Wednesday, January 10, 2024

நீ பகிரவில்லை என்றாலும்
உன் வலியை
சுமக்கிறேன்

நீ வாங்க வில்லை என்றாலும்
என் ஆறுதலை 
உன்னிடம் கொடுக்கிறேன்

நீ சாயவில்லை என்றாலும்
என் தோள் கொடுக்கிறேன்

நீ சட்டை செய்யவில்லை என்றாலும்
உன் அருகிலேயே நிற்கிறேன் 

ஏன் என்றால் துயரங்களில்
உடனிருப்பதே அன்பென்று உணர்ந்திருக்கிறேன் நான்.

பூமி.சாமி.

No comments:

Post a Comment