Sunday, February 19, 2023

அக்கறை

இன்பமோ துன்பமோ என் விரல்கள் தொடுதிரையை தொட்டு உன்னைத்தான் அழைக்கிறது பகிர்ந்துக்கொள்ள

 நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் கற்பனையில் உன் விரல் பற்றியே நடக்கிறேன் 

ஆறுதல் தேவைப்படும்போதெல்லாம் உன் தோள்களை தான் தேடி அலைகிறேன் 

கனிவு தேவைப்படும் போதெல்லாம் உன் கண்களைத் தான் தேடுகிறேன்

 உன்னிடமிருந்து எனக்கு ஒன்றுமே வேண்டாம் உன் அக்கறையை மட்டும் தந்து விட்டுப் போ அது என்னை கரை சேர்க்கும்.

-சாமி.

No comments:

Post a Comment