Thursday, May 21, 2020

உண்மையாக ஆசிரியர் யார்.

நகம் கடித்தல் என்ற தீயப்பழக்கத்தின் தீங்கை எடுத்துச் சொல்லி விடச்சொன்ன மாணவன்,

நான் உடல்நலிவுற்று இருந்து பொழுது 'உடுக்கை இழந்தவன் கைப்போல ' உதவிய மாணவன்,

தனக்கு கிடைத்த உதவியை வேண்டாம் என்று சொல்லி பிறருக்கு உதவச் சொன்ன மாணவி,

தனது இரண்டு நாள் பட்டினியால் எனக்கு வறுமை உணர்த்திய மாணவி,

வகுப்பில் நீங்கள் நுழையும்முன் உங்கள் புன்னகை நுழைய வேண்டும் எனச் சொன்ன மாணவன்,

நடக்கும் போது நிமிர்ந்து நடந்தால் உங்கள் மேல் நம்பிக்கை கூடும் என்று கற்றுத்தந்த மாணவி,

என்னை கண்டிக்க வேண்டும் ‌என்றால் தனியே கூப்பிட்டு கண்டியுங்கள் என்று போதித்த மாணவன்,

தாயை தந்தையை இழந்த பின்னும் இந்த உலகை நம்பிக்கையோடு பார்க்கும் சில மாணவிகள்,

பணவருமை இருந்தாலும் மனவருமை இல்லாமல் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் மாணவ/மாணவிகள்,

இது மட்டுமல்லாமல் நிறைய அவர்களிடம் கற்றும் கற்றக்கொண்டிருக்கும் நான் இன்னமும் சொல்லிக்கொள்கிறேன்  'நான் தான் அவர்களின் ஆசிரியர் என்று'.

  சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment