ஒவ்வொருத்தவரிடமும் ஒவ்வொரு பதில்
இத்தருணத்தில் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்
அடுத்தவருக்கு உதவிடுவதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்
அன்பு செய்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்
குடும்பத்திற்கு உழைப்பதே வாழ்க்கை என்பார் மற்றொருவர்
பயமில்லாமல் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்
நாட்டுக்காக வாழ்வது வாழ்க்கை என்பார் இன்னொருவர்
நம் இயல்பாய் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்
அடுத்தவரை மன்னிப்பதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்
உயிரோடு இருப்பதே வாழ்க்கை என்பார் ஒருவர்
நோயற்று வாழ்வதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்
நோக்கமுடன் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்
விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்
பதில் இல்லா கேள்விதான் 'வாழ்க்கை' என்கிறார் ஓஷோ
அப்பதிலை தேடுவது தான் வாழ்க்கை என்கிறேன் நான்.
-சாமி.