பிறருக்கு உதவுவதா?
அன்பு செய்வதா?
அறிவு புகட்டுவதா?
பயணப்படுதலா?
பற்றற்று வாழ்வதா?
தேடி திரிவதா?
தேங்கிப் போய் இருப்பதா?
அதன் போக்கில் விடுவதா?
கடிவாளமிட்டு கட்டுப்படுத்துவதா?
காதல் செய்வதா?
கவலையற்று வாழ்வதா?
தோல்வியில் கற்பதா?
வெற்றியில் உழல்வதா?
இயற்கையில் மகிழ்வதா?
இல்லை செயற்கையாய் செயல்படுவதா?
வேடிக்கை பார்ப்பதா?
வீருக்கொண்டு எழுவதா?
நினைத்து மகிழ்வதா?
தோண்டி துவழ்வதா?
வேண்டி திரிவதா?
விதியின் படி போவதா?
இக்கணம் வாழ்வதா?
இல்லை, இப்படியே புலம்புவதா?
எது வாழ்க்கை.
-சாமி.
No comments:
Post a Comment