Sunday, June 9, 2019

பிரச்சினைகளை எளிதாக கடந்து செல்வது எப்படி?!

பிரச்சினைகளை எளிதாக கடந்து செல்வது எப்படி?!

வரும் பிரச்சினைகள் கண்டு ஓட வேண்டாம்.ஒளிய வேண்டாம்.

அது ஓடினால் துரத்திக் கொண்டே வரும்.ஓளிந்தால் உங்கள் மனதின் அடி ஆழத்தில் சென்று அது ஒளிந்து கொள்ளும்.

பிரச்சினைகளை எதிர் கொண்டு அதை வரவேற்று அதற்கு வாழ்த்து சொல்லுங்கள்.

அது உங்கள் விழிப்புணர்வை மேலும் கூர்மையாக்கும்.

பிரச்சினைகளின் வேர்களை விசாரியுங்கள்.அது விழுதுகள் விடுவதை தவிர்க்கும்.

பிரச்சினைகளின் உணர்வுகளை உள்வாங்கி அதை அசைபோட்டு நன்கு அனுபவியுங்கள்.

அந்த உணர்வுகளோடு உறவாடுங்கள்.அதனோடு கலந்து உறவாடி இரண்டறக் கரைந்து விடுங்கள்.

பிரச்சினைகளும் கரைந்து காணாமல் போய் விட்டதை உங்களால் உணர முடியும்!!!

#ஓஷோ

No comments:

Post a Comment