எனக்கு புன்னகையை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு பன்னீர் ரோசா
அன்பை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு அன்றில் பறவை
நன்றியை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு நாய்
பகிர்தலை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு காகம்
காத்திருத்தலை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு கொக்கு
பொறுமையை கற்றுக்கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு ஆமை
இவையாவும் கற்றுக்கொள்ள முடியாத நான், நானே சொல்லிக் கொள்கிறேன் நான் ஆறறிவு என்றும் அவைகள் ஐந்தறிவு என்றும்.
-சாமி.