Sunday, July 6, 2025

என் விரல்களின் இடைவெளியை
கனகச்சிதமாய் நிறைவாய் 
நிறப்பிடும் விரல்கள் 
உன்னுடுதாய் தான் இருக்கும் 
உன்னுடன் கோர்பதற்காக நீட்டப்பட்ட
என்னுடைய கரம் அப்படியே 
காத்து கிடக்கிறது 
என்றோ வந்து நிறைத்துடுவாய்
என்ற நம்பிக்கையில்.

பூமி.சாமி.

Friday, July 4, 2025

எவ்வளவோ முயன்றேன்
முடியவில்லை 
கடைசியில்தான்
தெரிந்தது
அது நாய்வால் என்று.

-பூமி.சாமி‌

Sunday, June 29, 2025

நமக்கு நிறைய பயன்படுவது
இரும்பு தான் 
ஆனால் அதன் மதிப்பு தெரிவதில்லை 
ஏனெனில் எளிதாக கிடைக்கிறது 

தங்கம் குறைவாக. பயன்படுகிறது ஆனால் மதிக்கப்படுகிறது 
ஏனெனில் அரிதானது.

நீங்கள் 
தங்கமாக போற்றப்பட்ட வேண்டுமா
இரும்பாக பயன்பட வேண்டுமா
என்பதை முடிவு செய்து
செயல்படுங்கள்.
காயப்படமாட்டீர்கள்.

பூமி.சாமி.




Saturday, June 28, 2025

எப்பொழுதும் 
வெற்றி 
பெற்றவர்களுடன்
நான் இருக்க
விரும்புவது இல்லை 
மேலும் 
அவர்களுக்கு நான் 
தேவையும் இல்லை 

வெற்றி தாமதமானவர்களுடன்
 தான் நிற்கிறேன் 
தாமதம் தடையும் இல்லை 
முடிவும் இல்லை 

எது தவறு என்று கண்டுபிடி
திருத்திடு திட்டமிடு
கற்றலை விரிவுப்படுத்து
நிலையான பயிற்சி செய்
மேலும் முயற்சி செய்
உலகால் முடியும் என்றால் 
உன்னாலும் முடியும் 
நான் உன்னோடு இருக்கிறேன்.

-பூமி.சாமி.

Thursday, June 26, 2025

அது ஒரு திங்கட்கிழமை 
என்னுடன் தனியாக இருந்ததால் 
அவசர அவசரமாய் அங்கிருந்து அகன்றாய்
நான் தனியாக இருக்கும் வரை
அவ்விடம் வரவில்லை 
ஆனால் என்மீது நம்பிக்கை 
இருப்பதாய் சொன்னாய்
நான் நம்பவில்லை 
அந்த தீராத காயம்
ஒருநாள் ஆறும்
நம்பிக்கை என்பது
சொல் அல்ல செயல் 
அக்கறையின் அன்னையே.

-பூமி.சாமி


Wednesday, June 25, 2025

இங்கு 
யாரும் உங்களை நிரூபிக்க 
சொல்லி கேட்பதில்லை,
நீங்களே உங்களை நிரூப்பிக்க முயல்கிறீர்கள்,
உங்கள் நிரூபித்தலை
யாரும் இங்கு கண்டுக் கொள்ள போவதில்லை
அப்படி கண்டுக்கொண்டாலும் 
நம்ப போவதில்லை,
உங்கள் வாழ்க்கையை
உங்களுக்காக வாழுங்கள்,
யாருக்கும் எதற்கும் உங்களை 
நிரூபிக்க வேண்டுய அவசியமில்லை.

-பூமி.சாமி.

Tuesday, June 24, 2025

மன்னிப்பு


என்னருகில் வந்து அமர தயக்கம் 
நான் இருக்கும் இடம் வர தயக்கம் 
என்னுடன் பயணப்பட தயக்கம் 
என் கண் பார்க்க தயக்கம் 
என்னிடம் பேச தயக்கம் 
இப்படி பல தயக்கங்களை காண்கிறேன் உன்னிடம் 
ஒவ்வொரு தயக்கமும்
என் மனதை நொருக்குகிறது
நான் உன் செக்க சிவந்த கரம் கோர்க்க நினைத்தது என்னவோ
என் துயரங்களின் வலிகளை கரைத்துக் கொள்ளத்தான் 
வேறு நோக்கம் ஒன்றும் இல்லை 
வேண்டும் எனில் மீண்டும் ஒரு மன்னிப்பை கண்ணீருடன்
உன் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.