Wednesday, August 6, 2025

இரு கைகளையும் 
தோள் வலிக்கும் அளவுக்கு 
வானத்தை நோக்கி 
விரித்து காட்டுகிறேன்,

உன்னை எவ்வளவு பிடிக்கும்
என்ற கேள்விக்கு பதிலாய்.

-பூமி.சாமி.
உன்னை எவ்வளவு பிடிக்கும்,
சொல்ல தெரியாது,
செயலில் சொல்ல முயல்கிறேன் 
செய்து கொண்டும் இருக்கிறேன்,
உணர்வாய் ஒருநாள்.

-பூமி.சாமி.


Tuesday, August 5, 2025

செய்த உதவியையும்
உதவி பெற்றவரையும்
உடனே மறந்து விடுவது
உள்ளத்திற்கும் உணர்விற்கும்
நல்லது.

நமக்கு உதவியவரையும்
பெற்ற உதவியையும் 
உலகம் உள்ளவரை 
உள்ளத்தில் உணர்வோடு
வைப்பது உள்ளபடி நல்லது.

-பூமி.சாமி.


Sunday, August 3, 2025

நீ எனக்கு கொடுக்க நினைத்து
கொடுத்தால்
 நிறைய எதிர்பார்ப்பான்
என்று கொடுக்க மனமில்லாமல் போன
என் உடைமைகளின்
பட்டியல்  இதோ 

 பாராட்டுக்கள் 
கோபங்கள் 
புன்னகைகள்
கைகுலுக்கல்கள் 
கைகோர்ப்புகள் 
மெஸேஜ்கள்
அழைப்புகள்
அணைப்புகள்
முத்தங்கள் 
நன்றிகள் 
வாழ்த்துக்கள்
திட்டுகள்
மன்னிப்புகள்
அடிகள் 
இப்படி எத்தனையோ 

 நேரம் வரும்போது 
நினைவு வரும்போது 
அதற்கான தருணங்கள் வரும்போது
என்னிடம் சேர்ப்பித்து விடு சகி

இல்லை எனில் 
 அதுவே ஒரு நாள் உனக்கு பாரமாகும்

 பின்குறிப்பு :
பட்டியலில் இல்லாத 
சொல்லப்படாத பல என் உடைமைகள் உன்னிடம் இருக்க்கூடும்
அவைகளையும் கொடுத்துவிடு சகி.

நான் உனக்கு கொடுக்க நினைத்தவை எல்லாம் 
அந்த அந்த நேரத்தில் சற்று கூடுதலாகவே கொடுத்து இருக்கிறேன் சகி.
என்னிடம் உன்னுடையவை ஒன்றுமில்லை 
உன் நினைவுகளை தவிர.

- பூமி.சாமி
கதகதப்பை கொடுக்கும் 
நம்பிக்கை அளிக்கும்
நான் இருக்கிறேன் என்று உண்ர்த்தும்
துயரம் துடைக்கும் 
உன்னை விட்டு கொடுக்க மாட்டேன் என்று உறுதியளிக்கும்

இத்தனை செய்கிறது 
ஒரு அக்கறையானவரின் 
கைகோர்ப்பு.

-பூமி.சாமி.


Saturday, August 2, 2025

அன்பு

சில அன்பு புன்னகையுடன் முடிந்து விடுகிறது
சில அன்பு பார்வைகளுடன் பக்குவமாய் நின்று போகிறது 
சில அன்பு பயண முடிவில் இறங்கிக் கொள்கிறது 
சில அன்பு கல்வி சாலையுடன் நின்று விடுகிறது 
சில அன்புகள் தேவை தீர்ந்தபின் தீர்ந்து போகிறது 
சில கொடுக்கல் வாங்கலுடன் நீர்த்து போகிறது 

சில அன்பு சில அலுவல்களுடன் அஸ்தமனம் ஆகிகிறது

சில அன்பு இடம் மாறுதலில் முடிவுக்கு வருகிறது 

சில அன்பு காதலாய் சில வருடங்கள் வருகிறது
சில அன்பு நட்பாக பல வருடங்கள் நீள்கிறது

 சில காதலாக வாழ்வாக வாழ்வின் இறுதிவரை வருகிறது

சில அன்பு மாண்ட பின்னும் 
நம்மை நினைவில் கொள்கிறது 

சில கணங்களில் முடிந்தாலும்
காலம் முழுவதும் வந்தாலும் காலத்திற்குப் பின் நின்றாலும்
அன்பு அன்பு தான் 
அது ஒன்றுதான் 
வாழ்வதற்கான அச்சாணி.

-பூமி.சாமி.

Friday, August 1, 2025

யாரும்
எதுவும்
இல்லாமல் 
வாழ 
பழகி கொள்வது
மனதிற்கு நல்லது.

-பூமி.சாமி.