கல்லூரி விழாவா 20 புகைப்படங்கள் காதணி விழாவா 50 புகைப்படங்கள் இப்படி எதையும் ரசிக்க முடியாமல் புகைப்படங்களாக புகைந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை
இப்படி நினைவுகள் மனப்படங்களாக மனப்பாடமாகமல்
புகைப்படங்களால் நிறைகிறது
வாழ்க்கை
வாழ்வில் ஓடி ஓரிடத்தில் நிற்கையில் வாழ்வை அசை போட மனப்படங்கள் தான் வேண்டுமே தவிர
புகைப்படங்கள் அல்ல புரிந்து கொள்ளுங்கள் புண்ணியவான்களே.
பூமி.சாமி.
No comments:
Post a Comment