Wednesday, May 21, 2025

வெத்து சொற்களால் 
நிரம்பி கிடக்கிறது 
உலகம்‌.

பூமி.சாமி.

Thursday, May 8, 2025

என் நிம்மதிக்கு நல்லது

சில நேரங்களில் உங்களை பற்றி 
நினைக்கும்போது 

உங்களுக்காக அவ்வளவு உழைத்து 
இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது
 
உங்கள் மேல் அவ்வளவு அக்கறையை
காட்டி இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது 

உங்களுக்காக என்னை வருத்தி இவ்வளவு மெனக்கெட்டு இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது 

என் செய்வது நான் அப்படித்தான் 

ஆனால் உங்களுக்காக என்னை மாற்றி கொண்டால்
ஒவ்வொருத்தருக்காகவும் என்னை மாற்றி கொள்ள வேண்டும் 

உங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை 
எதிர்க்கவும் இல்லை 
அப்படியே கடந்து செல்கிறேன் 
அதுதான் என் நிம்மதிக்கு நல்லது.

-பூமி.சாமி.

Sunday, May 4, 2025

இப்போது 
உன் உதவிகள் ஏதும் தேவைப்படுவதில்லை

என்னை ஊக்கப்படுத்தும் 
உன் வார்த்தைகளுக்கு கூட வேலையில்லை

துன்பங்களில் கண்ணீர் துடைக்கும் 
உன் கரங்கள் கூட தேவைப்படுவதில்லை

காலமும் தூரமும் கொஞ்சம் நஞ்சம் 
இருந்த உன் நினைவுகளைக்கூட  பிடுங்கிக் கொண்டன

ஏதும் தேவையில்லாத போது 
நீ எதற்கு என்று
ஞாபகமாய் மறந்து விட்டேன் உன்னை.

-பூமி.சாமி.

Thursday, May 1, 2025

எதிர்பார்ப்பு

கதிரவனிடமிருந்து குளிர்ச்சியையோ
நிலவிடுமிருந்து வெம்மையையோ
எதிர்பார்க்க வில்லை  நான் 

நான் எதிர்பார்ப்பது எல்லாம் 
மேகத்திடம் இருந்து மழையையும்
மரத்திடமிருந்து நிழலையும் தான்.

பூமி.சாமி.


Wednesday, April 30, 2025

நாற்றத்தின் உதடுகளில்
நறுமண வார்த்தைகள்.
ஜாக்கிரதை.

பூமி.சாமி.

Sunday, April 27, 2025

என் வகுப்பறை

முதல் நாள் நுழைகையில் அன்னியமாய் தெரிந்தது 
இப்போது அன்னியோன்யமாய் ஆனது

அன்பை தந்தது 
நல்ல அரவணைப்பை தந்தது 
இணை பிரியா நட்பை தந்தது எதிர்பார்ப்பில்லா நேசத்தை தந்தது

எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை தந்தது 
களங்கமில்லா கல்வியை தந்தது வெற்றியின் சூத்திரத்தை தந்தது தோல்வியை தாங்கும் மனவலிமையை தந்தது 

எல்லாம் மாறும் என்ற உண்மையை சொன்னது
என்னின் திறமையை எனக்குக் காட்டியது 
உன்னால் முடியும் என்று உரக்கச் சொன்னது 
இதுதான் உலகம் என்ற உண்மையை சொன்னது 
உலகால் முடியும் என்றால் 
உன்னாலும் முடியும் என்று உரக்கச் சொன்னது 

எங்களை பாதுகாத்து அரவணைத்து நின்றது 

எல்லாம் தந்த பின்
இந்த உலகை வெல்ல 
என்னை பிரசவிக்கிறது 
கல்வியின் கருவறையாம்
என் வகுப்பறை.

பூமி.சாமி.
முதிர்ச்சி 
முதிர்வு
என்பதும் 
வேறு வேறு,

முதிர்ந்தவர்கள் எல்லாம் 
முதிர்ச்சி பெற்றவர்கள் 
என்று நினைத்தால்
அது உன் அறியாமை.

-பூமி.சாமி.