ஒரு நாள் கொண்டாடிவிட்டு ஓடி விடுவார்கள், கவனம்
ஒவ்வொரு நாளும் கொண்டாடப் பட வேண்டும்
அன்பின் அடையாளம் என்று சொல்லி அடக்கி வைக்கப் பார்ப்பார்கள், கவனம்
கருணையின் பிறப்பிடம் என்று சொல்லி கருணையில்லாமல் நடத்துவார்கள், கவனம்
எது நமக்கு தேவை இக்கணம்
ஒன்று சம உரிமை மற்றது சுதந்திரம்
எப்படி கிடைக்கும் இவைகள்
ஒரே வழி கல்வி
படி படி படி
படிப்படியாய் முன்னேறுவாய்
கடினமாக படி கவனமாக படி
அறிவு வந்து சேரும்
சிந்தனை சிறகடிக்கும்
பொருள் வந்து சேரும்
அதோடு சேர்ந்து உரிமையும் சுதந்திரமும் வந்து சேரும்
சுதந்திரம் என்பது கட்டற்று நடப்பதல்ல கவனமாய் நடப்பது , கவனத்தில் கொள்
பட்டம் உயர உயர பறக்க கையில் இருந்து நூல் கொஞ்ச கொஞ்சமாய் விடப்பட வேண்டும்
நூலருந்த பட்டங்கள் வீழும் என்பதை கவனத்தில் கொள்
பெண்கள் பற்றிய ஆண்களின் வார்த்தைகளில் ஆணாதிக்கம் கட்டாயம் இருக்கும்
என் வார்த்தையிலும் இருக்கலாம்
சிந்தித்து செயல்படு.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
-பூமி-சாமி.