Sunday, May 31, 2020

தினம் தினம் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி?

தினம் தினம் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி?

1.பத்து நிமிடங்கள் முன்னதாக:

காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

2.பத்து நிமிடங்கள் மௌனமாக:

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள்.

3.முப்பது நிமிடங்கள்:

ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி.

4.உணவிலும் ஒழுங்கு:

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள்.

5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:Day Task.

6.அடைசல்கள் அகற்றுங்கள்:

அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது.

7.மனிதர்களை நெருங்குங்கள்:

இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

8.அடுத்து என்ன? இதுவே மந்திரம்:

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:

ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.

10.நன்றி அறிவிப்புத் தீர்மானமும் போடுங்கள்:

ஒவ்வொருநாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், (நீங்கள் பி.பி.ஓ. ஆசாமியாய் இருந்தால், ஒவ்வொரு பகலும் உறங்கப் போவதற்கு முன்னால்) நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும் மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.

11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:

உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.

12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:

உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.

13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:

இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்.

14.மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்:

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.

பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.
படித்ததில் பிடித்தது.

மனசு

பேருந்தில் நீண்ட பயணம்
என் அருகில் காலி இருக்கை
அதில் தனக்கு பிடித்தவர்களை உட்கார வைத்து மகிழ்கிறது மனது.

சாமியின் சிந்தனை.

Saturday, May 30, 2020

படித்ததில் பிடித்தது:பெற்றோர்களுக்கு

All parents must understand this reality.

 அவசியம் முழுதாகப் படிக்கவும் ! 

குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு... 

 நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?

என்னை மிகவும் ஆழமாக சிந்திக்க வைத்த பதிவு. பெற்றோர்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள். உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக உங்கள் சொந்த வீடு உள்ள இடத்தில் குடிபெயர்ந்து நல்ல பள்ளி அருகினில் வீடு வாகை எடுத்து நீங்கள் சம்பாதிப்பதை எல்லாம் வீட்டு வாடகைக்கும் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும் தான் செலவு செய்கிறீர்கள். 

அந்த கல்வி வருங்காலத்தில் அவனை ஒரு பணம் சம்பாதிக்கும் கருவியாகத்தான் மாற்றுமே தவிர நல்ல மனிதனாக ஒருபோதும் மாற்றாது என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு கிழே உள்ளவற்றை படிக்க தொடங்கவும்

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது.

 தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். 

இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள்.

 இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.
அவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு.

 பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். 

அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. 

வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்

‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர். 

இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.

அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். 

என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். 

ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். 

ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். 

அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். 

அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.
ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு.

 பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை.

 ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கிலமொழியறிவுக்கும் கணிதத்திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை.

 படிப்புதான்.சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. 

எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. 

அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது.

 படிப்பு படிப்பு படிப்புதான்’
‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். 

’தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. 

அங்கே பிள்ளைகளைச் சேர்க்க வரிசையில் நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள். 

பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’
அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை.

 ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. 

நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. 

பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது.

 அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. 

திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’
‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு.

 அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது.

 இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். 

அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். 

அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’
‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை.

 படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேசநினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. 

இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னை வாழச்சொல்கிறார்கள்’

‘நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா? 

முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். 

அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’
அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது’ என்றேன். 

அவர் புரிந்துகொள்ளாமல் ‘நன்றிகெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். 

மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்

‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம். 

உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக்கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன்.

 அவர் மீண்டும் பதில் போடவில்லை.
வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான்.

 அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன. 

நாளை முக்கியம்தான், இன்று அதைவிட முக்கியம்.

All parents - do read it and share it

Sunday, May 24, 2020

நினைவுகள் என்னவோ கல்லாய்

நன்றி

பிறரிடம் பெரிதும் எதிர்பார்ப்பது,
நாம் வசதியாய் மறந்து போவது.

Thursday, May 21, 2020

உண்மையாக ஆசிரியர் யார்.

