உலகில் உள்ளவைகளை மறைக்க முடிந்தவனும் நீ
இரைச்சல்களை விழுங்கி அமைதியை உமிழ்வாய்
கண் மறைத்து மனதை திறப்பாய்
பகல் பிரச்சினைகளை பேசி தீர்ப்பாய்
இன்பங்களில் சிரிக்க வைத்து ஒலி நிறைப்பாய்
துன்பங்களில் கண்ணீர் மறைப்பாய்
தூக்கம் நிறைப்பாய்
துக்கம் குறைப்பாய்
வலி குறைப்பாய்
மீண்டும் போரிட வல்லமை கொடுப்பாய்
காலையில் எங்கும் நீங்கிடும் நீ
சிலர் மனங்களில் மட்டும் ஏன் நிரந்தரமானாய்.
-சாமி.
No comments:
Post a Comment