Friday, March 24, 2023

உண்மை!

சண்டாளி! உன் வசந்தத்தால் 
எனக்கு இலையுதிர் காலம்.

-கவிக்கோ அப்துல் ரகுமான்.

Thursday, March 23, 2023

அடிமேல் அடி
வலிமேல் வலி
மனம் கலங்கத்தான் செய்கிறது

துயரங்களை சொல்ல வார்த்தை இல்லாமல் மௌனம் ஆவதும்

துயரங்களை பகிரும் செவிகளை இழப்பதும்

துயர நேரங்களில் சாயும் தோள்களை
தொலைப்பதும்

ஆறுதல் கூறும் 
மனங்கள், மறுப்பதும்

துயரத்தின் மேல் துயரம்.


-பூமி.சாமி.
ஆயிரம் வார்த்தைகள்
தராத ஆறுதலை அளிப்பது
அதிகாலை அழுகை.

-பூமி.சாமி

Tuesday, March 21, 2023

மனிதர்கள் என்னை ஒதுக்கி
தள்ளினாலும்
 என்னோடு கூட்டு சேர்வதற்கு இங்கு சில குருவிகளும் மரங்களும் இருக்கின்றன
அவைகள் என்னை ஒருபொழுதும் புறந்தள்ளுவது இல்லை.

-பூமி.சாமி‌

Sunday, March 19, 2023

சில சமயங்களில், 
என் சொல்லிலும் செயலிலும்
ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது
மன எண்ணத்தில் உள்ள அழுக்கு.


பூமி.சாமி.

Thursday, March 16, 2023

When we get more distance between our words and actions, it's automatically exposed ourselves.

-Boomi.Saami

Tuesday, March 14, 2023

அன்று
அல்லிகளுக்கு இடையே நீந்தி
அக்கரையை அடைந்த நான்
இன்று 
நட்சத்திரங்களுக்கு
இடையே நீந்தி தொலைந்து போகிறேன்.

-பூமி.சாமி.