நகம் கடித்தல் என்ற தீயப்பழக்கத்தின் தீங்கை எடுத்துச் சொல்லி விடச்சொன்ன மாணவன்,

நான் உடல்நலிவுற்று இருந்து பொழுது 'உடுக்கை இழந்தவன் கைப்போல ' உதவிய மாணவன்,

தனக்கு கிடைத்த உதவியை வேண்டாம் என்று சொல்லி பிறருக்கு உதவச் சொன்ன மாணவி,

தனது இரண்டு நாள் பட்டினியால் எனக்கு வறுமை உணர்த்திய மாணவி,

வகுப்பில் நீங்கள் நுழையும்முன் உங்கள் புன்னகை நுழைய வேண்டும் எனச் சொன்ன மாணவன்,

நடக்கும் போது நிமிர்ந்து நடந்தால் உங்கள் மேல் நம்பிக்கை கூடும் என்று கற்றுத்தந்த மாணவி,

என்னை கண்டிக்க வேண்டும் ‌என்றால் தனியே கூப்பிட்டு கண்டியுங்கள் என்று போதித்த மாணவன்,

தாயை தந்தையை இழந்த பின்னும் இந்த உலகை நம்பிக்கையோடு பார்க்கும் சில மாணவிகள்,

பணவருமை இருந்தாலும் மனவருமை இல்லாமல் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் மாணவ/மாணவிகள்,

இது மட்டுமல்லாமல் நிறைய அவர்களிடம் கற்றும் கற்றக்கொண்டிருக்கும் நான் இன்னமும் சொல்லிக்கொள்கிறேன்  'நான் தான் அவர்களின் ஆசிரியர் என்று'.

  சாமியின் சிந்தனை.

கண்கள்

உண்மை முகத்தை மறைக்க
எவ்வளவோ முகமூடிகள் போட்ட பின்பும், 
காட்டி கொடுத்து விடுகின்றன கண்கள்.

சாமியின் சிந்தனை.

Wednesday, May 20, 2020

ஒரு சந்தேகம்

உணவுக்காக மீனைப் கொத்துவதால் அது மீன்க்கொத்தி,
புழுவுக்காக மரத்தை கொத்துவதால் அது மரங்கொத்தி,
உணர்வின் வெளிப்பாடால் ஒரு மனிதனை கொத்தும் இன்னொரு மனிதனை மனிதக் கொத்தி என்று அழைக்கலாமா?

சாமியின் சிந்தனை.

Tuesday, May 19, 2020

Magic of Appreciation- பாராட்டுங்கள் பாராட்டபடுவீர்கள்

Monday, May 18, 2020

HAPPY HORMONES


A Talk about Happy Hormones

கதை: மறுசந்திப்பு.

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து

குறுங்கதை 81 
மறுசந்திப்பு

நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மறுமுறை சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அப்படி ஒரு நிகழ்வினை முன்னெடுத்தவன் மகேந்திரன்.

அவனே ஒரு வாட்ஸ்அப் குரூப் துவங்கி அதில் பழைய மாணவர்களின் தொலைபேசி எண்களைக் கண்டறிந்து அவர்களுடன் பேசி தேதி குறித்து அந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தான். பல்வேறு மாவட்டங்களிலும் பணிக்காகத் தங்கியிருந்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள்

டேனியலுக்கு அந்தச் சந்திப்பிற்குப் போவதில் விருப்பமிருந்தாலும் நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியினைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது என்றும் தோன்றியது.

வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படங்களைப் பார்த்த போதே காலம் ஒவ்வொருவரையும் எவ்வளவு உருமாற்றியிருக்கிறது என்பதை அறிந்து வியப்பாக இருந்தது.

பள்ளி வயதில் மனதில் பதிந்து போன உருவம் அழிந்து போய்விட்டதே என்று டேனியல் வருத்தப்பட்டார்.

அவருடன் படித்த சிலரது பெயர்கள் மட்டுமே நினைவிலிருந்தது. முகம் மறைந்து போயிருந்தது. ஆனாலும் என்ன. அந்தப் பெயர்களை எங்கே கேட்டாலும் பள்ளி வயது நினைவில் வந்து தானே போகிறது.

