யாரிடமும் சொல்லிவிடாமல் இருக்க
சிலவற்றை மனதில் ஆழப்புதைத்தேன் கனவில் கூட உளறிவிடாமல் இருக்க
சில ரகசியங்களை உயிரின் உள்ளுக்குள் வைத்தேன்
உயிரோடு இருக்கும் வரை பகிர்ந்து விடாமல் இருக்க
சில ரகசியங்களை ஆன்மாவில் அமிழ்த்தினேன் அடுத்த ஜென்மத்திற்கு எடுத்துச் செல்லலாம் என
ரகசியத்தின் ரகசிய இடங்களை இக்கவிதையால் கவிழ்த்து வைக்கிறேன் யாருக்கும் தெரியாமல் இருக்க.
-சாமி.