Saturday, November 25, 2023

கிடைத்திருப்பதை நினைத்து 
திருப்தி கொள்கிறது அறிவு

கிடைக்காமல் போனதை நினைத்து துன்பத்தில் உழல்கிறது மனது

இன்று உனக்கு கிடைத்திருப்பது பலருக்கு கிடைக்கவில்லை என்கிறது அறிவு 

சிலருக்கு கிடைத்திருப்பது 
எனக்கு கிடைக்கவில்லை என்கிறது மனது

நம்பிக்கை கயிற்றால்
நம்மை  முன்னிழுத்து செல்கிறது அறிவு

அவநம்பிக்கை சங்கிலியால் நம் காலை கட்டி பிணைத்திருக்கிறது மனசு

சில நேரம் அறிவின் பிடியில்
பல நேரம் மனதில் பிடியில்

கிடைத்ததில் மகிழ்ந்திரு கிடைக்காததற்காக உழைத்திடு.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment