நீ சொல்லவும்
இல்லை...
நான் கேட்கவும்
இல்லை...
இத்தனை ஆண்டுகளாகியும்...
இன்னும்...
நீயும் ...
கேட்கவில்லை...
நானும்...
சொல்லவில்லை...
நாம் பிரியவும் இல்லை...
நாம் சேரவும் இல்லை....
இருந்தாலும்...
நம் இதயத்தில்...
ஏதோ...
ஓர் ஓரமாய்...
ஓசையின்றியே...
துடித்துக் கொண்டு தான்
இருக்கிறது...
'அக்கறை' என்ற பெயரில்
என் மீது நீயும்...
உன் மீது நானும்...
பரிமாறிக் கொள்ளும்...
நம் காதல்...💜
✨ கண்ணம்மா
No comments:
Post a Comment