Monday, April 8, 2024

உறிஞ்சி வாழும்
ஒட்டுண்ணிகளிடம்
உணர்வை எதிர்பார்ப்பது
மூடத்தனம்.

பூமி.சாமி.

Saturday, March 30, 2024


ஒவ்வொரு செயலை செய்யும்போதும் 
ஒரு கணக்கு மனதில் ஓடுகிறது 

ஒன்றை அன்பால் செய்கையில் கணக்கு
காணாமல் போகிறது

ஒன்றை கணக்குடன் செய்கையில்
அன்பு காணாமல் போகிறது.

பூமி.சாமி.



உனக்கு தேவை எனும்போது 
வலிய எடுத்துக்கொள்கிறாய்
எனக்கு தேவை எனும் போது
அது உன் உள்ளங்கையில்
இருந்தாலும் மூடிக் கொள்கிறாய்.

பூமி.சாமி.


Tuesday, March 19, 2024



நீ அக்கறையின் அதிசய தேவதை
உன் அன்பு சொற்கள் மனமருந்து 
உன் புன்னகை துன்பத்தை துடைத்தெறியம் மழை
உனக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது
இவ்வளவு நேரம் அக்கறை காட்ட
உன் நிம்மதியை இழந்து
அடுத்தவருக்கு நிம்மதியை கொடுக்கும் அட்சயப் பாத்திரம் 

நேத்ராவை பெற்றெடுத்த நேத்ரம்
எங்கள் சுமைகளை தாங்கி
கவலைகளை கரைத்துவிடும் கடல்
உன்னை அனைவருக்கும் பிடிக்க உன் சிரிப்பொன்றே போதும்.
வாழ்க வளமுடன் (ஹனி)தா.










Monday, March 18, 2024

என்னுடைய சுமையை
நீங்கள் சுமக்க வேண்டாம்
என்னுடைய சோகங்களில்
பங்கேற்க வேண்டாம்
என்னுடைய கஷ்ட நேரங்களில்
கூட இருக்க வேண்டாம்
நான் உடலாலும் மனதாலும்
அடிப்பட்டு வரும் நேரங்களில்
நான் உன்னோடு இருக்கிறேன்
என்று கண்ணால் உணர்த்துங்கள்
அதுபோதும் எனக்கு.




Thursday, March 14, 2024

கிடைக்கும் இடத்தில்
பெற மனமில்லை
கிடைக்கா இடத்தில்
யாசித்து காயப்படுகிறோம்,
அன்பு.

பூமி.சாமி.

Tuesday, March 12, 2024

படித்ததில் பிடித்தது

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். சமாதானம் செய்யுங்கள்.

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

படித்ததில் பிடித்தது..!