Sunday, April 27, 2025

என் வகுப்பறை

முதல் நாள் நுழைகையில் அன்னியமாய் தெரிந்தது 
இப்போது அன்னியோன்யமாய் ஆனது

அன்பை தந்தது 
நல்ல அரவணைப்பை தந்தது 
இணை பிரியா நட்பை தந்தது எதிர்பார்ப்பில்லா நேசத்தை தந்தது

எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை தந்தது 
களங்கமில்லா கல்வியை தந்தது வெற்றியின் சூத்திரத்தை தந்தது தோல்வியை தாங்கும் மனவலிமையை தந்தது 

எல்லாம் மாறும் என்ற உண்மையை சொன்னது
என்னின் திறமையை எனக்குக் காட்டியது 
உன்னால் முடியும் என்று உரக்கச் சொன்னது 
இதுதான் உலகம் என்ற உண்மையை சொன்னது 
உலகால் முடியும் என்றால் 
உன்னாலும் முடியும் என்று உரக்கச் சொன்னது 

எங்களை பாதுகாத்து அரவணைத்து நின்றது 

எல்லாம் தந்த பின்
இந்த உலகை வெல்ல 
என்னை பிரசவிக்கிறது 
கல்வியின் கருவறையாம்
என் வகுப்பறை.

பூமி.சாமி.

No comments:

Post a Comment