Tuesday, March 28, 2023

உன் மீது நான் வைத்திருப்பது உலகப் பெரு பிம்பம்,
அது உடைந்து போகையில் நானும் உடைந்து போகிறேன்.

உனது அக்கறை கரையில்லாத கடல், அதில் கறை காண்கையில் கலங்கித் தான் போகிறேன்.

என் தவறை பலமுறை மன்னித்த உன்னை,
ஒருமுறை மன்னிக்க மனமில்லாமல் கலங்கி நிற்கிறேன்.

உன்மேல் மலைபோல் வைத்திருந்த நம்பிக்கை மண்ணாகி போனதனால்
உன்னை மன்னிக்ககூட முடியவில்லை இந்த முறை,
என்னை மன்னித்து விடு மறுபடியும்.

-பூமி.சாமி

No comments:

Post a Comment