நடக்கப் போவதில்லை
ஒருநாள் ஒருபடியேனும் உருப்படியாய் ஏறு
ஒவ்வொரு நாளும் தவறாமல் ஏறு
சறுக்கிடும் வழுக்கிடும் கலங்காதே கவலைப்படாதே கற்றுக்கொள்
கரை சேர்வாய்
இங்கு தோல்வி என்ற ஒன்று இல்லை எல்லாம் வெற்றிக்கான பட்டறிவு படிகள் தான்
வெற்றியின் வாயில் காவலன் தோல்விதான்
அவனை சந்திக்க நேர்ந்தால்
நீ வெற்றியின் வாயிலில் இருக்கிறாய் என்று உணர்ந்து கொள்
எல்லாம் உன்னுள் இருக்கிறது
உன்னை நம்பு உழைத்திடு
உலகை உன்னதாய் ஆக்கிடு.
-சாமி.
No comments:
Post a Comment