நம்மின் நலன் பொருட்டு நமக்காக
சில அறிவுரைகள் கூறுவார்கள்
ஆனால் அது நம் காதில் ஏறாது
அதன் விளைவுகளை
காலமும் வாழ்க்கையும்
பாடம் புகட்டும்
கத்துவோம் கதறுவோம்
காலம் கருணை காட்டாது
எல்லாம் காலம் கடந்து போய் இருக்கும்
இது என் வாழ்வின் படிப்பினை
முடிந்தால் புரிந்து உணர்ந்து
நடந்து கொள்ளுங்கள்
காலம் ஒருபோதும் கருணை காட்டாது
நினைவில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment