்தர்
‘'நான் என்றைக்கு இந்த உலகத்தை விட்டு நீங்குகிறேனோ அன்றைக்கு நீ ஞானம் அடைவாய்”  என்றார்..... 

மேலும் புத்தர் “இதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை..... 
நீ என்னை உன் ஆழ் மனதில் இன்னமும் உன்னுடைய தம்பியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாய்..... 
அது மாத்திரமல்ல, என் தம்பி என்னை ஞானம் அடைய செய்யாமல் விட மாட்டான் என்று மிகவும் நம்பிக் கொண்டு இருக்கிறாய்..... 
நீ ஞானம் அடையாமல் விட்டுவிட என்னால் முடியாது..... 
ஆகவே நான் சொல்வதை எல்லாம் நீ தீர்க்கமாக செய்வதில்லை..... 
நீ என்னை வெறுமனே நம்பிக் கொண்டிருக்கிறாய்..... 
அதில் எந்த ஆழமோ, ஆர்வமோ கிடையாது, அதற்கு நான் என்ன செய்ய முடியும்...???  
நான் என் கையை மட்டும்தான் அந்த திசையை நோக்கி காட்ட முடியும்..... 
உனக்காக நான் ஞான நிலையை அடைய முடியாது”  என்றார்.....

புத்தர் சொன்னது போலத்தான் பிற்பாடு ஆனந்தாவிற்கு நேர்ந்தது..... 

என்றைக்கு காலையில் புத்தர் இறந்தாரோ, அன்றைக்கு மாலையில் ஆனந்தா ஞானம் அடைந்தார்..... 

புத்தரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது கூட ஆனந்தா கண்களை மூடி அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.....

அவர் மட்டும் அந்த தருணத்தை தவற விட்டிருந்தால் பிறகு புத்தர் போன்ற ஒரு ஞானியை அடைய எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ என்று யாருக்கு தெரியும்.....???

*#ஓஷோ*

Sunday, September 8, 2019

புகைப்படம்


எதிர்காலத்தில் கடந்த காலத்தை பார்க்க விரும்பி நிகழ் காலத்தை தவறவிடுவது. By Samy

Sunday, September 1, 2019

காது கொடுத்து கேளுங்கள்

💜❤💙💚❤💜💙இன்றைய சிந்தனை.. ( 01.09.2019)..
……………………………………

'' காது கொடுத்து கேளுங்கள்..''..
.....................................

உங்களிடம் வந்து யாராவது தனக்கொரு பிரச்னை என்று வந்தால்.,அவர்களைப் பேசவிட்டு அவர்கள் பேசுவதை கொஞ்சம் காது கொடுத்து கவனமாகக் கேளுங்கள்.

மற்றவர்களின் துன்ப துயரங்களில் ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

ஆம்.,அதுமாதிரியான நிகழ்வுகள் நமக்கும் வரலாம்.அடுத்த முறை நம்முடையதாகவும் கூட இருக்கலாம்.

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.வளையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் பண்ணையாளரும். அவரது மனைவியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டு இருந்தார்கள்.ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப் பொறி.அதைப் பார்த்ததும எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது.,"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது..

அதற்கு அந்த கோழி,'' உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய செய்திதான்..''..நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது.,

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே செய்தியை போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு ."நான் எலிப்பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே செய்தியை சொல்லியது.
ஆடும் அதேபதிலைச் சொல்லியது.. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை..,"எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு விட்டுக்காராரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானி அம்மாளைக் கடித்து விட்டது. எஜமானி அம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.

விஷத்தை முறிக்க ஊசி போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு காய்ச்சல் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி.," பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு கோழி ரசம் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது ஆப்பு... கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் காய்ச்சல் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் அந்த அம்மவின் உடல் நலம் தேறியது.பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது..

பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்கு காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.எலி தப்பித்து விட்டது..

ஆம்..,நண்பர்களே..,

மற்றவர்களின் குறைகளை, அக்கறையுடன் கேளுங்கள்; ஆறுதல் சொல்லுங்கள்;

நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாலு வார்த்தை ஆதரவாக பேசுங்கள்..இன்பத்தை விட, துன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு...🌺🌹💐