Monday, November 29, 2021

இருள்

உலகின் மறைக்கமுடியாத உண்மை நீ
உலகில் உள்ளவைகளை மறைக்க முடிந்தவனும் நீ
இரைச்சல்களை விழுங்கி அமைதியை உமிழ்வாய்
கண் மறைத்து மனதை திறப்பாய்
பகல் பிரச்சினைகளை பேசி தீர்ப்பாய்
இன்பங்களில் சிரிக்க வைத்து ஒலி நிறைப்பாய்
துன்பங்களில் கண்ணீர் மறைப்பாய்
தூக்கம் நிறைப்பாய்
துக்கம் குறைப்பாய்
வலி குறைப்பாய்
மீண்டும் போரிட வல்லமை கொடுப்பாய்

காலையில் எங்கும் நீங்கிடும் நீ
 சிலர் மனங்களில் மட்டும் ஏன் நிரந்தரமானாய்.


-சாமி.

No comments:

Post a Comment