Friday, September 17, 2021

யார் சொல்லியிருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும் 
நானே சொன்னாலும்
உன் புத்திக்கும்
பொது அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.

தந்தை பெரியார்.

Thursday, September 16, 2021

முன்னேற்றம்

முன்பெல்லாம் புறக்கணிப்பை முகசுழிப்பு மற்றும் வார்த்தைகள் மூலம் தெரிந்து கொண்ட நாம் இப்பொழுது         " Chat Texting" லேயே தெரிந்து கொள்வது தான் முன்னேற்றம்.

கடவுள்-நாம்

கடவுள் நம்மை மன்னிக்க வேண்டும்
ஆனால் நாம் யாரையும் மன்னிக்க தயாராக இல்லை,

கடவுள் நம்மிடம் கருணை காட்ட வேண்டும் ஆனால்
 நாம் யாரிடமும் கருணை காட்ட தயாராக இல்லை,

நாம் வேண்டும் அனைத்தையும் கடவுள் தரவேண்டும் ஆனால்
 நாம் யாருக்கும் எதையும் தர தயாராக இல்லை,

உண்மையில்,
கல்லாக இருக்கும் கடவுள் உயிரோடு இருக்கிறார்,
உயிரோடு இருக்கும் நாம் கல்லாக இருக்கிறோம்.

-சாமி.

Wednesday, September 15, 2021

current world

If you will be easily available to somebody
Definitely they will not realise your value and importance.

Tuesday, September 14, 2021

புறக்கணிப்பு

'புறக்கணிப்பு' என்பது மிகுந்த கொடுமையானது வலித்தரக்கூடியது,
இறைவனும் இயற்கையும் நம்மை எதர்க்காகவும் எந்நிலையிலும் புறக்கணிப்பதில்லை,
எனவே யாரையும் எதர்காகவும் புறக்கணிக்காதீர்கள்.

-சாமி.

பலித்தீர்ப்பு

பிறரை பலி தீர்ப்பதாய் நினைத்து
பலி தீர்த்துக் கொண்டேன் என் மனசாட்சியை,
காலத்திற்கும் அகல மறுக்கிறது அப்பலி.

-சாமி.

நன்றி

என் நண்பன் ஒரு உதவி செய்தபொழுது
சொன்னான், நன்றி மறவாதே நண்பா என்று,
இப்பொழுது அந்நண்பனையே மறந்து போனேன் நன்றி எல்லாம் எம்மாத்திரம்.

-சாமி.