அவர்களை நேரில் சந்தித்துப் பேசினால் அந்த நினைவு மறைந்து போய்விடுமோ என்றும் யோசனை செய்தார்.

என்றோ மழையில் நனைந்த ஒருவன் மறுபடி அதே ஈரத்தை நினைவு கொள்ள முடியுமா என்ன.

பள்ளி வயதில் நடந்த நிகழ்வுகள் நிறைய மறந்துவிட்டன. நினைவில் இருப்பது பெரும்பாலும் கசப்பான விஷயங்கள். அல்லது காதலித்த பெண்ணோடு தொடர்பான விஷயங்கள். இவை தவிர ஆசிரியர்கள் காட்டிய அன்பின் அடையாளமான சில நிகழ்வுகள் இவ்வளவு தான் ஞாபகத்தில் மிச்சமிருக்கின்றன.

பள்ளிக்கூடக் குரூப் போட்டோவில் டேனியல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார். இனி ஒரு போதும் அதை மாற்ற முடியாது தானே.

பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் மறுபடி சந்திப்பதைப் பெரிய கொண்டாட்டம் போல மகேந்திரன் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். ஏனோ டேனியல் போகவேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்.

ஆனால் முந்திய நாள் இரவு மகேந்திரன் அனுப்பிய பழைய புகைப்படத்தில் டேனியல் ஹாக்கி மட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அதைக் காணும் போது நெகிழ்ச்சியாக இருந்தது..

ஆசையாக விளையாடிய ஒரு விளையாட்டினை ஏன் வாழ்க்கையில் கைவிட்டோம் என அவராக வருந்திக் கொண்டார்.

மறுநாள் காலை எழுந்து பேருந்தில் பயணம் செய்தபோது பள்ளி வயதின் யூனிபார்ம் நினைவில் வந்து போனது. மைக்கறை படிந்த வெள்ளை சட்டையைப் பற்றி நினைத்தபடியே பயணம் செய்தார்

பள்ளிக்குச் செல்லும் பாதை மாறியிருந்தது. பள்ளி கட்டிடத்தின் முகப்பு புதிய வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. அவரது மனதிலிருந்த சித்திரம் எதுவும் இப்போதில்லை. முன்பு பள்ளியின் வலதுபுறமிருந்த சைக்கிள் ஸ்டாண்ட் இப்போது பள்ளியின் பின்புறம் மாறியிருந்தது. பள்ளியின் பெயர் மட்டுமே மாறாமல் இருந்தது

ஒவ்வொருவராக வரத்துவங்கினார்கள். பால்யகால நண்பர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கைகளைப் பற்றிக் கொண்டார்கள். அது பள்ளிச்சிறுவர்கள் போலப் பொய்யாக நடித்துக் கொள்வது போலவேயிருந்தது. அவரது வகுப்பிலிருந்த நாற்பத்து ஆறு பேரில் இரண்டு பேர் இறந்துவிட்டிருந்தார்கள். மற்றவர்கள் ஒன்று கூடி அவரவர் மனைவி பிள்ளைகள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பிறகு தாங்கள் படித்த வகுப்பறையைப் பார்வையிடச் சென்றார்கள்.

அந்த வகுப்பறையிலிருந்த மரப்பெஞ்சுகள் இப்போது இல்லை. ஆசிரியர் நின்று வகுப்பெடுக்கும் மேடை அப்போது கிடையாது. முன்பு எந்த இடத்தில் அமர்ந்தார்களோ அங்கே போய் அமர்ந்து கொண்டார்கள். டேனியல் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். அந்த ஜன்னல் அப்படியே இருந்தது. மாறவேயில்லை.

பள்ளியின் ஜன்னல் வழியே தெரியும் உலகமும் அந்த ஜன்னல் வழியாக உருவான கனவுகளும் மனதில் ஒளிரத் துவங்கின. தனது இருக்கையை விட்டு எழுந்து ஜன்னலின் அருகே போய் நின்று வெளியே எட்டிப்பார்த்தார். சிறுவயதில் வசீகரித்த தொலைவும் அங்கே தென்படும் மனிதர்களும் அப்படியே மாறாமல் இருந்தது போல உணர்ந்தார். அந்த ஜன்னலை விட்டு நகர மனம் வரவில்லை.

