Monday, January 8, 2024

படித்ததில் பிடித்த கவிதை

விலகிச் செல்ல நினைப்பவர்களை 
விடாமல் பின்தொடராதே
வேண்டாமென மறுதலிப்பவர்களை
வலியச்சென்று அழைத்து வராதே
பாதி வழியில் தொலைபவர்களை
கண்ணீருடன் தேடியலையாதே

அவர்கள் 
செல்லட்டும் 

சிலர் 
உன் வாழ்விற்குள்
வருவதுதான்
வரமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்

சமயங்களில்
சிலர் 
உன் வாழ்விலிருந்து
விலகிச்செல்வது கூட 
ஓர் ஆசிர்வாதமே

ஆதலால் 
விலகிச் செல்ல நினைப்பவர்களை 
வேண்டாமென மறுதலிப்பவர்களை
பாதி வழியில் தொலைபவர்களை
அப்படியே
விட்டுவிடு 

அவர்கள் 
செல்லட்டும்
இனி ஒருபோதும் மனம் மாறி
திரும்பவியலா பாதைகள் 
வழியே

-ரிஸ்கா முக்தார்-

வாட்சப் உரையாடல்

பல வார்த்தைகளை 
விற்று
ஒரு எமோஜி ஐ வாங்குகிறேன்.

பூமி.சாமி.

Sunday, January 7, 2024

புத்தகத்துடன் ஐன்னல் ஓரமாக
அமர்கிறேன்

"கா கா" என்ற காகத்தின் கரைதல் 
தொந்தரவாக

ஐன்னலை மூடிவிட்டேன் 

மீண்டும் தொந்தரவாக கரைதல்

பிறகு ஜன்னலை திறந்துவிட்டு
புத்தகத்தை மூடிவிட்டேன்

கரைதலில் கரைதல்தான்
கற்றல் என்பதை அறிந்து கொண்டேன்.

பூமி.சாமி.

Friday, January 5, 2024

நாம் வாழ்த்து சொல்லி
பிறர் நன்றாக வாழ்ந்து விடுவார்களோ
என்று அஞ்சியே 
பலர் வாழ்த்து
சொல்வதில்லை பிறர்க்கு.

பூமி.சாமி.

Sunday, December 31, 2023

                    HAPPY NEW YEAR
                                 TO 
                                YOU
                                   &
                    YOUR FAMILY 💐💐💐.

                                 By
                        Dr.R.Rengasamy.


படித்ததில் பிடித்த கவிதை

அவர்கள் 
அப்படித்தான் 

தேவை தீர்ந்ததும்
அழுக்கு ஆடைகளைக் களைவதுபோல 
உன்னையும் 
களைந்து செல்ல 
அவர்களுக்கு 
அப்படியொன்றும் சிரமமாய் இருக்காது 

உன் இடத்திற்கு இன்னொருவரை கொண்டு வருவதும்
உனக்கானப் பிரியங்களை பிறிதொருவருக்கு பங்கிடுவதும்
உனக்கேயான உரிமைகளை உனக்கில்லையென மறுப்பதும்
அவர்களால் 
இயன்ற காரியம்தான்

அவர்கள் 
அப்படித்தான்
எல்லாவற்றுக்கும் 
ஒரு மாற்றீடு 
வைத்தே இருக்கிறார்கள்

பின்னும்
நீதான் 
உடைந்த கண்ணாடிச்சில்லுகளைப் சேகரித்துக்கொண்டிருக்கிறாய்
எப்படியும் ஒட்ட வைத்திடலாமென 

வேண்டாம் விடு
உடைத்து உடைத்து ஒட்ட வைத்திட்டப் பொருள்களால்
வீடே அலங்கோலமாகி விட்டது
பார்

-ரிஸ்கா முக்தார்-

Tuesday, December 26, 2023

காயங்களையாவது குறைக்கலாம்...

நீங்கள் என்னை இறுகப்பற்ற வேண்டாம்

இலகுவாகவே பற்றுங்கள்
உண்மையாக பற்றுங்கள்
உணர்வால் பற்றுங்கள்
சுயமரியாதைவுடன் பற்றுங்கள்
சுதந்திரமாய் பற்றுங்கள்

 பிடித்தால் சேர்ந்து பயணிக்கலாம் 

விருப்பம் இல்லையெனில்
பிரிந்து நடக்கலாம் 
எனவே 

இலகுவாய் பற்றுங்கள் என்னை.

பூமி.சாமி.