Wednesday, January 4, 2023

தலையில் வாங்கிய குட்டு

மைதானத்தில் நடந்த வாத்து நடை

கையில் வாங்கிய பிரம்பு அடி

தரையில் போட்ட முட்டிக்கால் 

வகுப்பறையின் வாசலில் நின்றது

பெஞ்சில ஏறி நின்றது

காதில் கிள்ளு வாங்கியது

பத்துமுறை எழுதியது

தோப்புக்கரணம் போட்டது

இவை ஏற்படுத்திய வலிகள் தான்

இன்னும் என்னை வழிநடத்துகிறது
ஒழுக்கமான வழிகளில்.


-சாமி.





No comments:

Post a Comment