நான் கற்பிக்கவும் இல்லை
நீ கற்றுக் கொள்ளவும் இல்லை
நம்மில் நடப்பது உரையாடல் தான்
நான் வழி காட்டவும் இல்லை
நீ வழி நடக்கவும் இல்லை
சேர்ந்தே தான் நடக்கிறோம்
நான் எதையும் கொடுக்கவும் இல்லை
நீ எடுத்துக் கொள்ளவும் இல்லை சேர்ந்தே தான் தேடுகிறோம்
நான் எதையும் சொல்லவுமில்லை
நீ கேட்கவுமில்லை
சேர்ந்தே தான் சிந்திக்கிறோம்
நான் ஒன்றும் வெளிச்சமும் இல்லை
நீ இருளும் இல்லை
நாம் இருவருமே சூரியன் தான்
நான் பெரியவனும் இல்லை
நீ சிறியவனும் இல்லை
சகப் பயணியாய் தான் பயணிக்கிறோம்
நான் ஆசிரியனும் இல்லை
நீ மாணவனும் இல்லை
இருவருமே தான் கற்கிறோம்.
-சாமி.