என்னருகில் வந்து அமர தயக்கம்
நான் இருக்கும் இடம் வர தயக்கம்
என்னுடன் பயணப்பட தயக்கம்
என் கண் பார்க்க தயக்கம்
என்னிடம் பேச தயக்கம்
இப்படி பல தயக்கங்களை காண்கிறேன் உன்னிடம்
ஒவ்வொரு தயக்கமும்
என் மனதை நொருக்குகிறது
நான் உன் செக்க சிவந்த கரம் கோர்க்க நினைத்தது என்னவோ
என் துயரங்களின் வலிகளை கரைத்துக் கொள்ளத்தான்
வேறு நோக்கம் ஒன்றும் இல்லை
வேண்டும் எனில் மீண்டும் ஒரு மன்னிப்பை கண்ணீருடன்
உன் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.
No comments:
Post a Comment