உடன் வந்தவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக மைதானத்திற்குப் போனார்கள். டேனியல் மைதானத்திற்குப் போன போது பழைய மைதானத்தில் புதிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பிளாக் உருவாகியிருந்தது.

விளையாடும் இடம் சுருங்கியிருந்தது. புகைப்படம் எடுத்து முடித்துக் கொண்டு எல்லோரும் சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்

டேனியல் மட்டும் மறுபடியும் அந்தப் பள்ளியின் ஜன்னலைக் காணுவதற்காகப் படியேறினார். யாருமில்லாத வகுப்பறையில் நுழைந்து ஜன்னலைப் பார்த்தபடியே இருந்தார். அது ஏதோ கேள்வி எழுப்புவது போல உணர்ந்தார். அதே ஜன்னலைப் பிடித்தபடியே ஆதங்கமாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்

“நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. எதையோ பற்றிக் கொண்டு வாழ்க்கையை ஒட்டிவிட்டேன். அவ்வளவு தான் “

ஏனோ மனது கனக்கத்துவங்கியது. கீழே இறங்கி வந்த போது அனைவரும் சாப்பிடத் துவங்கியிருந்தார்கள். அந்த உற்சாகம். சந்தோஷம் நிஜமில்லை. ஒரு முறை அடைந்த சந்தோஷத்தை மறுமுறை அடையவே முடியாது என்பது போலவே அந்தச் சந்திப்பை உணர்ந்தார்.

எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் நோக்கிப் பயணிக்கத் துவங்கினார். தான் இன்று சந்தித்த எவரும் தனக்குத் தெரிந்தவரில்லை, யாரோ வயதான ஆட்கள் என்று ஏனோ வழியில் தோன்றியது.

படித்ததில் பிடித்தது.

செய்நன்றி

யாரோ ஒருவன் தான் ஏறிப்போனபின்
எட்டி உதைத்ததில் தரையில் கிடக்கிறது ஏணி, யாருக்கும் பயனில்லாமல்.

சாமியின் சிந்தனை.

Sunday, May 17, 2020

காதல் மனம்

காலையில் 
காகத்தின் கரைதல்
கூட கானமாய் கேட்கிறது
காதலுக்கு.

சாமியின் சிந்தனை.

Saturday, May 16, 2020

இப்படிக்கு மனம்.

கடமையை செய்,
பாராட்டை எதிர்பார்.

சாமியின் சிந்தனை.

நீலவண்ண தேவதை

மொட்டை மாடியிலிருந்து வெகு தூரத்தில் தெரியும் கடல்,
நெருங்கி நெஞ்சம் நிறைத்து விடுகிறது ஒரு நொடியில்.

சாமியின் சிந்தனை.

நட்பு/உறவு

வெட்டப்படுவதோ ஓர் நொடியில்,
வேதனை வாழ்நாள் எல்லாம்.

சாமியின் சிந்தனை.

Friday, May 15, 2020

Important Reference for e- learning

How to Create Google Forms?
https://youtu.be/F4buURwcdwE


How to give assignment through quiz in Google Classroom?
https://youtu.be/2N0Puofos-E

How to record a Powerpoint Presentation and export as a Video File?....
https://youtu.be/5w4zUrZ4KSo

 

How to use Screen Recorder App to record a PowerPoint presentation in Smart Phone?
https://youtu.be/seVMqcMzk5A

 

Google Meet Integration in Google Classroom.-Meet Integration with Classroom?
https://youtu.be/1DblFIk1gvc

 

How to Grade Assignment in Google classroom?
https://youtu.be/YPxV5o3bhR8


How the Student will submit an assignment in Google classroom?
https://youtu.be/RihBqe84rPw

 

How to generate Participation E Certificate using Google forms?
https://youtu.be/LbnmcdrRwdE

