Showing posts with label இருக்கும்போதே கொண்டாடுவோம். Show all posts
Showing posts with label இருக்கும்போதே கொண்டாடுவோம். Show all posts

Wednesday, May 3, 2023

இருக்கும்போதே கொண்டாடுவோம்

என் இறுதி ஊர்வலத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்

 இப்பொழுது வாருங்கள் பேசிக்கொண்டு காலார நடப்போம் 

எனக்கு உங்கள் இறுதி மரியாதை வேண்டாம் 
இப்பொழுது என்னை மரியாதையுடன் நடத்துங்கள் போதும்

அப்போது என் மீது அழுது புரள வேண்டாம்
 இப்பொழுது என்னோடு சிறிது நேரம் சிரித்து பேசுங்கள் போதும்

 அப்போது என்னால் கேட்க முடியாத ஆயிரம் புகழ்  மொழிகள் வேண்டாம் 

ஒன்றிரண்டேனும் இப்பொழுது என் காதில் கூறுங்கள் போதும்

உங்கள் மலர் மாலைகள் வேண்டாம் 
இப்போது என்னை மலர்ந்த முகத்தோடு அணுகுங்கள் போதும்

அப்போது என்னை விட்டுப் பிரிந்து செல்கிறாயே என்று அழுது அலற்ற வேண்டாம் 
இப்போது 'நான் உன்னோடு இருக்கிறேன் 'என்ற கூறுங்கள் அது போதும்

அப்போது புகைப்படம் ஒட்டி வருந்துகிறேன் என்ற வார்த்தைகள் வேண்டாம்
இப்போது உயிர் படமாய் உன்னோடு இருக்கிறேன் என் உணர்வை மதி அது போதும் 

 நான் இருக்கும் நாட்களில் இதுவெல்லாம் செய்தால் 
என் இறுதி நாள் தள்ளிப்போகும் அது போதும் எனக்கு 

என் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டாம் நீங்கள்.



-பூமி.சாமி.