Saturday, October 28, 2023

படித்ததில் பிடித்தது

*வருமானம்* *இல்லா* *வாழ்க்கையை* *விட தன்மானம்* *இல்லா* *வாழ்க்கையே* *அவமானம்.* 
                 உங்களுக்கென ஒரு தன்மானம் எப்போதும் இருக்க வேண்டும்.

அது மற்றவர்களால் “திமிர்” என பார்க்கப்பட்டாலும் அந்த தன்மானத்தில் இருந்து எப்போதும் விலக்காதீர். 

வறுமை உங்களை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான மரியாதையை தேடி தரும்.

தன் மீது குப்பைகள் விழுவதை கடலால் தடுக்க முடியாது.

ஆனால். அவைகளை, தன் அலையின் சக்தியைக்கொண்டு, தூக்கி தூர கரையில் வீச முடியும்.

அதுபோலத்தான். நம்மீது விழுகின்ற, இழிசொல், பழிச் சொல் இவைகளை நம்மால் தடுக்க முடியாது.

ஆனால், அவைகளை, அலட்சியம் படுத்துவதின் மூலம், தூக்கி தூர வீச முடியும்.

எந்த ஒரு மனிதனும் தனக்குப் பிடித்த ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேசாத வரை அவனது கவலைகளும் கஷ்டங்களும் எந்தக் காலத்திலும் முடிவுக்கு வருவதில்லை.

பிடிவாதம் அதிகமானால் தன்னைச் சேர்ந்தவர்களை விட்டுத் தொடர்ச்சியாகப் பிரிந்து விட வேண்டியது தான்.

உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இடத்தில் சிரித்தாலும் அழுதாலும் ஒன்று தான்.

சோறு பொங்கும் போது தீயைக் கம்மிப் பண்ணுங்க. மனசு பொங்கும் போது வார்த்தைகளைக் கம்மிப் பண்ணுங்க.

அதுதான் வாழ்க்கைக்கு  அழகு.

No comments:

Post a Comment