நீ என்னை மதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
நான் உன்னை மரியாதையுடன் நடத்துவதால்
நீ என்னை அப்படி நடத்த தேவையில்லை
நான் உன்னிடம் நன்றியுடன் இருப்பதால் நீ என்னிடம் நன்றியுடன் இருக்க வேண்டியதில்லை
நான் உன்னிடம் அன்பாக இருப்பதால் நீயும் அன்பாக இருக்க தேவையில்லை
நான் உன்னிடம் அக்கறையுடன் இருப்பதால் நீயும் அப்படி என்னிடம் இருக்கத் தேவையில்லை
ஆனால் ஒரு உறவில் இவையெல்லாம் அவசியம் என்று மட்டும் எனக்கு தெரியும்
நான் நானாக இருக்கிறேன்
நீ நீயாக இரு
காய்ந்த மரக்கட்டை துளிர்க்கும் என்று நினைத்தால் நான் ஒரு முட்டாள் ஆவேன்.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment