Sunday, January 7, 2024

புத்தகத்துடன் ஐன்னல் ஓரமாக
அமர்கிறேன்

"கா கா" என்ற காகத்தின் கரைதல் 
தொந்தரவாக

ஐன்னலை மூடிவிட்டேன் 

மீண்டும் தொந்தரவாக கரைதல்

பிறகு ஜன்னலை திறந்துவிட்டு
புத்தகத்தை மூடிவிட்டேன்

கரைதலில் கரைதல்தான்
கற்றல் என்பதை அறிந்து கொண்டேன்.

பூமி.சாமி.

No comments:

Post a Comment