மைதானத்தில் நடந்த வாத்து நடை
கையில் வாங்கிய பிரம்பு அடி
தரையில் போட்ட முட்டிக்கால்
வகுப்பறையின் வாசலில் நின்றது
பெஞ்சில ஏறி நின்றது
காதில் கிள்ளு வாங்கியது
பத்துமுறை எழுதியது
தோப்புக்கரணம் போட்டது
இவை ஏற்படுத்திய வலிகள் தான்
இன்னும் என்னை வழிநடத்துகிறது
ஒழுக்கமான வழிகளில்.
-சாமி.
No comments:
Post a Comment