இப்போது அன்னியோன்யமாய் ஆனது
அன்பை தந்தது
நல்ல அரவணைப்பை தந்தது
இணை பிரியா நட்பை தந்தது எதிர்பார்ப்பில்லா நேசத்தை தந்தது
எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை தந்தது
களங்கமில்லா கல்வியை தந்தது வெற்றியின் சூத்திரத்தை தந்தது தோல்வியை தாங்கும் மனவலிமையை தந்தது
எல்லாம் மாறும் என்ற உண்மையை சொன்னது
என்னின் திறமையை எனக்குக் காட்டியது
உன்னால் முடியும் என்று உரக்கச் சொன்னது
இதுதான் உலகம் என்ற உண்மையை சொன்னது
உலகால் முடியும் என்றால்
உன்னாலும் முடியும் என்று உரக்கச் சொன்னது
எங்களை பாதுகாத்து அரவணைத்து நின்றது
எல்லாம் தந்த பின்
இந்த உலகை வெல்ல
என்னை பிரசவிக்கிறது
கல்வியின் கருவறையாம்
என் வகுப்பறை.
பூமி.சாமி.
No comments:
Post a Comment