 


How to generate E Certificate using Google forms?
https://youtu.be/kxwXr3aiCzQ


How to generate E Certificate using custom templates?
https://youtu.be/6csDdjSWiuY


.How to Search for UGC Care listed journals?Scopus/SCI
https://youtu.be/fGi6l3g4Bbo


.How to Create ORCID I'd and link with Scopus?
https://youtu.be/rnLyerOn7Xg


How to Manage Citations Using Mendeley Reference Manager?
https://youtu.be/UHYI-jccxEs

 👍👍👍

Oxygen Radical Absorbance Capacity

ORAC

ORAC is Oxygen Radical Absorbance Capacity. Higher ORAC, Better will be oxygen carrying capacity of blood & Lungs oxygen capacity. 

In the Future, our survival will be based on our Immunity 

Why spices are important for our Life? Look at their ORAC Values....👍🙏

Clove       : 314,446 ORAC 
Cinnamon : 267,537 ORAC 
Coffee.  : 243000  ORAC
Turmeric  : 102,700 ORAC 
Cocoa    : 80,933    ORAC 
Cumin    : 76,800  ORAC 
Parsley  : 74,349 ORAC 
Tulsi       : 67,553 ORAC 
Thyme    : 27,426ORAC
Ginger     : 28,811 ORAC 

Extracts of Ginger , Tulsi, Turmeric are at least 10 times higher ORAC Values. That's how they become effective.

OXYGEN CARRYING CAPACITY OF THE BLOOD CAN BE ENHANCED USING NATURAL FRUITS, VEGETABLES, SPICES, HERBS ....THAT HAVE HIGH ORAC VALUE!
OXYGEN RADICAL ABSORBANCE CAPACITY

PREVENTS: CANCERS, NEURO - DEGENERATIVE DISORDERS, DIABETES, & SO MANY CHRONIC CONDITIONS

Nature boosts immunity ...

 
High ORAC foods and Nutrients such as iron, vitamin C, Zinc, omega 3, Magnesium and Vitamin D helps boost our body's defence mechanism. 

Apart from Tulsi, Ginger, Pepper, Turmeric, Cinnamon. Clove... herbs like Brahmi, Ashwagandha, Shatavari, Mulethi, Arjunarishtam, Peppermint, coriander seeds, cumin black seeds are catching attention of Scientists.  

So, this is more than any vaccine one need for self immunity. Without any side effects. 

Since 80% of Corona positive patients had no symptoms at all , leaves uncertainity for all of us!
Testing 130 crore population is next to impossible. Even if we test daily 100000 people, we will need over 35 years to just test!

This suggests .... our future is our immunity.... just like intel inside in computers, we have to inbuilt immunity inside!

THIS IS WHAT AYURVEDA HAS BEEN TEACHING ALL ALONG!!

Thursday, May 14, 2020

ஊர் திருவிழா

எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை காக்கும் இரும்பு சங்கிலி,
எங்களையெல்லாம் தன் அருளால் காக்கும் தெய்வ சங்கொலி,
எங்கள் மனதில் இருக்கும் தங்க சங்கதி,
அருள்மிகு மலையேறியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா தள்ளிப்போயிருக்கிறது கொரானாவால். 

இந்த தருணத்தில் என் நினைவில் நடத்திக்கொள்கிறேன் அத்திருவிழாவை,

காப்பு கட்டுவதில் தொடங்கும் கொண்டாட்டம்,
வெளியூர்களில் வசிக்கும் கிராமவாசிகளால் நடத்தப்படும் மண்டகப்படிகள், பூஜைகள்  கலைநிகழ்ச்சிகள் ஊரை கோலாகலம் ஆக்கும்,

தேரில் பவனிவரும் தேவியால் தினம் தினம் கொண்டாட்டம்,
தேரில் பின் வரும் தேவதைகள் அதை காண வரும் தேவன்களின் கூட்டம்,

