என்னுடன் தனியாக இருந்ததால்
அவசர அவசரமாய் அங்கிருந்து அகன்றாய்
நான் தனியாக இருக்கும் வரை
அவ்விடம் வரவில்லை
ஆனால் என்மீது நம்பிக்கை
இருப்பதாய் சொன்னாய்
நான் நம்பவில்லை
அந்த தீராத காயம்
ஒருநாள் ஆறும்
நம்பிக்கை என்பது
சொல் அல்ல செயல்
அக்கறையின் அன்னையே.
-பூமி.சாமி