Saturday, December 28, 2019

Best IAS Websites for UPSC Civil Services Exam Online Preparation

Best IAS Websites for UPSC Civil Services Exam Online Preparation

1. *insightsonindia.com*
2. *clearias.com*
3. *Mrunal.org*
4. *gktoday.in*
5. *currentaffairsonly.com*
6. *cleariasexam.com*
7. *IASexamportal.com*
8. *visionias.wordpress.com*
9. *swapsushias.blogspot.in*
10. *iaspassion.com*
11. *iasscore.in*
12. *iaskracker.com*
13. *jagranjosh.com*
14. *UPSCguide.com*
15. *CivilServiceIndia.com*
16. *ias100.in*
17. *jeywin.com*
18. *civilsdaily.com*
19. *onlinegk.com*
20. *iasaspirants.com*
21. *iaspaper.in*
22. *iasexams.com*
23. *tcyonline.com*
24. *testfunda.com*
25. *byjusclasses.com*

IAS Forum Websites
1. *iasforums.com*
2. *upscforums.com*
3. *forumias.com*
4. *indianofficer.com*
5. *interviewprep4ias.com*
6. *upscdiscussions.com*

IAS Toppers Blogs
1. *thesupermanreturns.wordpress.com*
2. *rijubafna.com*
3. *youtube.com/user/unacademy*
4. *lohitmatani.wordpress.com*
5. *iasdream.com*
6. *jhinujha.wordpress.com*

Useful Government Websites For Civil Service Preparation *
1. *ncert.nic.in* – Download NCERT Texts as PDF.
2. *nios.ac.in* – Download NIOS Online Materials.
3. *egyankosh.ac.in* – Download IGNOU Books.
4. *yojana.gov.in* – Download Yojana and Kurukshetra Magazines.
5. *upsc.gov.in* – Official Website of UPSC.
6. *pib.nic.in* – Press Information Bureau Website, for government updates.
7. *prsindia.org* – PRS Website for tracking bills in Parliament.
8. *idsa.in* – IDSA website for Defense and Foreign relations.
9. *gatewayhouse.in* – Indian Council for Global relations.
10. *envfor.nic.in* – Ministry of Environment and Forests.
11. *mea.gov.in* – Ministry of External Affairs.
12. *indiabudget.nic.in* – Download Budget and Economic Survey.
13. *ptinews.com* – Press Trust of India.
14. *pdgroup.upkar.in* – Pratiyogita Darpan Magazine.
15. *ibef.org* – India Brand Equity Foundation for economy and business.
16. *vikaspedia.in* – Knowledge initiative by InDG.
17. *makeinindia.com* – Make in India initiative for manufacturing related info.

Saturday, December 14, 2019

கொம்பு எனும் வம்பு

ஒவ்வொரு மனிதனின் மனமும் கொம்பு எனும் அன்பை தேடும் கொடியாகவே உள்ளது, ஆனால் இருக்கும் கொம்பின் உன்னதம் புரியாமல், புது கொம்பை தேடுவதிலேயே உள்ளது, ஆனால் புது கொம்பு பெரும்பாலும் வம்பாகவே உள்ளது. By Sarikavi

Thursday, December 12, 2019

அடுத்தவர் துன்பத்தில் மகிழ்ச்சி

என்ன பிரச்சினை ஏன் கவலையுடன்
இருக்கிறீர்கள் என்றார் உறவினர், ஏதோ துன்பத்தை பகிர்ந்து கொள்ள என்று நினைத்து விசயத்தை சொன்னேன்,  சொன்னப்பின்புதான் தெரிந்தது, அவர் மகிழ்வு கொள்ள என்று.
 By. Sarikavi

நன்றி

தேவைகள் தீர்ந்தப்பின்னும் 
தேடுபவனே 
உண்மையானவன். 
By sarikavi

Monday, December 9, 2019

ஓஷோ வைரங்கள்

*ஓஷோ வைரங்கள்*

எந்த செயலையும் உணர்வின்றி செய்யாதே !

தவறு செய்வதே வளரும் வழி !

வாழ்வே இருக்கும் ஒரே கடவுள் !

உன் தனித்தன்மைப் படி வாழு !

எல்லாவற்றையும் கொண்டாடு !

இறப்பு என்பது வாழ்வின் உச்சக் கட்ட அனுபவமே !

நம்பிக்கையில் வாழாமல் - உணர்ந்து வாழு !

குழந்தையாக அல்ல, குழந்தை போல மாறு !

எதையும் அமுக்கி வைக்காதே !

தனி மனித சுதந்திரமே வளர்ச்சிக்கு வழி !

தன் உணர்வோடு அனுபவி !

தன் உணர்வோடு கணத்துக்குக் கணம் வாழ் !

#ஓஷோ

Sunday, December 8, 2019

"என்ன கற்றுக் கொண்டோம்?...**என்ன கற்றுக் கொடுக்கிறோம்?..."*

*வாழ்க்கையே திசை திருப்பிய ஜெயகாந்தனின் படைப்பில் ஒரு சின்ன பதிவு*

*"என்ன கற்றுக் கொண்டோம்?...*
*என்ன கற்றுக் கொடுக்கிறோம்?..."*

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை...

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். 

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். 

ஒரு சமயம், 
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். 

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். 

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். 

அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். 

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். 

ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். 

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான்.  அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். 

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். 

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. 

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். 

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான்...  நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், *"அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!"* என கதறி அழுகிறான்.

ஆகவே நாம், *நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!*

நல்லதையே கற்றுத் தருவோம்...

மிக அருமையான பதிவு..👍👌👌
ஜெயகாந்தனின் படைப்பு

Friday, November 29, 2019

எது மகிழ்ச்சி

#ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்,ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், 

அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."

கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்......

அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
" என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்லை.யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.....

இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழுது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது.

வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது.

கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்.நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் எனக்கு சந்தோஷமளிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி அவர்தம் மகிழ நானும் அதிகமகிழ்வுற்றேன்.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.
மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்."

இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது
நீ
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்பதில் இல்லை...
உன்னால் அடுத்தவர்
எவ்வளவு மகிழ்ச்சி ஆகின்றார்க்ள்
என்பதிலேயே இருக்கிறது...
மகிழ்ச்சி என்பது
போய் சேரும் இடம் அல்ல
அது
ஒரு பயணம்...
மகிழ்ச்சி என்பது
எதிர்காலம் இல்லை
அது நிகழ்காலம்...
மகிழ்ச்சி என்பது
ஏற்றுக்கொள்வது அல்ல
அது
ஒரு முடிவு...
நீ என்ன வைத்திருக்கிறாய்
என்பதில் இல்லை
மகிழ்ச்சி...
நீ
யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!

மகிழ வைத்து மகிழுங்கள்........