ஒரு வார்த்தை பதிலுக்காக
ஒரு நாள் காத்திருப்பேன்
உனக்கென்ன தெரியும்
அந்த காத்திருப்பின் வலி
இது பதிலாய் வரும் என நினைத்து
மனம் பூரிக்கும்
அல்ல,
இது பதிலாய் வரும்
என் மனம் வேதனைகுள்ளாகும்
இப்படி ஓராயிரம் வார்த்தைகள் மனதில் வந்து செல்லும்
கடைசியில் ஒரு ஸ்மைலி பதிலாய் வரும்
ஒருவனை அவமானப்படுத்தப்
காக்க வைத்தலே போதுமாய் இருக்கிறது
வார்த்தைக்கு பதில்
வார்த்தை தானே,
ஸ்மைலி அல்ல.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment