நீ செய்த நன்மையெல்லாம்
கண்முன் வந்து போகிறது
உன்னிடம் அன்பாய் இருக்க நினைக்கிறேன்
நீ செய்த தீமையெல்லாம்
நினைவில் வந்து போகிறது
என்ன செய்வது என்று
தெரியாமல்
உன்னிடம் அன்பாகவே இருந்து விடுகிறேன்
ஏனென்றால்
எனக்கு சரியாய் செய்ய தெரிந்தது
அது மட்டும்தான்.
பூமி.சாமி.
No comments:
Post a Comment