Tuesday, October 31, 2023

படித்ததில் பிடித்த கவிதை

பேரன்பெல்லாம் 
வேண்டாம்
அவ்வளவு அன்பை என்னால் கையாள முடிவதில்லை 
அவ்வளவு அன்பை என்னால்  திருப்பிச்செலுத்திட இயலவில்லை

புழங்கியது போக 
மிச்ச அன்பெல்லாம்
பரண் மேல் கிடந்து
பாழாய்ப்போகும் சோகமெல்லாம் 
பாவம்
இந்த பேரன்பில்தான் 
நிகழ்கிறது 
 
பின்னும்
கொடுப்பதாயின் 
மனமுவந்து சிறிய அன்பினையேத் தாருங்கள்
எனக்கு 

கைக்கு அடக்கமாய் 
கையாள எளிதாய்
இன்னும் 
நான் திருப்பி செலுத்திட ஏதுவாய் 
இருக்கட்டும்
அவை

பேரன்பின் 
பெரும் மூச்சு முட்டல்களின்றி
ஒரு சிறிய புன்னகையில் 
ஒரு சிறிய நலன் விசாரிப்பில்
ஒரு சிறிய தலைகோதலில்
தொடரட்டும் 
அவை

-ரிஸ்கா முக்தார்-

No comments:

Post a Comment