உன் வலியை
சுமக்கிறேன்
நீ வாங்க வில்லை என்றாலும்
என் ஆறுதலை
உன்னிடம் கொடுக்கிறேன்
நீ சாயவில்லை என்றாலும்
என் தோள் கொடுக்கிறேன்
நீ சட்டை செய்யவில்லை என்றாலும்
உன் அருகிலேயே நிற்கிறேன்
ஏன் என்றால் துயரங்களில்
உடனிருப்பதே அன்பென்று உணர்ந்திருக்கிறேன் நான்.
பூமி.சாமி.