" சாப்பிட்டாயா"
என்று நான் அனுப்பும் குறுஞ்செய்தி வெட்டி வேலை என்று நீ நினைக்கக் கூடும்
அது என் அன்பின் வெளிப்பாடு
உணர்வின் உந்துதல்
உறவை உறுதிப்படுத்துதல்
வேலை கிடையே வரும் உன் நினைவின் செயல்பாடு
உன் மீதான அக்கறையின் அத்தாட்சி
நன்றி நவிழ்தல்
உன்னோடு நான் என்றும் இருப்பேன் என்பதன் கூப்பாடு
இதுபோல் அர்த்தமில்லாத வார்த்தைகளால் தான் வாழ்க்கை அர்த்தம் பெறுகிறது என்பதை நீ அறிவாயா.
-சாமி.