நினைக்கையில் கடந்தகாலம்,
சில நேரம் கற்க்கண்டாய்,
சில நேரம் கசப்பாய் இருக்க,
எதிர்காலம், சில நேரங்களில் நம்பிக்கையுடன்,
சில நேரங்களில் நல்இருளாய் தெரிகிறது,
உலகத்தில் கடினமான ஒரு வேலை
உண்டென்றால் அது நிகழ்காலத்தில் நிற்பதுதான் என சவால் விடுகிறது
நிகழ்காலம்
கடந்ததை நினைப்பதா
நிற்பதை ரசிப்பதா
வருவதை வரவேற்பதா
என்று குழம்பி நிற்கையில்
எதையும் ரசிக்கவும் நினைக்கவும் விடாமல்
என்னை தள்ளிக்கொண்டு போகிறது
வாழ்க்கை.
-சாமி.
No comments:
Post a Comment