உறவினர்கள் நண்பர்களால் வீடுகள் பொங்கி வழியும்,
குழந்தைகளால் அல்லோலப்படும் தெருக்கள்,
அன்பாலும் அருளாலும் பொங்கி வழியும் கிராமம்,
உலகில் எங்கு இருந்தாலும் வந்து குவியும் ஊர்க்காரர்கள்,

இளைஞர் இளைஞிகளுக்கு இயல்பான வரன் பார்க்கும் படலம்,
எங்கு பார்த்தாலும் அன்னதானம்,

முத்தமிழில் மூன்றாம் தமிழை வாழ வைக்க நாடக இரவு,
எப்பதவியில் இருப்போரும் படித்தோரும் பாமரரும் தரையில் அமர்ந்து நாடகம் பார்க்கும் சமரசம்,

குழந்தைகள் அடிக்கும் கிட்டி சத்தம் வான் பிளக்கும்,
பெண்கள் போடும் மாவிளக்கு மற்றும் பஞ்சாமிர்தம் ஊரே மணக்கும்,
வாணவேடிக்கைகள், வண்ணவிளக்குகள் ஊரை வானவில்லாக்கும்,
சாலையில் போடப்படும் கோலங்கள் ஊரை வண்ண மயமாக்கும்,

மிட்டாய் கடைகள், பலூன் கடைகள், ராட்டினங்கள்  மேலும் பல விளையாட்டுகள் எல்லோரையும்  கட்டிப்போடும்,

உறவுகளை பேணிப் பாதுகாக்க பாக்கு வைக்கும் வைபவம்,
குழந்தைகளுக்கு உறவினர்கள் தரும் திருவிழா காசு சில நூறை எட்டியிருக்கும்,

பறை, மேளம் மற்றும் கொம்பின் ஓசை விண்ணை அதிரவைக்கும்,
விவசாயத்தில் விளைந்த பொருட்க்களைக் கொண்டு அம்மனுக்கு மதுக்காட்டும் படையல்,
பக்தர்களால் காவடியாட்டம் பால்குடம் முடியிரக்குதல் எவ்வளவோ அன்பின் பொருட்டு,

இந்த ஒரு வாரம் எங்கு பார்த்தாலும் மனித தலைகள் அன்பின் வெளிப்பாடுகள் விசாரிப்புகள் எல்லாம் இயல்பாய் நடக்கும்,
கடைசி நாளில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன்,
காப்பு களைதலில் முடியும் எல்லாம்,
அன்று எல்லோர் மனதிலும் வலி, ஏன் எல்லாம் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று,
சிறு பிள்ளையாருக்கையில் அந்த கடைசி நாளில் அழுதிருக்கிறேன் யாருக்கும் தெரியாமல்,

எனக்கு ஒரு பேராசை மட்டுமே உண்டு இறைவா என் வாழ்வில், அடுத்த பிறவி ஒன்று எனக்கு உண்டெனில் , நான் என் ஊரிலேயே திரும்ப பிறக்க வேண்டும் என்பதே அது.

சாமியின் நினைவலைகள்

Tuesday, May 5, 2020

ஆதவனின் வேலை

தன்னில் உள்ள எல்லாவற்றையும்
காட்டிய பின்னும், 
வற்றவைக்கப்பட்டது குளம்.

சாமியின் சிந்தனை.

நம்பிக்கை அழகு

வானம் நட்சத்திரங்களையும்,
நட்ச்சத்திரம் வானத்தையும்
முழுமையாக நம்புகின்றன.
சாமியின் சிந்தனை.

எது அழகு

மண்ணுக்குள் 
இருக்கும் மலர், வேர்.
சாமியின் சிந்தனை


Sunday, May 3, 2020

மகிழ்ச்சிகரமாக_வாழ40_வழிகள்

#மகிழ்ச்சிகரமாக_வாழ40_வழிகள்!!!

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். 

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். 

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.  

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.  

30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள். 

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள். 

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

வாழ்க வலிமையுடன்!!!

Astro Bakthavachalam...

கொரானா காலம்

எனக்கு நானே முடித்திருத்த முயற்சி செய்தேன்,
என் அகந்தை அழிந்தது.
சாமியின் சிந்தனை.