Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Saturday, August 2, 2025

அன்பு

சில அன்பு புன்னகையுடன் முடிந்து விடுகிறது
சில அன்பு பார்வைகளுடன் பக்குவமாய் நின்று போகிறது 
சில அன்பு பயண முடிவில் இறங்கிக் கொள்கிறது 
சில அன்பு கல்வி சாலையுடன் நின்று விடுகிறது 
சில அன்புகள் தேவை தீர்ந்தபின் தீர்ந்து போகிறது 
சில கொடுக்கல் வாங்கலுடன் நீர்த்து போகிறது 

சில அன்பு சில அலுவல்களுடன் அஸ்தமனம் ஆகிகிறது

சில அன்பு இடம் மாறுதலில் முடிவுக்கு வருகிறது 

சில அன்பு காதலாய் சில வருடங்கள் வருகிறது
சில அன்பு நட்பாக பல வருடங்கள் நீள்கிறது

 சில காதலாக வாழ்வாக வாழ்வின் இறுதிவரை வருகிறது

சில அன்பு மாண்ட பின்னும் 
நம்மை நினைவில் கொள்கிறது 

சில கணங்களில் முடிந்தாலும்
காலம் முழுவதும் வந்தாலும் காலத்திற்குப் பின் நின்றாலும்
அன்பு அன்பு தான் 
அது ஒன்றுதான் 
வாழ்வதற்கான அச்சாணி.

-பூமி.சாமி.

Monday, May 20, 2024

உனக்கு வேண்டியது
உனக்கும் தெரிகிறது 
எனக்கும் தெரிகிறது
உரிமையாய் கேட்டு பெற்றுக்கொள்ளுகிறாய்.

எனக்கு தேவையானது
எனக்கும் தெரியவில்லை
உனக்கும் தெரியவில்லை
கேட்கவும் தெரியவில்லை
கிடைக்கப் பெறவும் இல்லை.
ஆனால் மகிழ்வோடு இருக்கிறேன் 
உன்னை பெற்றதனால்.

பூமி.சாமி.

Thursday, March 14, 2024

கிடைக்கும் இடத்தில்
பெற மனமில்லை
கிடைக்கா இடத்தில்
யாசித்து காயப்படுகிறோம்,
அன்பு.

பூமி.சாமி.

Tuesday, November 14, 2023

பலர் வார்த்தைகளால்
அன்பை பொழிகின்றனர்

சிலர் அமைதியாக
தன் சிறு சிறு செயல்களால்
அன்பு செய்கின்றனர்

ஆனால் முதல் வகை
ஆட்களைத் தான்
இவ்வுலகு நம்புகிறது.

பூமி.சாமி.


Wednesday, November 8, 2023

எளிதில்
கிடைக்கும்
எதற்கும்
மதிப்பு
குறைவுதான்,

உன்
அன்பு உட்பட.

பூமி.சாமி.

Tuesday, June 6, 2023

உண்மையான அன்பு

சிலபேர் " உனக்கு சூடு சுரணை இல்லையா"
என்று என் காது படவே பேசுகிறார்கள்

 எத்தனை முறை காயப்பட்டாலும்
அவமானப்படுத்தப் பட்டாலும் 
அதையெல்லாம் மறந்து
 நான் உன் முன் நிற்கிறேன் 

சூடு சுரணை உள்ள மானஸ்தர்களை 
பார்த்து நான் கேட்கிறேன் 
" உண்மையான அன்பின் வலிமையை என்றாவது நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா" என்று.

பூமி.சாமி.

Sunday, June 4, 2023

அன்பு

நீ எனக்கு துன்பத்தை தந்தால்
 நான் உனக்கு அன்பை தருவேன்

நீ என் மீது வெறுப்பை உமிழ்ந்தால்
நான் உன்மீது அன்பை உமிழ்வேன்

நீ என்மீது கோபத்தை காட்டினால்
நான் உன்மீது அன்பை காட்டுவேன்

நீ எனக்கு தீங்கு செய்தால்
நான் உனக்கு அன்பு செய்வேன் 

நீ எதுவேண்டுமானாலும் செய்துவிட்டு போ
என்னிடம் அடுத்தவருக்கு கொடுக்க அன்பு மட்டுமே இருக்கிறது.